திறந்தநிலை மார்க்சியம் யாருக்கான மார்க்சியம்?-பகுதி-2

திறந்தநிலை மார்க்சியம் யாருக்கான மார்க்சியம்?-பகுதி-2

மூடப்படும் உலகத்துக்கு எதிராக தமிழில் மொழிபெயர்த்து என்.சி.பி.எச் வெளியீடுதிறந்தநிலை மார்க்சியம் என்கின்றனர்

17 பக்க எனது தேடல் நெடிய கட்டுரை முழுமையாக இங்கே வெளியிட முடியவில்லை இலக்கு 42 இணைய இதழில் முழுமையாக உள்ளன அவை பல  நமது முன்னோடிகளின் எழுத்துக்கள் முக்கியமாக நமது ஆசான் லெனின்.

அந்தப் பகுதியை நூல் வடிவில் PDF க்காக விரைவில் கொண்ரும் பொழுது பகிர்கிறேன் தோழர்களே...

பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும் லெனின் நூலிலிருந்து சிலபகுதிகள் கீழே:-

செயலில்-இயங்கியல் பொருள்முதல் வாதத்தை, அதாவது மார்க்சியத்தை முழுமையாக நிராகரித்தல்; வார்த்தையில் முடிவில்லாத சூழ்ச்சிகள், கேள்வியின் சாராம்சத்தைத் தவிர்க்கும் முயற்சிகள், அவற்றின் பின்வாங்கலை மறைத்தல், பொதுவாக பொருள்முதல்வாதத்திற்குப் பதிலாக சில பொருள்முதல்வாதிகள் அல்லது வேறு சிலரை வைப்பது, மற்றும் மார்க்சின் பொருள்முதல் வாதப் பிரகடனங்களை நேரடியாக ஆய்வு செய்ய உறுதியான மறுப்பு …. இது வழக்கமான தத்துவத் திருத்தல்வாதம், ஏனென்றால் மார்க்சியத்தின்அடிப்படைக்கருத்துக்களிலிருந்து விலகியதன் மூலமும்……

இந்த வாதங்கள் புதியவையா என்பதை சோதிப்பதற்காக, அவை உண்மையில் "கான்டியனிசத்தில் மூழ்கிய" பிஷப் ஜார்ஜ் பெர்க்லியின் பணி, 1710 இல் வெளியிடப்பட்டதுகான்டியனிசத்தால் பொருள்முதல்வாதத்தை திரித்தல்! Machians "புதிய" கண்டுபிடிப்புகள் அடிப்படை தத்துவ போக்குகளின் வரலாறு பற்றிய வியக்கத்தக்க அறியாமையின் விளைவாகும்..

மேலும் பொருள்முதல்வாதிகளுக்கு இயற்கை முதன்மையானது மற்றும் ஆவி இரண்டாம் நிலை, இலட்சியவாதிகளுக்கு தலைகீழ்நிலை. இந்த இரண்டு முகாம்களுக்கு இடையில் எங்கெல்ஸ் ஹியூம் மற்றும் கான்ட் ஆகியோரின் ஆதரவாளர்களை வைக்கிறார், அவர்கள் உலகத்தை அறியும் சாத்தியத்தை மறுக்கிறார்கள், அல்லது குறைந்தபட்சம் அறிவார்கள். அதை முழுமையாக, மேலும் அவர்களை அஞ்ஞானவாதிகள் என்று அழைக்கிறார். அவரது Ludwig Feuerbach எங்கெல்ஸ் இந்த வார்த்தையை ஹியூமின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். ஆனால், "வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தில்" என்ற கட்டுரையில், ஏங்கெல்ஸ்,"நியோ-காண்டியன் அஞ்ஞானவாதி"-யின் நிலைப் பாட்டை வெளிப்படையாகப் பேசுகிறார்,

 மார்க்சிய முகாமுக்குள்ளே எழுகிற மார்க்சியமல்லாதகுரல்கள்சமூகவியல்என்பது சாராம்சத்தில்‌, சமூகத்தில்உள்ள மனிதனைப்பற்றிய அறிவியல்ரீதியான புறநிலைஆய்வாகும்‌.சமூக நிறுவனங்கள்குறித்தும்சமூக இயக்கப்போக்குகள்குறித்தும்உள்ள ஆய்வாகும்‌, சமூகத்தின்இருப்பிற்கான சாத்தியம்குறித்த பிரச்சனையை ஆய்கிறது. சமூகம்இயங்கும்விதம்குறித்தும்ஆய்கிறது. 

மார்க்சியம்என்ற சமூகவியலின்தொடக்கத்தை, மார்க்சின்கல்லறையருகே ஏங்கெல்ஸ்ஆற்றிய உரையிலிருந்து  காணலாம்‌.உயிரின இயற்கையின்வளர்ச்சி விதிகளை டார்வின்கண்டு பிடித்ததைப்போல, மனித வரலாற்றின்வளர்ச்சி விதிகளை மார்க்ஸ்கண்டுபிடித்தார்‌.”

மார்க்சியம்வெறும்சமூகவியலாக மட்டும்இல்லாமல்அது நடைமுறைக்கான வழி காட்டியாகவும்இருக்கிறது. அதாவது சமூகவியற்கோட்பாடுகள்அதனதன்அடிப்படையில்சமூகத்தை வளர்க்க மட்டுமே செய்தன. ஆனால்மார்க்சியம்இயக்கவியல் வரலாற்றுப்பொருள் முதல்வாத அடிப்படையில்சமூகத்தை விளக்குவதோடு மட்டுமன்றி, சமூகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளைப்பருண்மையாகக்கண்டது.

மார்க்சியத்திறனாய்வு என்பது சமூகவியல்திறனாய்வை உள்ளடக்கியது; ஆனால்சமூகவியல்திறனாய்வு மட்டும்அல்ல, வர்க்கங்களின்இருத்தல்‌, வர்க்கப்போராட்டங்களின்மூலம்வரலாறு வளர்தல்‌, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்ஆகிய சமூக அரசியல்நிலைபாடுகள்‌, உற்பத்தி முறையே சமூக அடித்தளம்என்ற பொருளியல்நிலைபாடு, ஆகியவற்றை வலியுறுத்துவதன்மூலம்இது அறிவியல்வகைப்பட்டதாகிறது. அதேநேரத்தில்இது சமூவியலிலிருந்து வேறு வகைப்பட்டதாகிறது, இக்கருத்தை லெனினின்பின்வரும்கூற்றால்உறுதிப்படுத்திக்கொள்ளலாம்‌.

மார்க்ஸ்தான்சமூகவியலை அறிவியல்அடித்தளத்தில்முதன்முதலில்நிறுத்தினார்‌- உற்பத்தி வரவுகளின்மொத்தத்தொகையாக சமூகத்தின்பொருளாதார உருவாக்கம்என்ற கருத்தோட்டத்தை உறுதிப்படுத்தல்‌, இத்தகைய உருவாக்கங்களின்வளர்ச்சியானது இயல்பான வரலாற்றின்இயக்கப்போக்காக உள்ளது என்ற உண்மையை உறுதிப்படுத்தல்ஆகிய வற்றின்மூலமாக மார்க்ஸ்இவ்வாறு செய்தார்‌” எனவே சமூகவியலின்குறைகளைக்களைந்து நிறைகளை வளர்த்தெடுத்தது மார்க்சிய அணுகுமுறையாகும்‌.

மார்க்சியஅணுகுமுறையை இன்று பல வழிகளில்விமர்சிக்கின்றனர்‌. அது ஒரு குறிப்பிட்ட காலத்தில்நிகழ்வின்தத்துவம்‌; அது ஒருகுறிப்பிட்ட நாட்டின்ஒரு குறிப்பிட்ட சூழலுக்கேற்ப வளர்ந்த தத்துவம்‌; அதற்கு ௨லகக்கண்ணோட்டம்கிடையாது; அது இன்றைக்குக்காலாவதியாகிவிட்டது. மார்க்சியம்என்பது எதையும்வரையறுக்கப்பட்டதாகவே (fixed) காண்கிறது; அது மூடுண்ட, வளர்ச்சி மறுக்கப்பட்ட தத்துவம்‌; அதுஇன்றைய புதுயுகத்துக்கு உரியபெருந்தத்துவமல்ல; அதன்அடிப்படைக்கூறான பொருள்முதல்வாதம்இன்றைக்குப்பொருந்தாது; மார்க்சியம்நமக்குப்போதவில்லை. எனவே அதைக்கடந்த தத்துவத்தைத்தேட வேண்டும்‌; மார்க்சியம்அனைத்தையும்பொருளாதாரவாதமாகச்சுருக்கிப்பார்க்கிறது. அது மனிதவளர்ச்சிக்கே முரணானதாக விளங்குகிறது. இத்தகைய பல்வேறு விதமான கருத்துக்கள்மார்க்சியத்தை நோக்கி எழுப்பப்படுகின்றன. இவற்றுக்குப்பதில்கூறினால்தான்‌, மார்க்சியம்என்பதை ஒரு முறையியலாக--ஓர்அணுகுமுறையாக நம்ப இயலும்‌. மார்க்சிய அணுகு முறையின்நம்பகத்தன்மையை நிலை நாட்டினால்தான்‌, அதன்வழி நின்று சமூகவியல்அவற்றின்பிரச்சனைகளையும்நாம்மதிப்பிட இயலும்‌. 

மார்க்சியம்‌- ஒருகு றிப்பிட்ட. வர்க்கத்திய தத்துவமா?

மார்க்சியம்‌, பாட்டாளி வர்க்கத்துக்கான தத்துவம்அதாவது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திய தத்துவமாகும்‌. அப்படியாயின்அதை எப்படி அனைத்துந்தழுவிய அணுகுமுறை ஆக ஏற்றுக்கொள்ள இயலும்‌? எனவே மார்க்சியத்தை ஒரு பொதுவான அணுகுமுறையாக ஏற்றக்கொள்ளல்இயலாது. இப்படிச்சிலர்கருதுகின்றனர்இதற்கான விவாதத்திற்குள்நாம்நுழையும்முன்தத்துவம்என்றால்என்ன என்பது குறித்து இரண்டொரு வார்த்தைகள்கூறியாக வேண்டும்‌. தத்துவம்என்றால்அதுயாருக்கும்எளிதில்விளங்காத விளங்கக்கூடாத கருத்துக்களின்சேர்க்கை என்பதே இன்றும்பலரின்கருத்தாக உள்ளது. அந்த அளவிற்குத்தத்துவம்குறித்து தவறான கருத்து நிலவுகிறது. தத்துவம்என்பது உலகக்கண்ணோட்டமாகும்‌. அதாவது உலகத்தைப்பற்றி அறிந்து கொள்கின்ற முயற்சியாகும்மனித சமூகத்தையும்அதன்பங்கையும்‌, இயற்கைக்கும்மனிதனுக்கும்உள்ள உறவையும்பற்றி அறிந்து கொள்கின்ற முயற்சியாகும்‌. எல்லோரும்ஏதோ ஒரு வழியில்உலகத்தை விளங்கிக்கொண்டு இருக்கின்றனர்‌ . எனவே ஒவ்வொருவரும்ஏதோ ஒரு தத்துவத்தைக்கொண்டிருக்கிறோம்‌. தாம்கொண்டுள்ள தத்துவம்குறித்தே அறியாமலும்அல்லது அது குறித்துப்பிறருடன்விவாதிக்காமலும்இருக்கலாம்‌; அன்றி, தெரிந்துகொண்டும்பிறருடன்விவாதித்தும்இருக்கலாம்‌. எனவே அனைத்து மனிதர்களும்ஏதாவது ஒரு தத்துவச்செல்வாக்கில்‌. உள்ளனர்என்பது வெளிப்படை . அந்தத்தத்துவமே அவர்கள்இயல்பில்ஊறிவிடுகிறது; ஒன்றிவிடுகிறது. அதாவது, அவர்கள்வாழ்க்கையாகவே மாறுகிறது. எளிய கிராமப்புறமக்கள்‌, எவ்வளவுதான் உருண்டு பிறண்டாலும் உடலில் ஒட்டுவதுதான் ஒட்டும் எல்லாம் ஆண்டவன்அளந்து வச்சதுதான்‌”' என்று கூறும்போது சமயவாதிகளின்விதிக்கோட்பாட்டை அவர்கள்ஜனரஞ்சகமாகக்குறிப்பிட்டு விடுகின்றனர்‌. அக்கூற்று, ஒருதத்துவத்தின்பிரதிபலிப்பு அல்லவா? இத்தகைய தத்துவங்களும்தனிப்பட்ட மனிதர்களின்அல்லது தத்துவ இயலர்களின்மூளைகளில்மட்டும்உதித்த தனித்த கருத்துக்களல்ல. பொதுவான அம்சத்தில்பார்த்தால்‌, இத்தகைய கருத்துக்களுக்கு ஒருசமூக அடித்தளத்தைக்காண இயலும்‌. அது அக்காலத்தில்ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவின்சமூக நடவடிக்கைகளையும் சமூகஉறவுகளையும்ஏதேனும்ஒருவிதத்தில்வெளிப்படுத்துவதாக இருப்பதைக்காணலாம்‌. எனவே அவை, தத்துவ அறிஞர்களின்மூளைகளிலிருந்து திடீரென உதித்து வந்து விடுவதல்ல, ஆயினும்அத்தகைய கருத்துக்களை உருவாக்கல்‌, அவற்றைக்குறிப்பிட்ட வடிவத்தில்வெளியிடல்போன்றவை அந்தத்தத்துவ அறிஞர்களின்தனித்தன்மையைப்பொறுத்ததாகும்‌. எனவே எந்தத்தத்துவமும்ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தோடுதான்தன்னை இணைத்துக்கொண்டிருக்கும்‌, இங்கே வர்க்கம்எனும்சொல்குறித்து சில சொற்கள்கூறவேண்டி யுள்ளது. வர்க்கம்என்பதை மார்க்சிய மூலச்சொல்லாக்கம்என்றெண்ணி மார்க்சிய அணுகுமுறை எதிர்ப்பாளர்கள்வர்க்கம்என்பதையே மறுப்பார்கள்‌. முதலாளியசமூகவியலர்கள்வர்க்கங்களின்இருத்தலைக்கூறியள்ளதை இதற்குமுன்கண்டோம்‌.ஆயின்மார்க்சிய அணுகுமுறை எதிர்ப்பாளர்கள்‌, வர்க்கம்என்பதை மார்க்ஸ்ண்டுபிடித்ததாக எண்ணிக்கொண்டு எதிர்ப்பர்‌. இது அவர்களின்சமூக வியல்அறிவின்மையைக்காட்டுகிறது. அதேநேரத்தில் மார்க்சிய இலக்கிய முகாம்களில்‌ : வர்க்கம்என்ற சொல்‌, செழுமையான அர்த்தத்திலிருந்து பிறழ்ந்து வறட்டுத்தனமாகவும்பரந்த அறிவியல்விளக்கத்திலிருந்து மாறுபட்டு குறுகலானதாகவும்‌, மார்க்சிய மூலஅறிவு எதுவுமின்றியும்அதற்கான குறைந்த பட்ச தேடல்முயற்சி இன்றியும்வெறும்வாய்ப்பாட்டுச்சூத்திரமாகவும்பயன்படுத்திக்கொண்டதும் ‌- கொண்டுவருவதும், இத்தகைய அறிவியல்ஆழமான சொல்லாட்சிக்குரிய பயன்பாட்டுத்தன்மை மதிப்பிழந்து போனது காரணம்எனலாம்‌. எனவே சமூகம்வர்க்கங்களாகப்பிரிந்துள்ள நேரத்தில்சமூகத்தில்உள்ள பல்வேறு தத்துவங்களும்எல்லா நேரங்களிலும்சமூகத்தின்பல்வேறு நோக்கங்களை வெளிப்படுத்துவனவாகவே இருக்கும்‌. எனவே தத்துவம்என்பது எப்போதும்வர்க்கத்தத்துவமாகவே இருக்கும்எனலாம்‌. சில தத்துவ அறிஞர்கள்இதை மறுத்துரைக்கக்கூடும்‌; தத்துவத்தை வர்க்கம்கடந்த ஒன்றாக எண்ணக்கூடும்‌. ஆனால்உண்மை அதுவல்ல. ஒவ்வொரு கருத்திற்குப்பின்னால்ஒருவர்க்கத்தின்முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றார் லெனின்கருத்தை இவ்விடத்தில்நினைவு கூர்தல்சரியாகவிருக்கும்‌. எனவே அனைத்துத்தத்துவங்களைப்போன்று,மார்க்சியமூம்ஒருகுறிப்பிட்டவர்க்கத்திய தத்துவமாகும்‌. ஆயின்அதே நேரத்தில்இது ஒடுக்கப்பட்ட மக்கள்அனைவரின்தத்துவமாகும்‌. அது எப்படி? இதற்கு மார்க்சியத்தின்தேவையை நாம்காணவேண்டும்‌. இது குறித்து லெனின்பின்வருமாறுகூறுகிறார்‌.மார்க்ஸ்‌-ஏங்கெல்ஸ்ஆகியோர்தொழிலாளர் களுக்கு ஆற்றிய சேவையைப்பின்வரும்சொற்களில்கூறலாம்‌. உழைக்கும்வர்க்கம்தங்களை அறிந்து கொள்ளவும்உணர்ந்து கொள்ளவும்கற்றுக்கொடுத்தனர்‌. மேலும்அவர்கள்கனவுகளுக்குப்பதிலாக அறிவியலை வைத்தனர்‌”  தொழிலாளர்வர்க்கம்தம்மை அறிந்து கொள்ளவும்உணர்ந்து கொள்ளவும்வேண்டிய அவசியம்என்ன? கனவுகளுக்கு மாற்றாக அறிவியலை வைக்க வேண்டிய அவசியம்மார்க்சிய மூலவர்களுக்கு ஏன்நேரிட்டது? இவற்றைத்தெரிந்து கொண்டால்தான்ஒருகுறிப்பிட்ட வர்க்கத்திய தத்துவமாக உள்ள மார்க்சியம்‌, ஒடுக்கப்பட்ட மக்களின்தத்துவமாகப்பரவும்தன்மையைக்காண இயலும்‌. அதாவது மார்க்சியத்தின்தனித்தன்மையையும்அனைத்தும்தழுவிய தன்மையையும்அறியஇயலும்‌. மேற்கு ஐரோப்பிய நாடுகளில்உறுதியாக நிலைத்த முதலாளியம்‌, கோடிக்கணக்கான விவசாயிகளைத்தொழிலாளர்களாக மாற்றியது.பொறுக்கவியலாதவறுமையையும்உழைப்புச்சுமையையும்அவர்கள்தோள்மேல்சுமத்திற்று, இதன்விளைவாகத்தொழிலாளர்கள்சினமுற்றனர்‌. தம்இழிநிலைக்குப்புதியஇயந்திரங்கள்வருகையே காரணம்என எண்ணி, இயந்திரங்களை உடைத்தெறியும்போராட்டத்தில்இறங்கினர்‌. இந்தப்போராட்டங்கள்தோல்வி அடைந்தன. தோல்வியே வெற்றிக்கு ஆசான்எனும்மொழிக்கு ஏற்ப இவை தொழிலாளர்க்குப்பல படிப்பினைகள்கொடுத்தன, இங்கி லாந்து தொழிலாளரின்சார்டியஇயக்கம் (Chartist Movment), பிரெஞ்சுத்தொழிலாளர்எழுச்சி, (1881-1888), ஜெர்மன்தொழி லாளர்எழுச்சி (1844) ஆகியவை போன்ற எழுச்சிகளும்மாபெரும்வேலை நிறுத்தங்களும்சில நிலைமைகளை வெளிப்படுத்தின.ஒன்று,முதலாளியத்திற்கு எதீராகப்பாட்டாளி வர்க்கம்உலக அரங்கில்தோன்றி வலுப்பெறுகிறது. இரண்டு, இந்த வர்க்கம்முதலாளியச்சுரண்டலை மட்டுமின்றி சகலவிதமான சுரண்டல்களையும்முற்றாக ஒழிக்கும்பணியை மேற்கொள்ள வேண்டும்என்பதாகும்‌. மூன்று, இருக்கின்ற அரசு அமைப்பை தகர்த்து விட்டுப்புதிய அரசு அமைப்பை உருவாக்க வேண்டும்என்பதாகும்‌, இவை போன்ற பதிய நிலமைகள்தோற்றுவித்த அடிப்படையான மாற்றத்தைக்கொண்டுவர வேண்டுமானால்‌, அதற்குரிய தத்துவம்தேவைப்படுகிறது. புரட்கிகரமான தத்துவம்இல்லையெனில்புரட்சிகர நடைமுறை இல்லை என்பர்‌, ஆயினும்அத்தகைய தத்துவம்சமூக நடைமுறையின்தேவையிலிருந்து எழுவது ஆகும்‌. எனவே அந்நேரத்தில்‌, அதற்கு முந்தையகால தத்துவஅறிவு, இயற்கை அறிவியல்‌, சமூக அறிவியல்ஆகியவற்றின்வளர்ச்சியையம்முற்போக்கு அம்சங்களையும்கிரகித்துக்கொண்டு இயங்கியல்பொருள்முதல்வாதம்எனும்முரணற்ற அறிவியல்தளத்தின்மேலே, காரல்மாக்ஸ்‌ (1819-1882), பிரடெரிக்ஏங்கெல்ஸ்‌ (1820-1895) ஆகியோர்தம்சிந்தனையை எழுப்பினர்‌. இதுவே மார்க்சியமாக விரிகிறது. பழமையினின்று எவற்றை உட்கிரகித்து இயங்கியல்பொருள்முதல்வாதத்தின்அடிப்படையில்மார்க்சியத்தை உருவாக்கினர்என்பதைப்பின்னால்விரிவாகக்காண்போம்‌. இவ்வாறு தன்னெழுச்சிக்காலத்திலிருந்து விலகி அமைப்புக்காலமாக விரிவடைந்த தன்மையைப்பாட்டாளி வர்க்கத்தின்அறிவு ஆழமடையும்போக்கோடு தொடர்புபடுத்திப்பின்வருமாறு மாசேதுங்குநிப்பிடுவார்‌. பாட்டாளி வர்க்கம்தன்நடைமுறையின்முதல்கட்டத்தில்இயற்திரங்களை உடைப்பதும்தானாகவே எழுந்து போராடுவதுமான காலகட்டத்தில்இருந்தது. அப்போது முதலாளியச்சமூகத்தைப்பற்றிய அதன்அறிவு, புலன்அறிவாக இருந்தது. முதலாளியத்தின்பல்வேறு நிகழ்ச்சிகளுடைய தனித்தனி அம்சங்களை யும்புறஉறவுகளையுமே அது அறிந்திருந்தது. அந்தச்சமயத்தில்பாட்டாளி வர்க்கம்தன்னுள்ஒரு வர்க்கமாகஇருந்தது, உணர்வு பூர்வமான ஸ்தாபன மைப்புடன்பொருளாதாரப்போராட்டமும்அரசியல்போராட்டமும்நடத்தும்கட்டத்தைத்தன நடைமுறை மூலமும்மார்க்சும்ஏங்கெல்கம்அறிவியல்அளவில்தொகுத்து மார்க்சியமாக உருவாக்கிய நீண்டகாலப்போராட்ட அனுபவம்மூலமும்‌, பாட்டாளி வர்க்கம்முதலாளித்தவச்சமூகத்தின்சாராம்சத்தையும்சமூக வர்க்ங்களுக்கு இடையிலான சுரண்டல்உறவுகளையும்தன்சரித்திர பூர்வமான பணியையும்புரிந்து கொள்ள முடிந்தது.” எனவே மார்க்சியம்ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திய தத்துவமா என்ற கேள்விக்கு ஆம்என்றே பதில்தரலாம்‌. அது பாட்டாளிவர்க்கத்தத்துவமாகும்‌. ஆயின்அது பாட்டாளி வர்க்க நலனுக்கான தத்துவம்மட்டும்தானா என்று கேட்டால்இல்லை என்றே பதில்தரலாம்‌. ஏனெனில்முதலாளியச்சமூக முரண்பாடுகள்முற்றி மோதல்காலகட்டம்உருவான பின்னால்பாட்டாளி வர்க்கத்தின்நலனோடு சுரண்டப்படும்வர்க்கங்கள்அனைத்தின்நலனும்இணைந்துள்ளது. பாட்டாளி வர்க்கத்தின்விடுதலையோடுதான்அனைத்து வர்க்கங்களின்விடுதலை கட்டுண்டுள்ளது இதை ஏங்கெல்ஸ்தெளிவாகக்குறிப்பிடுகின்றார்‌:சுரண்டப்பட்டும்ஒடுக்கப்பட்டும்வரும்வர்க்கம்‌ (பாட்டாளி வர்க்கம்‌) சுரண்டியும்ஒடுக்கியும்வரும்வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து)இனி தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டுமானால்சமுதாயம்அனைத்தையும்சுரண்டலில்இருந்தும்ஒடுக்குமுறையிலிருந்தும்என்றென்றைக்குமாய்விடுவித்தே ஆகவேண்டும்என்கிற இந்த அடிப்படைக்கருத்து...… மேலும்இதற்கு முந்தைய வரலாற்று முற்போக்கு இயக்கங்களுக்கும்பாட்டாளி வர்க்க இயக்கங்களுக்கும்ஒரு பெருத்த வேறுபாடு உண்டு. முந்தைய வரலாற்று இயக்கங்கள்எல்லாம்சிறுபான்மையோரது நலனுக்கான சிறுபான்மையினரது இயக்கங்களே, ஆனால்பாட்டாளி வர்க்க இயக்கம்மிகப்பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களின்நலனுக்காக பெரும்பான்மையோர்‌ “தன்னுணர்வோடுநடத்தும்சுயேச்சையான இயக்கமாகும்‌. இத்தகைய வழிகளில்தாம்‌, பாட்டாளி வர்க்கத்தத்துவம்ஒடுக்கப்பட்ட அனைத்து வர்க்கங்களின்நலனுக்கான தத்துவமாக உருமாறிவிடுகிறது எனலாம்‌. ஆயின்இங்கே நமக்கு ஒருவிளக்கம்தேவைப்படுகிறது.தத்துவங்கள்அனைத்தும்வர்க்கச்சார்பானவையே. ஒவ்வொரு வர்க்கத்தின்சமூகப்பாத்திரமும்சமூகவளர்ச்சியில்அதன்பங்கும்பிற வர்க்கத்திடமிருந்து வேறுபட்டிருப்பதால்‌, உலகத்தையும்சமூகத்தையும்பற்றிய உண்மையை அறிவதில்ஒருவர்க்கத்தத்துவம்இன்னொரு வர்க்கத்தத்துவத்தைவிட வேறுபட்டே காணப்படும்‌.

மார்க்சியமானது அதற்கு முந்திய தத்துவங்களை விமர்சனரீதியாக முழுமுற்றாக மறுக்கிறது. ஆனால்ஏங்கெல்ஸ்கூறியது போல்து றுப்பு‌ (negation) இல்லை. அது மனித வரலாற்றில்பெறப்பட்ட முற்போக்குக்கருத்துக்கள்அனைத்தின்தொடர்ச்சியும்உயர்மட்ட ஒருங்கிணைவும்ஆகும்‌. இது குறித்து லெனின்பின்வருமாறு கூறுகிறார்‌:மார்க்சியம்முதலாளியச்சமூகத்தில்பெறப்பட்ட மதிப்பு மிக்க சாதனைகளைச்சற்றும்புறக்கணித்து ஒதுக்கவில்லை, மாறாகமனிதச்சிந்தனை, பண்பாடு ஆகியவற்றின்இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு மேற்பட்டவளர்ச்சியில்இருந்த விலைமதிப்புள்ள அம்சங்களை யெல்லாம்அது ஏற்றுக்கொண்டது ஏனைய தத்துவங்கள்இருக்கின்ற அமைப்பு மாறாமல்இருக்கும்படி பார்த்துக்கொள்வதற்கான விஷயங்களைச்சொல்கின்றன. ஆனால்மார்க்சியம்‌, வரலாற்று விதிகளின்படி உலகை மாற்றியமைப்பதற்கான விஷயங்களைச்சொல்கின்றது.  அனைத்து வகைப்பட்ட சுரண்டல்களிலிருந்தும்மக்களை விடு விக்கக்கூடிய தன்மை பெற்ற வரலாற்றின்புரட்சிகரப்பாத்திரம்ஏற்கும்பாட்டாளி வர்க்கத்தின்தத்துவமாக மார்க்சியம்உள்ளது. மார்க்சியம்‌, திறனாய்வுத்தன்மை மிக்கதும்புரட்சிகரத்தன்மை மிக்கதும்(Critical and revolutionary) ஆகும்‌. வறட்டு வாதத்தை எதிர்த்து அனைத்துக்கருத்துக்களையும்கொள்கைகளையும்புரட்சிகர நடைமுறை என்ற கொதி கலனுக்குள்கொட்டி. சோதனை-மறுசோதனை என்று தொடர்ந்து செல்கிறது. இன்றைய உண்மையானது சரிப்படுத்தப்பட்டு, புதிய உண்மையாக வளர்த்தெடுக்கப் படவில்லையானால்‌, நாளை இதுவே பொய்யாக மாறலாம்என்பதையும்திறனாய்வுக்கண்ணோட்டத்தில்ஒப்புக்கொள்கிறது.

மார்க்சியம்வெறும்திறனாய்வுக்கண்ணோட்டத்தில்மட்டும்விஷயங்களை அணுகவில்லை. அப்படியிருப்பின்அது, எதிர்மறைக்கோட்பாடாக உருமாறி, செயலிழந்ததன்மைக்கு இட்டுச்செல்லும்‌. அது விமர்சனம்மட்டுமே செய்து கொண்டிராது, பழமையை அகற்றிப்புதுமையைஅங்கேஅமரவைக்கிறது.அதாவது அது புரட்சிகரமானதாகும்‌. அது தன்நிலைபாட்டில்உறுதியாக நின்று, புரட்சிகரக்கருத்துக்களைப்புரட்சிகர நடைமுறையின்மூலம்சோதனை செய்து கொள்கிறது. இவை போன்ற பல தன்மைகளைமார்க்சியம்பெற்றிருப்பதாலே, இன்றைய நிலையில்ஏனைய தத்துவங்களைவிட முழு உண்மைக்கு நெருங்கிக்கொண்டிருக்கும்தத்துவமாக மார்க்சியம்விளங்குகிறது எனலாம்‌. எனவே மார்க்சிய எதிர்ப்பாளர்கள்‌, மார்க்சிய அணுகுமுறை பாட்டாளி வர்க்கத்திற்கான மட்டும்உரியதானது என்று சொல்வி அதன்அனைத்தும்ழுவியத்தன்மையை மூடிமறைத்துவிட இயலாது. மார்க்சியம்‌--ஒரு குறிப்பிட்ட நாட்டின்காலகட்டத்திய தத்துவமா?

 இன்னுமோரு விமர்சனம்மார்க்சியத்தை நோக்கிக்கூறப்படுகிறது. மார்க்ஸ்ஒரு நாட்டில்‌, அதனுள்ளும்குறுகி ஒரு சமுதாயத்தில்‌, அதனுள்ளும்குறுகி ஒரு கால கட்ட நிகழ்வில்‌, அதனுள்ளும்குறுகி அதன்புற வாழ்வின்ஓர்அம்சத்தில்மார்க்சியத்தைக்கண்டுபிடித்த தாகச்சொல்வர்‌. அதாவது இவர்கள்கண்ணோட்டத்தின்படி, மார்க்சியம்ஒருகுறிப்பிட்ட நாட்டின்ஒருகுறிப்பிட்ட கால கட்டத்திய தத்துவம்மட்டுமே, அப்படியிருக அது எப்படி உலகளாவிய தன்மை பெறஇயலும்‌? மார்க்சிய அணுகுமுறை, எப்படி உலகளாவீய முறையில்சமூகப்பிரச்னைகளை அணுக இயலும்‌?

மார்க்சியம் அணுகுமுனற உலகளாவியது. மார்க்சியம்உலகளாவிய தன்மையைப்பெற்றதை எங்கெல்ஸ்முதன்முதலில்குறிப்பிடுகின்றார்‌. பாயர்பேக்பற்றி மார்க்சின்ஆய்வுரைகளை மதிப்பிடும்போது, “ஒருபுதியஉலகப்பார்வையின்ஒளிமயமான கருவிதையைத்தாங்கி நிற்கும்முதல் ணம்‌” என்கிறார் இதன்உலகளாவி அணுகுமுறைத்தன்மையைக்காண்போம்.

 

மார்க்ஸ்‌, ஏங்கெல்ஸ்ஆகியோரின்காலம்‌, முதலாளிம்மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலமாகும்‌. வரலாறில்ஆதற்கு முந்திய மாபெரும்செயல்களையெல்லமம் மீறி முதலாளியம்வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்த காலம்‌. அது, தான்ஏவிய உற்பத்திசக்திகளைக்கூடத்தானே கட்டுப்படுத்த முடியாத காலம்‌, மார்க்சின்சொற்களில்கூறப்போனால்‌, “பாதாள உலகத்திலிருந்து தனதுமந்திரத்தின்வலிமையால்‌, தருவித்த சக்திகளை அடக்கியாளமுடியாமற்போனமந்திரவாதியின்நிலையில்முதலாளியம்இருந்தகாலம்‌. இத்தகைய உற்பத்தி சக்திகளின்வளர்ச்சி காரணமாக, அறிவின்எல்லைகள்விரிவடைந்தன. மார்க்சும்ஏங்கெல்கும்தம்காலம்வரை வளர்ந்திருந்த அறிவின் சாரத்தை முழுமையும்கிரகித்து, மனித சமூகசாரத்தின்உண்மைகளைவெளிக்கொண்டு வந்தனர்‌. ஆயினும்மார்க்சிற்கு முந்திய உலகக்கண்ணோட்டத்திற்கும்மார்க்சின்உலகக்கண்ணோட்டத்திற்கும்வேறுபாடுகள்உண்டு. இந்த விதத்தில்தான்மார்க்கியம்அனைத்தும்தழுவிய தன்மை கொண்டதாக உள்ளது. மார்க்சியம்ஓர்அறிவியலைப்போன்றது. அது சமூகத்தைப்பற்றிய அறிவியலாகும்பொருள்முதல்வாதம்என்ற அளவுகோலின்வழி இயங்கியல் முறையில்‌, முதலாளியக்கால கட்டத்திய சமூக அறிவியல்ஆகும்‌, இயற்கை அறி வியல்ஒரு காலகட்டத்திற்கும்ஒரு நாட்டிற்கும்மட்டுமே சொந்தமாக இல்லாததைப்போல, மார்க்சியமும்ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கும்ஒரு குறிப்பிட்டநாட்டிற்கும்மட்டுமே பொருந்தும்எனச்சுருக்கிப்பார்க்கக்கூடாது. ‌

மார்க்சியம்என்பது முதலாளியச்சமூகக்கட்டத்தின்நவீன அறிவியற்கோட்பாடு தானே! ஆனால்இன்று ஏகாதிபத்தியக்கால கட்டமாயிற்றே! எப்படி மார்க்சியம்பொருந்தும்‌? அதாவது, உலகைக்குடியேற்றநாடுகளாகவும்‌, அரைக்குடியேற்றநாடுகளாகவும்ஏகாதிபத்தியங்கள்கூறுபோட்டுக்கொண்டிருக்கும்இன்றைய கால கட்டத்தில்ஏப்படி மார்க்சியம்பொருந்தும்‌? இங்கேதான்மார்க்சியத்தின்வளர்ச்சிக்கட்டமாக லெனினியம்உருவெடுக்கிறதுலெனின்‌,ஏங்கெல்சிற்குப்பின்தன்காலம்வரையிலான அறிவியல்சாதனைகளையெல்லாம்பொருள்முதல்வாதக்கோட்பாட்டின்வழியில்வரையறை செய்தார்‌. மார்க்சிய முகாம்களுக்கு உள்ளிருந்தே ஒலித்த மார்க்சிய விரோதக்குரலை அம்பலப்படுத்தினார்‌. அவரது கருத்துக்களின்தொகுப்பே லெனினியம்என்பதாகும்‌, மார்க்சியம்என்பது முதலாளிய சகாப்தத்தின்நவீன சமூக அறிவியல்எனில்‌, லெனினியம்என்பது ஏகாதிபத்திய காலகட்டமும்தொழிலாளர்வர்க்கப்புரட்சியும்நிலவும்காலகட்டத்திய மார்க்சியம்ஆகும்‌,

லெனின்‌, மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார்‌. ஏங்கெல்ஸ்ஒரு முறை சொன்னதற்கு இணங்க அறிவியல்கண்டுபிடிக்கிற விஷயங்கள்ஒவ்வொன்றிற்கும்ஒத்ததாக இருக்கும்வகையில்பொருள்முதல்வாதம்அவ்வப்பொழுது புதுப்புது அம்சம்உடையதாக வளம்பெற வேண்டும்‌! என்ற அடிப்படையில்லெனின்செழுமைப் படுத்தினார்‌. எனவே மார்க்சிய அணுகுமுறை ஒரு கால கட்டத்திற்கு உரியது மட்டுமன்று. ஆயினும்அது சமூகத்தைப்பற்றிய முழுமுற்றான பரிபூரணத்துவம்நிறைந்த ஒன்றாகவும்‌, எல்லாக்காலகட்டத்திற்கும்ஒரே அளவினதாகவும்இருக்கக்கூடிய ஒன்றல்ல, அது சமூகத்தைப்பற்றிய சில பொதுவான கோட்பாடுகளை உலகிற்கு வழங்குகிறது. இது குறித்து லெனின்கூறுதல்பொருத்தமாக இருக்கும்‌. மார்க்சின்தத்துவத்தை நாங்கள்முற்றும்முடிவான ஒன்றாகவும்மீறவொண்ணா ததாகவும்கருதவில்லை. மாறாக அது,..... அறிவியலின்அடிக்கல்லை மட்டுமே அமைத்துக்கொடுத்திருக்கிறது. அது பொதுவானழிகாட்டும்கோட்பாடுகளையே அளித்திருக்கிறது' மார்க்சும்ஒரு கட்டத்தில்‌, எனது நூல்கள்அனைத்தும்வழிகாட்டும்கோட்பாடுகள்ஆகும்‌” என்றும்கூறியுள்ளார்‌. எனவே மார்க்சியம்என்பது ஒரு நாட்டிற்கு மட்டும்‌, ஒருகால கட்டத்திற்கு மட்டும்உரியதத்துவமாக இன்றுவரைஇல்லை என்பதுதான்நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்‌.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்