ஏகாதிபத்திய காலகட்டத்தில் வர்க்க அரசியல் புரிந்துக் கொள்ளும் ஒரு முயற்சியே
"பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.
முந்தைய தத்துவங்கள்
அனைத்தும் உலகத்தை விமரிசிக்க மட்டுமே செய்தன. ஆனால் மார்க்சியம் மட்டுமே
உலகத்தை விமரிசிக்கச் செய்வதோடு மாற்றவும் செய்கின்றது என மார்க்ஸ் கூறினார்.
தத்துவம், அரசியல், பொருளியல், மதம், அறிவியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிய
அனைத்தையும் விளக்குவதாக மட்டுமின்றி அத்துறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதாகவும் ஆன
தத்துவம் தான் மார்க்சியம் ஆகும்.
சரி இன்று மார்க்சியமல்லாத போக்கு ஏன்
மலிந்துக் கிடக்கிறது என்றால் உலகில் எங்கும் சோசலிச நாடுகள் இல்லை ஏகாதிபத்தியம்
சோசலிசத்தை வரவிடாமல் தடுக்க தன்னால் இயன்றவரை மார்க்சியதிற்கு எதிரான கருத்துகளை
பரப்புவதும் மார்க்சியத்தை திரிபதும் குழப்புவதும் அவர்களின் வேலையாக உள்ளது
ஏனெனில் தவறியும் உழைக்கும் ஏழை எளிய மக்கள் ஒன்றினையக் கூடாது. அதற்கான வேலையை மிக கட்சிதமாக செய்து
முடிகின்றனர். அதற்கு சாதக சூழல்
நிலவுகிறது.
ஜார்ஜ் பொலிட்சரின் வார்த்தைகள் கீழே...."வர்க்கப் போராட்டத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் சோறு கிடைக்க போராடினால் போதும் அரசியல் போராட்டம் தேவை இல்லை என்று சிலர் நினைக்கின்றனர் புரட்சிகரமான தெருச் சண்டை நடத்தினால் போதும் நிறுவனம் கட்சி ஒன்றும் தேவையில்லை என்று சிலர் நினைக்கின்றனர் அரசியல் போராட்டம் ஒன்று தான் இந்த வர்க்கப் போராட்ட பிரச்சினைக்கு பரிகாரம் தொழிற்சங்க இயக்கம் முதலான மற்றும் வேண்டியதில்லை என்று சிலர் எண்ணுகின்றனர்.ஆனால் ஒரு மார்க்சியவாதி இந்த வர்க்கப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறான் மூன்று அம்சங்களை கொண்ட ஒரே ஒரு பிரச்சினையாக பார்க்கிறான்.
1).பொருளாதார போராட்டம்
2).அரசியல் போராட்டம்
3).தத்துவ அறிவு போராட்டம் என்ற மூன்று
அம்சங்களைக் கொண்ட வர்க்கப் போர் என்று மார்க்சியவாதி கருதுகிறான்.
சீர்திருத்தவாதத்துக்கும் மார்க்சியத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்போர் பற்றி !
வர்க்கப் போராட்டத்தில் அங்கிருப்பதோடு நிற்காமல் இதனை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு அங்கீகரிக்கவும் எடுத்துச் செல்வர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார் (அரசும் புரட்சியும் லெனின்,பக்கம் 49).
முதலாளித்துவ அரசுகள் வடிவத்தில் பலதரப்பட்டவை ஆனால் இவற்றின் சாராம்சம் ஒன்றுதான். வடிவம் எப்படி இருப்பினும் இந்த அரசுகள் எல்லாம் முடிவாய் பார்க்குமிடத்து தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம் ஆகும் (அதேநூல் பக்கம் 51).
பாரிஸ் கம்யூனில் தலைமையானது அடிப்படையான ஒரு படிப்பினையை கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய் புகும்படி அவ்வளவு பிரம்மாண்டமான முக்கியத்துவம் உடையதாய் மார்க்சும் எங்கெல்சும் கருதினர்."கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை அதாவது ஏற்கனவே உள்ள அரசு பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டு விட முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிற்று". இந்த வாசகத்தில் ஒற்றை மேற்கோள் குறிப்பிட்டு காட்டப்படும் சொற்களை ஆசிரியர்கள் மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலிலிருந்து அப்படியே எடுத்து கையாளுகின்றனர். இவ்வாறாக பாரிஸ் கம்யூனில் தலைமையானது அடிப்படைதுமான ஒரு படிப்பினையை கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய் புகுத்தும்படி அவ்வளவு பிரம்மாண்டமான முக்கியத்துவம் உடையதாய் மார்க்சும் எங்கெல்சும் கருதினர் . இந்த முக்கிய திருத்தம் சந்தர்ப்பவாதிகளால் திரித்துப் புரட்டப் பெற்றிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது . கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாசகர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு, ஏன் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்கும் கூட இதன் பொருள் அனேகமாக தெரிந்து இருக்காது எனலாம். இந்தப் புரட்டலைப் பிற்பாடு, புரட்டல்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தனி அத்தியாயத்தில் நாம் பரிசீலிப்போம். மார்க்சியத்தின் புகழ்மிக்க வாக்கியத்திற்கு தற்போது சகஜமாய் அளிக்கப்படும் கொச்சையான வியாக்கியானத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறோம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மாறாய் மெதுவாய் பையப்பைய வளர்ச்சி காணும் கருத்தினை இங்கு வலியுறுத்துகிறார் என்பதாய் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு நேர் எதிரானது உண்மை. " ஏற்கனவே உள்ள அரசு பொறியமைவைத்" தொழிலாளர்கள் கைப்பற்றுவதோடு மட்டும் நிற்காமல் அதை அழித்தொழித்திடவும் நொறுக்கவும் வேண்டும் என்பதே மார்க்ஸ் கூறும் கருத்து .(அரசும் புரட்சியும் நூலிலிருந்து பக்கம் 52-52) சிலர் நினைப்பது போல் தனிநபர் களை தாக்குதோ தூக்கி பிடிப்பதோ எந்த பயனும் இல்லை. உண்மையில் அவர்களின் சித்தாந்தம் என்ன என்பதே நமது கேள்வியாக இருக்க வேண்டும்
ஒரு குடியரசு மிகமிக ஜனநாயக தன்மையுடைய குடியரசாக கூட எந்த வேஷம் போட்டாலும் இது முதலாளித்துவ குடியரசாக இருக்குமானால், இதில் நிலம், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீது தனியுடமை நிலவுமானால் சமுதாயம் முழுவதையும் தனிப்பட்ட மூலதனம் கூலி அடிமை நிலையில் வைக்குமானால், அப்பொழுது இந்த அரசு சிலர் மற்றவர்களை அடக்கி வைப்பதற்காக உள்ள இயந்திரமே ஆகும்.