இலக்கு 91 இணைய இதழ் ஒலி மற்றும் எழுத்து வடிவில்

 இலக்கு இணைய இதழின்” நோக்கம் மார்க்சிய-லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் புரட்சிகர அறிவாளிகளோடு விவாதிப்பதும், சரியான மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்கும் வகையில் புரிய வைப்பதுமே யாகும். "இலக்கு” இதழில் தங்களது விமர்சனங்களை விவாதங்களை மார்க்சிய-லெனினிய அடிபடையில் வைக்கும்படி அழைக்கிறோம். தங்களின் மேலான கருத்துகளை எழுதி அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம். அனுப்பி வைக்க இமெயில் cpalani.cpalani@gmail.com மற்றும் வாட்சாப் எண் 7010134299. மார்க்சிய-லெனினியத்தை கற்கும் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள அழைக்கின்றோம் தோழர்களே.


இலக்கு 91 இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

1).முதலாளியமும் அதன் பிறகும். ஜார்ஜ் தாம்ஸன். பாகம் 1.

2).ஆசான் லெனின் நமக்கான வழிகாட்டி

3). திருத்தல்வாதம். செங்யென்-சி. பாகம் 1.

நாம் ஒரு கம்யூனிஸ்டாக என்னென்ன அடிப்படைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் அதற்கு ஆசான்கள் காட்டியுள்ள வழிமுறைகளையும் தேடிய பயணமே நமக்கான இலக்காக தொடர்ந்துக் கொண்டுள்ளோம் தோழர்களே...

இலக்கு 91 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் வாசித்து கருத்தை சொல்லுங்கள் தோழர்களே

இலக்கு 91 இணைய இதழை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

மனித குலத்தின் வரலாற்று வளர்ச்சியில் தனிச்சொத்துடமையின் தோற்றம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வினையும் வர்க்கங்களையும் உருவாக்கியது. இத்தகைய வர்க்கங்களிடையிலான முரண்பாடுகளும் போராட்டங்களும் பொதுவாகி போனது. மனித குலத்தின் வரலாறு வர்க்க போராட்டங்களின் வரலாறாகிக் கொண்டது. வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவுகளால் அரசு தோன்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் மார்க்ஸ் விளக்கியது போன்று அரசென்றால் ஒரு வர்க்கம் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு கருவியாகும். அது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலை அமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசு ஆகும். சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை கீழே வைத்திருப்பதற்காகப் படிப்படியாகக் கட்டப்பட்ட சாதனமே அரசு. வர்க்க சமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது உண்மையில் அதுவே. கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால் சுரண்டும் அமைப்புமுறை இருக்கும்வரை அரசு இயந்திரம் அவ்வாறே இருக்கும். அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வந்திருக்கின்றார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது. அதனை எதிர்த்த போராடும் வர்க்கம் தனக்கான போராட்டத்தில் எவ்வகையான சமூகம் அமைக்க போகிறோம்? அந்த போராடும் சக்தி யார் யார் ? அதனை விரிவாக அறிந்திருந்தாலே நமக்கான அரசியல் எளிதாக இருக்கும் தோழர்களே,






இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்