இலக்கு 5 இணைய இதழ் இங்கே அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்
கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் ஏற்கெனவே நாங்கள் தெரிந்து வைத்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, எங்களுக்கு இன்னமும் தெரியாமல் இருக்கும், எங்கள் தொழிற்சாலை அனுபவத்தில் இருந்தும், பொருளாதாரப் போராட்டத்தில் இருந்தும் என்றைக்கும் கற்றுக் கொள்ள முடியாத, கம்யூனிச அரசியலை அதிகமாகப் பேச வேண்டும்.
கம்யூனிஸ்ட்டான, நீங்கள் இவ்வறிவை பெற முடியும், இதுவரை செய்ததைக் காட்டிலும், நூறு மடங்காக, ஆயிரம் மடங்காகக் கம்யூனிச அறிவை எங்களிடம் கொண்டுவர வேண்டியது உங்களது கடமை. -மிகவும் காட்டமாகத்தான் லெனின் தொழிலாளர் பார்வையில் கூறினார்.
“புரட்சி இயக்கத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைப்பதற்கு - சக்தியோ, வாய்ப்போ, திறமையோ இல்லாத அறிவுஜீவிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின் “தன்னியல்பை” பயங்கரவாதிகள் வழிபடுகின்றனர். புரட்சிகர இயக்கத்தையும் - தொழிலாளர் வர்க்க இயக்கத்தையும் இணைத்திட முடியும் என்கிற நம்பிக்கை இழந்துவிட்டவர்களுக்கு அல்லது நம்பிக்கை இல்லாதவர்களுக்குப் பயங்கரவாதத்தைத் தவிர வேறு பாதை தேடிக் கொள்வதில் கஷ்டமாக இருக்கிறது.” -லெனின் என்ன செய்ய வேண்டும் நூலிலிருந்து.
No comments:
Post a Comment