போர் தந்திரங்கள் பற்றி மார்க்ஸ் எங்கெல்ஸ் கடிதங்கள்-லெனின்

 தத்துவ சம்பந்தமான தமது வேலையோடு கூடவே, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் பற்றிய போர்த்தந்திரப் பிரச்சினைகளிலே தமது வாழ்க்கை நெடுகிலும் அயராத கவனம் செலுத்தி வந்தார் மார்கஸ். மார்க்சின் எல்லா நூல்களிலும், குறிப்பாக 1913ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் கடிதப் போக்குவரத்தின் நான்கு தொகுதிகளிலும், இது பற்றி ஏராளமான விஷயாதாரங்கள் உள்ளன. மார்க்ஸ் தமது பொருள்முதல் வாத-இயக்க இயல் உலகக் கண்ணோட்டத்தின் எல்லா ஆதாரக் கூறுகளோடும் கராரகப் பொருந்தும் படியாகத் தான் பாட்டாளி வர்க்கப் போர்த்தந்திரங்களின் பிரதான கடமையை வரையறுத்தார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் எல்லா வர்க்கங்களையும் விதிவிலக்கின்றி எடுத்துக் கொண்டு அவ்வர்க்கங்களிடையேயுள்ள பரஸ்பர உறவுகளின் கூட்டு மொத்தத்தை புறநிலை ரீதியிலே கருத்தில் கொள்வதுஅதன் விளைவாக அந்தச் சமுதாயத்தின் யதார்த்த வளர்ச்சிக் கட்டத்தையும் அந்தச் சமுதாயத்துக்கும் இதர சமுதாயங்களுக்கும் இடையேயுள்ள பரஸ்பர உறவுகளையும் கருத்தில் கொள்வது-இது ஒன்றுதான் முன்னணி வர்க்கத்தின் சரியான போர்த்தந்திரங்களுக்கு அடிப்படையாக இருக்க முடியும். அதே சமயத்தில், எல்லா வர்க்கங்களையும், எல்லா நாடுகளையும் நிலையமைதியில் பார்க்காமல் இயக்க நிலையில் பார்க்கிறோம்; அதாவது, அவற்றை அசையாத நிலையிலே பார்க்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலே பார்க்கிறோம் (இந்த இயக்கத்தின் விதிகளை நிர்ணயிப்பவை ஒவ்வொரு வர்க்கத்தின் பொருளாதார வாழ்வுநிலைமைகள்தான்). பிறகு, இயக்கத்தைப் பார்க்கும் போதும் சென்ற காலத்தைப் பற்றிய பார்வையுடன் மட்டும் அதைப் பார்க்காமல் எதிர்காலத்தைப் பற்றிய பார்வையுடனும் இயக்கத்தைப் பார்க்கிறோம். அதே சமயத்தில், அப்படிப் பார்க்கையில், மெதுவாக நடைபெறுகிற மாறுதல்களை மட்டும் பார்க்கிற "பரிணமவாதிகளின்" விஞ்ஞானக் கேடான கருத்தோட்டத்துக்கு இணங்க நாம் இயக்கத்தைப் பார்ப்பதில்லை; அதற்குப் பதிலாக, இயக்க இயல் வகையில் அதை நாம் பார்க்கிறோம்: "இத்தகைய பிரம்மாண்டமான வளர்ச்சிகளின் நிலையில் இருபது ஆண்டுகள் ஒரு நாளுக்குக் கூட ஈடாகா. இருந்தா லும், பின்னால் இருபது ஆண்டுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள நாட்களும் வரக் கூடும்" என்று மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதினார். (கடிதப் போக்குவரத்து, தொகுதி 3, 127ம் பக்கம்.)49 வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு கணத்திலும் பாட்டாளி வர்க்கப் போர்த்தந்திரங்கள் புறநிலை ரீதியிலே, தவிர்க்க முடியாததாயுள்ள மனித வரலாற்றின் இயக்க இயலைக் கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும். ஒருபுறம், அரசியல் தேக்கம் உள்ள அல்லது மந்தமான, "அமைதியானதாகச்" சொல்லப்படும் வளர்ச்சி நிலவும் காலப் பகுதிகளை, முன்னணி வர்க்கத்தின் உணர்வையும் பலத்தையும் போர்த்திறனையும் வளர்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; மற்றொருபுறம், இப்படிப் பயன்படுத்திக்கொள்ளும் வேலை அனைத்தையும் இந்த வர்க்கத்தினுடைய இயக்கத்தின் "இறுதி இலட்சியத்தை" அடைவதற்காக, "இருபது ஆண்டுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள" மகத்தான நாட்களில், மகத்தான பணிகளை நடைமுறையில் நிறைவேற்றி வைப்பதற்குரிய திறனை அந்த வர்க்கத்தினிடையே உண்டாக்கி வைப்பதற்காக நடத்திக் கொண்டு போக வேண்டும். இந்தப் பிரச்சினை சம்பந்தமாக மார்க்சின் இரண்டு வாதங்கள் குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்தவை; அவற்றில் ஒன்று மெய்யறிவின் வறுமை என்ற நூலிலே உள்ளது; அது பாட்டாளி வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டம், பொருளாதார நிறுவனங்கள் சம்பந்தமானது; மற்றொரு வாதம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் இருக்கிறது; இது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பணிகள் சம்பந்தமானது. முதல் வாதம் பின்வருமாறு: "பெரு வீத உற்பத்தி, ஒருவரை ஒருவர் அறிந்திராத மக்களைத் திரளாக ஓர் இடத்தில் குவிக்கிறது. போட்டி அவர்களின் நலன்களைப் பிரிக்கிறது. ஆனால், தங்கள் முதலாளிக்கு எதிராக அவர்களுக்கு இருக்கும் பொது நலனுண் கூலியைக் காப்பாற்றிக்கொள்வது என்பது, அவர்களை எதிர்ப்பு என்ற பொதுச் சிந்தனையிலே-இணைப்பிலே-ஒன்றுபடுத்துகிறது. முதலில் தனித்தனியாக இருந்து வந்த இணைப்புக்கள் குழுக்களாக அவர்களை அமைக்கின்றன. எப்பொழுதுமே ஒன்றுபட்டு நிற்கிற மூலதனத்தின் எதிரே அவர்களுக்கு (அதாவது தொழிலாளிகளுக்கு இந்த இணைப்பை நிலைநிறுத்துவது கூலியை நிலை நிறுத்துவதைவிட அதிக அவசியமாகிவிடுகிறது. இந்தப் போராட்டத்தில்-இது உண்மையிலே ஓர் உள்நாட்டுப் போர்தான்-வரப்போகும் போருக்குத் தேவையான எல்லா அம்சங்களும் ஒற்றுமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தக் கட்டத்தை எட்டிய மாத்திரத்தில் கூட்டணியானது அரசியல் தன்மை பெற்றுவிடுகிறது.” இங்கேதான் பொருளாதாரப் போராட்டத்துக்கும், தொழிற்சங்க இயக்கத்துக்கும் வரப்போகும் சில பத்தாண்டுகளுக்கு வேண்டிய வேலைத் திட்டமும் போர்த்தந்திரங்களும் நமக்குக் கிடைக்கின்றன. பாட்டாளி வர்க்கம் "வரப்போகும் போருக்குத்" தனது சக்திகளைத் திரட்டிக் கொள்கிற நீண்ட காலப் பகுதி முழுவதற்கும் இவை போதும். இதன் பக்கத்திலேயே மார்க்சும் எங்கெல்சும் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தின் உதாரணத்தைப் பற்றித் தந்துள்ள பல மேற்கோள் குறிப்புகளை வைத்தாக வேண்டும். தொழில் துறையிலுள்ள "செழுமை" எப்படி "தொழிலாளர்களை விலைக்கு வாங்குவதற்கான" முயற்சிகளிலும் (கடிதப் போக்குவரத்து, தொகுதி 1, பக்கம் 136),51 அவர்களைப் போராட்டத்திலிருந்து திருப்புவதற்கான முயற்சிகளிலும் கொண்டுபோய் விடுகிறது; எப்படி இந்தச் செழுமை பொதுவாகவே "தொழிலாளர்களை உறுதி குலையச் செய்கிறது" (தொகுதி 2, பக்கம் 218); எப்படி பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கம் "முதலாளித்துவ மனுனோபாவமுள்ளதாக" ஆகிவிடுகிறது-"மற்றெல்லாவற்றையும் விட மிகமிக முதலாளித்துவத் தன்மை உள்ள இந்த தேசம்" (இங்கிலாந்து) "இறுதியிலே முதலாளி வர்க்கத்தோடு முதலாளித்துவ போக்குள்ள பிரபுவம்சத்தையும் முதலாளித்துவப் போக்குள்ள பாட்டாளி வர்க்கத்தையும் அமைத்துக் கொள்வதிலே குறியாயிருக்கிறது போல் தோன்றுகிறது" (தொகுதி 2, பக்கம் 290);53 எப்படி அந்த வர்க்கத்தின் "புரட்சிகரமான ஊக்கம்" ஒழுகியோடிவிடுகிறது (தொகுதி 3, பக்கம் 124);54 எப்படி "பிரிட்டிஷ் தொழிலாளர்கள் வெளித்தோற்றத்தில் தெரிகிற, தங்களைப் பீடிக்கும் முதலாளித்துவத் தொத்துவியாதியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதற்கு" முன்பாக ஏறத்தாழ நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும் (தொகுதி 3, பக்கம் 127);55 எப்படி பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்திடம் "சார்ட்டிஸ்டுகளின் வீரியம் இல்லை" (1866; தொகுதி 3, பக்கம் 305); எப்படி பிரிட்டிஷ் தொழிலாளர்களின் தலைவர்கள் "தீவிர முதலாளி வர்க்கத் தாருக்கும் தொழிலாளிக்கும்" இடைநிலையிலேயுள்ள ரகமாக ஆகி வருகிறார்கள் (இது ஹோலியோக் என்பவரைக் குறித்துச் சொன்னது; தொகுதி 4, பக்கம் 209); பிரிட்டிஷ் ஏக போகத்தின் காரணமாக, இந்த ஏகபோகம் இருக்கிற வரைக்கும், எப்படி "பிரிட்டிஷ் தொழிலாளி அசைந்து கொடுக்க மாட்டான்" (தொகுதி 4, பக்கம் 433);58 என்றெல்லாம் அந்த மேற்கோள்கள் குறிக்கின்றன. தொழிலாளர் இயக்கத்தின் பொதுவான போக்கு (அதன் விளைவும்கூட) சம்பந்தமாக, பொருளாதாரப் போராட்டத்தின் போர்த்தந்திரங்கள் இங்கே மிகமிக விரிவான, முழுமையான, இயக்கவியல் முறையான, உண்மையாகவே புரட்சிகரமான நோக்கு நிலையிலிருந்து கருதிப் பார்க்கப்பட்டுள்ளது. அரசியல் போராட்டத்தின் போர்த்தந்திரங்கள் சம்பந்தமான அடிப்படை மார்க்சியக் கோட்பாட்டைக் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை வெளியிட்டது: "உடனடியான இலட்சியங்களைச் சாதிப்பதற்காக, தொழிலாளி வர்க்கத்தின் தற்காலிக நலன்களை நிறைவேற்றுவதற்காகக் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள்; ஆனலும் கூட, நிகழ்கால இயக்கத்திலேயே அவர்கள் அந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும் பிரதி நிதித்துவப் படுத்திக் கவனித்துக்கொள்கிறார்கள். அதனால் தான் 1848ம் ஆண்டில் போலந்தில் "விவசாயப் புரட்சிக்" கட்சியை, "1846ல் நடந்த கிராக்கவ் எழுச்சியைத் தூண்டிய அந்தக் கட்சியை," மார்க்ஸ் ஆதரித்தார். 1848லும், 1849லும் ஜெர்மனியில் அதிதீவிரமான புரட்சிகர ஜனநாயகத்தை மார்க்ஸ் ஆதரித்தார்; அப்போது போர்த்தந்திரங்களைக் குறித்துத் தாம் சொன்னதைப் பின்னால் அவர் என்றைக்கும் மறுத்துத் திரும்பப் பெறவேயில்லை. ஜெர்மானிய முதலாளி வர்க்கத்தை "ஆரம்பத்திலிருந்தே மக்களுக்குத் துரோகம் செய்யும் எண்ணங் கொண்டிருந்ததும்" (விவசாயி மக்களுடன் ஒன்றாக இணைந்திருந்தால்தான் முதலாளி வர்க்கம் தனது பணிகளை முழுமையாகச் சாதித்துக் கொள்ள முடிந்திருக்கும்) "பழைய சமுதாயத்தின் முடிசூடிய பிரதிநிதிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் எண்ணங் கொண்டிருந்ததுமான" ஓர் அம்சமாகத்தான் மார்க்ஸ் கருதினார். முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி சகாப்தத்தில் ஜெர்மன் முதலாளி வர்க்கம் வகித்த வர்க்க நிலை பற்றிய மார்க்சின் பகுப்பாராய்ச்சியின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்; இடையே ஒன்றைச் சொல்லலாம்: சமுதாயத்தை இயக்க நிலையிலே பரிசீலிக்கும்-அது மாத்திரமல்ல, பின்னோக்கிச் செல்லும் இயக்கத்தின் பக்கத்திலிருந்து மட்டுமின்றி பரிசீலிக்கும் பொருள்முதல் வாதத்திற்கு இந்தப் பகுப்பாராய்ச்சி ஓர் எடுத்துக்காட்டு ஆகும். "தன்னிடத்திலும் நம்பிக்கை கிடையாது, மக்களிடத்திலும் நம்பிக்கை கிடையாது, மேல் நிலையிலுள்ளோரைக் கண்டு முணுமுணுப்பது, கீழ்நிலையிலுள்ளோரைக் கண்டு நடு நடுங்குவது; ... உலகப் புயலைக் கண்டு பயப்படுவது;. எந்த விதத்திலும் ஊக்கம் கிடையாது, எல்லா விதங்களிலும் சிந்தனைத் திருட்டு;. முன்முயற்சியே கிடையாது;. திடகாத்திரமான மக்களின் வாலிப இதயத்தின் துடிப்புகளைத் தனது சொந்தக் கிழட்டு நலன்களுக்காக வழிகாட்டித் தடம் புரளச் செய்யும் வேலை தனக்கு விதித்திருப்பதாகப் பாவித்துக் கொள்ளும் சாபத்தீடான கிழட்டுக் கட்டை..." (நியூ ரைனிஷ் ஜைடுங், 1848; லிடெராரிஷேர் நாக்லஸ், தொகுதி 3, பக்கம் 212ஐப் பார்க்க.) இருபது ஆண்டுகளுக்குப் பின்னால் எங்கெல்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் (கடிதப் போக்குவரத்து, தொகுதி 3, பக்கம் 224) 1848ம் ஆண்டுப் புரட்சி தோல்வியுற்றதற்குக் காரணம், சுதந்திரத்துக்காகப் போராடுவதை விட அடிமைத்தனத் தோடு கூடிய சமாதானமே மேலென முதலாளி வர்க்கம் கருதியதுதான் என்று மார்க்ஸ் பிரகடனப்படுத்தினார். 1848-49ம் ஆண்டுகளின் புரட்சி சகாப்தம் முடிவுற்ற போது புரட்சி செய்வது போலப் போக்குக் காட்டும் ஒவ்வொரு முயற்சியையும் மார்க்ஸ் எதிர்த்தார் (ஷாப்பர், வில்லிஹ் என்பவர்களை எதிர்த்து மார்க்ஸ் செய்த போராட்டம்); மேலும், வெளிப் பார்வைக்கு "அமைதியானதாகத் தோன்றும் வழியில் புதிய புரட்சிகளுக்குத் தயார் செய்ய வேண்டிய இந்தப் புதிய கட்டத்தில் வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டும் என்று மார்க்ஸ் வற்புறுத்தி வந்தார். இந்த வேலையை எந்த முறையிலே நடத்திக் கொண்டு போக வேண்டு மென்று மார்க்ஸ் விரும்பினார் என்பதைப் பிற்போக்கின் இருள் மண்டிய காலமான 1856ல் ஜெர்மனியிலிருந்த நிலைமையைப் பற்றி அவர் தந்த மதிப்பீடு காட்டுகிறது: "ஜெர்மனியின் நிலைமையெல்லாம் விவசாயப் போர் இரண்டாம் தடவையாக ஏற்பட்டுப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்பலம் அளிக்க வாய்ப்பு ஏற்படுமா என்பதைத்தான் பொறுத்திருக்கிறது." (கடிதப் போக்குவரத்து, தொகுதி 2, பக்கம் 108) ஜெர்மனியில் ஜனநாயக (முதலாளித்துவ) புரட்சி முடிவு பெறாத வரையில், விவசாயிகளின் ஜனநாயக ஆற்றலை வளர்ப்பதற்கான போர்த்தந்திரங்களில் சோஷலிஸ்ட் பாட்டாளி வர்க்கத்தின் கவனத்தை ஒன்று குவியச் செய்து வந்தார் மார்க்ஸ், லஸ்ஸாலினுடைய கண்ணோட்டம் "யதார்த்தத்திலே. தொழிலாளர் இயக்கம் முழுவதையும் பிரஷ்யாவுக்குக் காட்டிக்கொடுப்பதுதான்" என்று மார்க்ஸ் கருதினார் (தொகுதி 3, பக்கம் 210).62 பிரஷ்யப் பெரு நிலப்பிரபுக்களுக்கும் தேசியவாதத்துக்கும் லஸ்ஸால் உடந்தையாக இருந்ததே இதற்குக் காரணம். பத்திரிகைகளுக்கு விடுவதற்கான ஒரு கூட்டறிக்கை விஷயமாக மார்க்சோடு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் போது 1865ல் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார். "விவசாயமே மிகப் பெரும்பாலும் உள்ள ஒரு நாட்டில், மாபெரும் நிலப் பிரபுத்துவ வம்சத்தோரின் சாட்டையின் கீழ் கிராமப்புறப் பாட்டாளி வர்க்கம் தந்தைவழி முறையிலே சுரண்டப்படுவதைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் இயந்திரத் தொழிலில் வேலை செய்யும் பாட்டாளி வர்க்கத்தின் பேரால் முதலாளி வர்க்கத்தை மட்டும் தாக்கி வருவது நீசத்தனமாகும்.* (தொகுதி 3, பக்கம் 217.) ஜெர்மனியில் முதலாளித்துவஜனநாயகப் புரட்சியை நிறைவுபடுத்தும் சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்த காலத்தில், இந்தப் புரட்சியை மேலே இருந்து ஏதாவதொரு வழியில் நிறைவுபடுத்துவதற்குப் பிரஷ்யாவையும் ஆஸ்திரியாவையும் சேர்ந்த சுரண்டும் வர்க்கங்கள் போராடிக் கொண்டிருந்த சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கையில், அதாவது 1864ம் ஆண்டிலிருந்து 1870ம் ஆண்டு வரை, பிஸ்மார்க்குடன் குலாவிக் கொண்டிருந்த லஸ்ஸாலை மார்க்ஸ் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், "ஆஸ்திரிய பக்திவாதத்தின்" பக்கமாகவும் தனித்தன்மை வாதத்தை ஆதரிப்பதின் பக்கமாகவும் சாய்ந்து கொண்டிருந்த லீப்க்னெஹ்டையும் கண்டித்துத் திருத்தினார். பிஸ்மார்க்கையும் ஆஸ்திரிய பக்திவாதிகளையும் எதிர்த்து ஒரே மாதிரியாக ஈவிரக்கமின்றிப் போர் புரிவதற்குரிய புரட்சிகரமான போர்த்தந்திரத்தை மார்க்ஸ் கோரினார்; "வெற்றி வீரனான" பிரஷ்ய ஜங்கருக்கு வேண்டிய மாதிரி அமைந்திராமல், அதற்குப் பதிலாகப் பிரஷ்ய ராணுவ வெற்றிகள் உண்டாக்கித் தந்த அடிப்படையிலே அவரை எதிர்த்து உடனடியாகப் புரட்சிப் போராட்டத்தை மீண்டும் நடத்துவதற்கேற்ற போர்த்தந்திரத்தையே மார்க்ஸ் கோரினார். (கடிதப் போக்குவரத்து, தொகுதி 3, பக்கங்கள் 134, 136, 147, 179, 204, 210, 215, 418, 437, 440-441.)65 அகிலத்தின் 1870 செப்டம்பர் 9ம் தேதிய பெயர்பெற்ற அறிக்கையில், காலப் பொருத்தமற்ற எழுச்சியைச் செய்யக் கூடாது என்று பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கத்தை மார்க்ஸ் எச்சரித்தார்; ஆனால், அவர் சொல்லியிருந்த போதிலும் 1871ல் எழுச்சி நடைபெற்ற போது "விண்ணைச் சாடுகின்ற" மக்களின் புரட்சிகரமான முன்முயற்சியை மார்க்ஸ் உற்சாகத்தோடு கொண்டாடி வரவேற்றார். (குகல்மனுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம்). இந்த நிலைமையிலும் சரி, இதர பல நிலைமைகளிலும் சரி, மார்க்சினது இயக்கவியல் வகைப்பட்ட பொருள்முதல் வாதத்தின் நிலையில் நின்று பார்க்கும் போது, ஏற்கெனவே கைப்பற்றியிருந்த நிலையைக் கைவிடுவதை விட, போராடாமலே சரணாகதி அடைவதை விட, புரட்சிகரமான போராட்டம் தோல்வியடைவதானது பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் பொதுவான போக்குக்கும் இறுதி விளைவுக்கும் குறைந்த தீங்கேயாகும். அப்படிப்பட்ட சரணாகதி பாட்டாளி வர்க்கத்தின் உறுதியைக் குலைத்திருக்கும், அதன் போர்த்திறனைப் பலவீனப்படுத்தியிருக்கும். அரசியல் தேக்கம் நிலவி முதலாளித்துவச் சட்டக் கட்டுப்பாடு மேலோங்கியிருக்கும்படியான காலப் பகுதிகளில் சட்டபூர்வமான போராட்ட வழிவகைகளைப் பயன்படுத்துவதை மார்க்ஸ் பூர்ணமாக உணர்ந்து கொண்டு, தனிப்பட்ட சோஷலிஸ்டுஎதிர்ப்புச் சட்டம்67 அமுலுக்கு வந்த பிறகு, 1877-1878 ஆண்டுகளில் மோஸ்த் என்பவருடைய "புரட்சிகரமான சொல்லடுக்குகளைத்" தீவிரமாகக் கண்டித்தார்; ஆனால் அதை விடத் தீவிரமாயில்லாவிட்டாலும் அதற்கு எந்த விதத்திலும் குறைச்சலில்லாத தீவிரத்துடன் அதிகாரபூர்வமான சமூக-ஜனநாயகக் கட்சியில் தற்காலிகமாக ஆதிக்கம் பெற்றிருந்த சந்தர்ப்பவாதத்தையும் மார்க்ஸ் கண்டித்தார்; ஏனெனில் சோஷலிஸ்டு-எதிர்ப்புச் சட்டத்துக்குப் பதிலளிக்கும் முறையில், அந்தக் கட்சி உடனே மனேதிடத்தையும், உறுதியையும், புரட்சிகரமான உணர்ச்சியையும், சட்டவிரோதமான போராட்டத்தில் இறங்குவதற்குத் தயாராயிருக்கும் போக்கையும் வெளிப்படுத்தவில்லை. (கடிதப் போக்குவரத்து, தொகுதி 4, பக்கங்கள் 397, 404, 418, 422, 424,68 சோர்கே என்பவருக்கு எழுதிய கடிதங்களையும் பார்க்க.) 1914 ஜூலை-நவம்பரில் நூல் திரட்டு, எழுதப் பெற்றது தொகுதி 26, பக்கங்கள் 43-93 1915ல் சுருக்கமான வடிவில் கிரனாட் என்ஸைக்லோபீடியாவில் ஏழாம் பதிப்பு, தொகுதி 28ல் வி. இலியீன் என்ற கைச்சாத்துடன் முதலில் பிரசுரிக்கப்பட்டது. முகவுரை 1918ல் நி, லெனின் எழுதிய கார்ல் மார்க்ஸ் 'பிரிபோய்' பிரசுரம் மாஸ்கோ என்ற சிறுவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது 68 | வி.இ.லெனின் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் மார்க்சின் போதனை, நாகரிக உலகெங்கிலும் (அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இருவகையான) முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையையும் வெறுப்பையும் கிளப்பிவிடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான "நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்" என்று அது கருதுகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த விதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் "ஒருசார்பற்ற" சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவதொரு விதத்தில் கூலி அடிமை முறையை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப் பிரகடனம் செய்துள்ளது. மூல தனத்துக்குக் கிடைக்கும் இலாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒரு சார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும். இது மட்டுமல்ல. தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் " குறுங்குழுவாதம்" போன்றதெதுவும் கிடையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஒரு இறுகிப்போன வரட்டுப் போதனையல்ல; உலக நாகரிக வளர்ச்சியின் ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேறொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என்பதில்தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத் தான் மார்க்சின் போதனை எழுந்தது. வி.இ.லெனின் | 69 மார்க்சின் போதனை மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19ம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம். இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூன்று உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம். 1 பொருள்முதல்வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் முரணற்ற தத்துவ ஞானமாகும், இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும், மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப் பகையாகும் என்பது ஐரோப்பாவின் நவீனகால வரலாறு பூராவிலும், இன்னும் முக்கியமாய் மத்திய காலக் குப்பைக் கூளங்களை எதிர்த்தும், நிறுவனங்களிலும் கருத்துக்களிலும் ஆட்சி புரிந்த பிரபுத்துவத்தை எதிர்த்தும் நடைபெற்ற முடிவான கடும் போரின் களமாயிருந்த பிரெஞ்சு நாட்டில் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டது. ஆகவே பொருள்முதல்வாதத்தை "மறுப்பதற்கும்", பலவீ னப்படுத்துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தின் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவ ஞானக் கருத்துமுதல்வாதத்தின் பலவகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனார். இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோ தான் செய்கிறது. மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல் வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனார். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக் கடி விளக்கி வந்தார்கள். எங்கெல்ஸ் எழுதிய லுத்விக் ஃபாயர்பாக், டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள் மிகத் தெளிவாகவும் முழுமையாக வும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டு அறிக்கை என்கிற நூலைப் போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவசியமான கைப் புத்தகங்களாகும். 70 | வி.இ.லெனின் 1 8ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்துடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. அவர் தத்து வஞான த்தை முன்னேற ச் செய்தார். மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம் திரட்டிய செல்வங்களைக் கொண்டு, குறிப்பாக ஹெகலின் தத்துவ முறை- இதிலிருந்தே ஃபாயர்பாகின் பொருள்முதல் வாதம் தோன்றியது- திரட்டிய செல்வங்களைக் கொண்டு, அவர் பொருள்முதல்வாதத்தை வளப்படுத்தினார். இந்தச் செல்வங்களில் பிரதானமாக விளங்குவது இயக்கவியல்தான். இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப் பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும்; நிரந்தரமாக வளர்ச்சியுற்ற வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்னணுக்கள், தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது-இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதமே சரியானது என்று வியக்கத் தக்க முறையில் உறுதிப்படுத்தியுள்ளன. அழுகிப்போன பழைய கருத்துமுதல்வாதத்தைப் பற்றிய "புதிய" மறுவியாக்கியானங்களைக் கொண்டு முதலாளித்துவத் தத்துவஞானிகள் தந்த போதனைகளால் இதைத் தடுக்க முடியவில்லை. தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித்தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது. வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்தரமான இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை-உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை-அது காட்டுகிறது. இயற்கை என்பது-அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது-மனிதனாக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும். உதாரணமாக, நவீன ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் செலுத்தி வரும் ஆதிக்கத்தைப் பலப்படுத்த எப்படிப் பயன்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். மார்க்சின் தத்துவஞானம் முழுநிறைவு பெற்ற தத்துவ ஞானப் பொருள்முதல்வாத மாகும். இந்தப் பொருள்முதல் வாதம் மனிதகுலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்களை வழங்கியிருக்கிறது.  பொருளாதார அமைப்பு முறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகிறது என்று ஏற்றுக் கொண்டவுடன், மார்க்ஸ் தமது பெரும்பாலான கவனத்தை இந்தப் பொருளாதார அமைப்பு முறையின் மீது செலுத்தினார். மார்க்சின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய-அதாவது, முதலாளித்துவ- சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும். மார்க்சுக்கு முற்பட்ட மூலச்சிறப்புள்ள அரசியல் பொருளாதாரம் முதலாளித்துவ நாடுகள் எல்லாவற்றிலும் அதிக வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்திலே உருவாயிற்று. ஆதாம் ஸ்மித்தும் டேவிட் ரிக்கார்டோவும் பொருளாதார அமைப்பு முறையை ஆராய்ந்து மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்துக்கு அஸ்திவாரமிட்டார்கள். அவர்களுடைய பணியை மார்க்ஸ் தொடர்ந்து நடத்தினார். இந்தத் தத்துவத்தை அவர் திட்டமாக நிரூபித்து முரணற்ற வகையில் விவரித்தார். ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் விளக்கிக் காட்டினார். முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள், பொருட்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றென்றுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்) உறவு என்பதாக விவரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் புலப்படுத்தினார். பண்டப் பரிமாற்றம் தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக் காட்டுகிறது. பணம் என்பது இந்தப் பிணைப்பு தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் பிரிக்க முடியாதபடி முழுமொத்தமாக இணைத்து மேலும் மேலும் நெருக்கமாவதைக் குறிக்கிறது. மூலதனம் என்பது இந்தப் பிணைப்பு மேலும் வளர்ச்சியுறுவதைக் குறிக்கிறது; அதாவது மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகிவிடுவதைக் குறிக்கிறது. கூலி பெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகியவற்றின் சொந்தக்காரர்களிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கிறான். தொழிலாளி வேலை நாளின் ஒரு பகுதியைத் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய செலவுக்காக (அதாவது, கூலிக்காக) உழைப்பதில் கழிக்கிறான், மறு பகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறான். இந்த உபரி மதிப்புத்தான் இலாபத்துக்குத் தோற்றுவாய், அது தான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்துக்குத் தோற்றுவாய். உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்துக்கு மூலைக்கல் ஆகும். தொழிலாளியின் உழைப்பால் உண்டாக்கப்பட்ட மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை அழித்து வேலையில்லாதோர் பட்டாளத்தைப் படைப்பதின் மூலமாகத் தொழிலாளியை நசுக்குகிறது. தொழில் துறையில், பெருவீத உற்பத்தி பெறுகிற வெற்றி பளிச்சென்று தெரிகிறது. ஆனால், இதே நிகழ்ச்சியை விவசாயத் துறையிலும் நாம் பார்க்க முடியும். பெருவீத முதலாளித்துவ விவசாயத்தின் மேநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது: விவசாயத்தில் இயந்திரங்களை உபயோகிப்பதும் அதிகரிக்கிறது; பண மூலதனத்தின் சுருக்குக் கயிற்றில் விவசாயப் பொருளாதாரம் சிக்கிக் கொள்கிறது; அது தனது பிற்பட்ட தொழில்நுணுக்கத்தின் சுமையால் அழுத்தப்பட்டு அழிகிறது. விவசாயத் துறையில் சிற்றளவான உற்பத்தியின் சீர்குலைவுக்குரிய வடிவங்கள் வேறாயிருப்பினும், இச்சீர்குலைவு ஏற்படுவது மறுக்க முடியாத உண்மையாகும். மூலதனம் சிற்றளவான உற்பத்தியை ஒழிப்பதன் மூலம், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கும் பெரிய முதலாளிகளின் கூட்டுகளுக்கு ஏகபோக நிலையைப் படைப்பதற்கும் வகை செய்கிறது. உற்பத்தியே மேலும் மேலும் சமுதாயத் தன்மை பெறுகிறது: ஒரு முறையான பொருளாதார ஒழுங்கமைப்பிலே இலட்சக்கணக்கான, கோடிக் கணக்கான தொழிலாளர் பிணைக்கப்பட்டு விடுகின்றனார். ஆனால் அந்தக் கூட்டு உழைப்பின் உற்பத்திப் பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில முதலாளிகள் உடைமையாக்கிக் கொள்கிறார்கள். உற்பத்தியில் அராஜகம் வளர்கிறது; அதேபோல் நெருக்கடிகளும் வளர்கின்றன; சந்தைகளைப் பிடித்துக் கொள்வதற்கான ஆவேச வேட்டையும் அதிகமாகிறது; திரளான மக்களின் வாழ்க்கைக் காப்புறுதியின்மையும் அதிகரிக்கிறது. தொழிலாளர்கள் மூலதனத்தை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலையை முதலாளித்துவ முறை தீவிரப்படுத்தும் அதே சமயத்தில் ஒன்றுசேர்ந்த தொழிலாளர் எனும் மாபெரும் பலத்தையும் பிறப்பித்துவிடுகிறது. பரிமாற்றப் பண்டப் பொருளாதாரத்தின் ஆரம்ப வித்துக்களிலிருந்து, சாதாரணப் பரிமாற்றத்திலிருந்து தொடங்கி, மிக உயர்ந்த வடிவங்கள் வரையில், பெருவீத உற்பத்தி வரையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்து காட்டினார். பழையவையும் புதியவையும் அடங்கலான எல்லா முதலாளித்துவ நாடுகளின் அனுபவமும் இந்த மார்க்சியப் போதனை பிழையற்றதாகும் என்பதை ஆண்டு தோறும் மேலும் மேலும் கூடுதலான தொழிலாளர்களுக்குத் தெளிவாக நிரூபித்துக் காட்டி வருகிறது. உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப் போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.  நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை வீழ்த்தப்பட்டு "சுதந்திரமான" முதலாளித்துவச் சமுதாயம் இப்பூவுலகில் தோன்றிய பொழுது இந்தச் சுதந்திரம் உழைப்பாளிகளை ஒடுக்கவும் சுரண்டவும் அமைந்த புதியதோர் அமைப்பு முறையையே குறித்தது என்பது உடனே தெளிவாக விளங்கலாயிற்று. இந்த ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகவும் இதற்கான கண்டனமாகவும் பல்வேறு சோஷலிசப் போதனைகள் உடனே தலைதூக்கத் தொடங்கின. ஆனால் ஆரம்ப காலத்திய சோஷலிசம் கற்பணா சோஷலிசமாகத்தான் இருந்தது. அது முதலாளித்துவச் சமுதாயத்தை விமர்சித்தது, கண்டித்தது, சபித்தது; அந்தச் சமுதாயத்தை ஒழிக்க வேண்டும் என்று கனவு கண்டது; அதை விட மேலான ஓர் அமைப்பு முறையைப் பற்றி ஆகாயக் கோட்டை கட்டி வந்தது; சுரண்டுவது ஒழுக்கக்கேடான செயல் என்று பணக்காரர்களுக்கு உணர்த்த முயற்சித்தது. ஆனால் கற்பன சோஷலிசத்தினால் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை. முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமை முறையின் சாராம்சத்தை அதனால் விளக்க முடியவில்லை, முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புதிய சமுதாயத்தின் படைப்பாளியாக அமைய வல்ல சமுதாயச் சக்தியை அதனால் சுட்டிக் காட்டவும் முடியவில்லை. இதற்கிடையில், நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியையும் ஐரோப்பா முழுவதிலும், குறிப்பாக பிரான்சில், ஏற்பட்ட புயல் வேகப் புரட்சிகள், வர்க்கங்களின் போராட்டம்தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாயும் உந்து விசையாகவும் உள்ளது என்பதை மேலும் மேலும் தெளிவாக வெளிப்படுத்தின. நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கெதிராய் அரசியல் சுதந்திர இலட்சியத்துக்குக் கிடைத்த எந்த ஒரு வெற்றியும் அவ் வர்க்கத்தின் மூர்க்கமான எதிர்ப்பில்லாமல் கிடைத்து விடவில்லை. முதலாளித்துவச் சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களிடையே ஜீவ மரணப் போராட்டம் இல்லாமல் எந்த முதலாளித்துவ நாடும் ஓரளவு சுதந்திரமான, ஜனநாயக அடிப்படையில் வளர்ச்சியுற்று விடவில்லை. வேறு எவருக்கும் முன்பாக மார்க்சுக்குத்தான் உலக வரலாறு போதிக்கும் படிப்பினையை இதிலிருந்து கண்டறியவும், அந்தப் படிப்பினையை முரணின்றிச் செயல்படுத்தவும் முடிந்தது, இதில்தான் அவருடைய மேதாவிலாசம் இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய போதனைதான் அந்த முடிபாகும். நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்து கொள் ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனார், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீர வேண்டிய கட்டாயத்திலிருக்கிற வையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. மார்க்சின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்று தான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அது வரை உழன்று கொண்டிருந்த ஆன்மிக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது. அமெரிக்காவிலிருந்து ஜப்பான் வரை , ஸ்வீடனிலிருந்து தென்னாப்பிரிக்கா வரை, உலகமெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையான நிறுவனங்கள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. தனது வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதன் வாயிலாகப் பாட்டாளி வர்க்கம் அறிவொளியும் கல்வியும் பெற்று வருகிறது; முதலாளித்துவச் சமுதாயத்திற்குரிய சார்புக் கருத்துக்களினின்று தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது; தன் அணிகளை நெருக்கமாகத் திரட்டிச் சேர்த்து வருகிறது; தனது வெற்றிகளின் வீச்சை அளந்தறியக் கற்றுக் கொண்டு வருகிறது; தன் சக்திகளை எஃகு போல் திடப்படுத்தி வருகிறது; தடை செய்ய முடியாதபடி வளர்ந்து வருகிறது. 1913 மார்ச்சில் புரோஸ்வெஷேனியே, நூல் திரட்டு, இதழ் 3ல் வெளிவந்தது தொகுதி 23, பக்கங்கள் 40-4

 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்