நமது இயக்கத்தின் அவசர, அவசியப் பணிகள்-லெனின்

 நமது இயக்கத்தின் அவசர, அவசியப் பணிகள்-லெனின்

"எதேச்சிகாரத்தை வீழ்த்துவதே, அரசியல் சுதந்திரம் பெறுவதே ரஷ்ய தொழிலாளர் கட்சியினுடைய உடனடி அரசியல் பணி என்பதை ரஷ்ய சமூக ஜனநாயகம் (கம்யூனிஸ்டுகட்சி)பன்முறைபறைசாற்றியிருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் பிரதிநிதிகளால், உழைப்பு விடுதலைக் குழுவின் உறுப்பினர்களால் இதுதெளிவாய் இது எடுத்துரைக்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 1898 வசந்தத்தில் ரஷ்யாவின் சமூகஜனநாயக தொழிலாளர் கட்சியை நிறுவிய ரஷ்ய சமூகஜனநாயக நிறுவனங்களின் பிரதிநிதிகளால் இது வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு மீண்டும் மீண்டும் பறைசாற்றப் பட்டிருப்பினுங்கூட ரஷ்யாவில் சமூக ஜனநாயகத்தின் அரசியல் பணிகளைப் பற்றிய பிரச்சனை திரும்பவும் இப்பொழுது முன்னிலைக்கு வந்திருக்கிறது. இப்பிரச்சனைக்கு அளிக்கப்பட்ட மேற்கண்ட பதில் சரிதானா என்று நமது இயக்கத்தின் பிரதிநிதிகள் பலர்சந்தேகப்படுகின்றனர். பொருளாதாரப் போராட்டமே முதன்மையான முக்கியத்துவமுடையது என்பதாய்ப் பேசப்படுகிறது; பாட்டாளிவர்க்கத்தின் அரசியல் பணிகள் பின்னிலைக்குத் தள்ளப்பட்டும் குறுகலாக்கப்பட்டும் வரம்பிட்டுக் கட்டுப்படுத் தப்பட்டும் வருகின்றன; சுயேச்சையான தொழிலாளர் கட்சி ஒன்றை ரஷ்யாவில் அமைக்க வேண்டுமென்பது சொந்த சிந்தனை யின்றி அயலார் பேச்சை அப்படியே திருப்பிச்சொல்வதேஆகும்,தொழிலாளர்கள் அரசியலை மிதவாதிகளுடன் கூட்டு வைத்துள்ள அறிவுத்துறையினரிடம் விட்டுவிட்டுபொருளாதாரப்போராட்டத்தை மட்டுமே நடத்திச் செல்லவேண்டும் என்பதாய்க் கூட பேசப்படுகிறது. இந்தப் புதிய நெறியின் மிக அன்மைக் காலத்தியபிரகடனம் (அபாக்கியாதி பெற்ற credo) ரஷ்யப் பாட்டாளிவர்க்கத்துக்கு இன்னும் முதிர்ச்சி வரவில்லை என்பதாய் சாதித்துசமூகஜனநாயகவேலைத்திட்டத்தை அறவே நிராகரிக்கும் அளவுக்குச் செல்கிறது.

ரபோச்சயா மீசில் பத்திரிக்கை (குறிப்பாக அதனுடைய தனிஅனுபந்தம்) அனேகமாக இதேநிலையைத்தான் ஏற்கிறது. ரஷ்ய சமூகஜனநாயகம் ஊசலாட்டத்துக்கும் தன்னைத்தானே மறுப்பதற்கும் ஒப்பான சஞ்சலத்துக்குரிய ஒரு கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது.. ஒருபுறத்தில் தொழிலாளர்இயக்கம் சோசலிசத்திலிருந்து துண்டிக்கப்பட்டுவருகிறது;தொழிலாளர்கள் பொருளாதாரப் போராட்டம்நடத்த உதவி செய்யப்படுகிறது, ஆனால், அனைத்து இயக்கத்துக்கும் உரித்தான சோசலிச நோக்கங்களையும் அரசியல் பணிகளையும் அவர்களுக்கு விளக்கிக்கூற எதுவும், அனேகமாக எதுவும் செய்யப்படவில்லை. மறுபுறத்தில் சோசலிசமானதுதொழிலாளர் இயக்கத்திட மிருந்து துண்டிக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் தம்மைப் பொருளாதாரப் போராட்டத்துடன் நிறுத்திக்கொள்வதால் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் முற்றிலும் அறிவுத்துறையினராலேயே நடத்தப்பட்டாக வேண்டும் என்பதாய் ரஷ்ய சோசலிஸ்டுகள் மேலும் மேலும் பேசத் திரும்பவும் முற்படுகிறார்கள்; வருந்தத்தக்க இந்த நிலை தோன்ற, எங்கள் கருத்துப்படி, மூன்று சூழ்நிலைகள் காரணமாக இருந்துள்ளன. முதலாவதாக, ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள் தமது நடவடிக்கையின் ஆரம்பகாலத்தில் வெறும் பிரச்சாரக் குழு வேலைக்கு அப்பால் சொல்லாமல் தம்மை கட்டுப்படுத்திக் கொண்டுவிட்டனர். பொதுமக்களிடையே நாம் கிளர்ச்சி நடத்த முற்பட்டபோது மற்றொரு கடைக்கோடி நிலைக்குப் போகாதபடி எப்பொழுதும் நம்மை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக, நமது நடவடிக்கையின் ஆரம்ப காலத்தில் ;நரோத்னயா வோல்யா; உறுப்பினர்களை எதிர்த்து நமது வாழ்வின் உரிமைக்காக அடிக்கடி நாம் போராட வேண்டியிருந்தது. அரசியலை நரோத்னயா வோல்யா உறுப்பினர்கள் தொழிலாளர் இயக்கத்தி லிருந்து தனிமைப்பட்ட நடவடிக்கையாகக் கருதினர், அரசியலை முற்றிலும் சதிச்செயல் போராட்டமாகச் சிறுமை செய்தனர். இவ்வகையான அரசியலை நிராகரிக்கையில் சமூக-ஜனநாயகவாதிகள் அரசியலையே முற்றிலும் பின்னிலைக்குத் தள்ளிவிடும் கடைக்கோடி நிலைக்குச் சென்றனர். மூன்றாவதாக, சிறுசிறு உள்ளூர் தொழிலாளர் குழுக்களில் தனிமைப்பட்டு செயல்பட்ட சமூக-ஜனநாயகவாதிகள், உள்ளூர் குழுக்கள் யாவற்றின் செயல்களையும் ஒன்றுபடுத்தவும் புரட்சிப் பணி சரியான வழிகளில் நடைபெற ஏற்பாடு செய்யவும் கூடியதான புரட்சிகர கட்சி ஒன்றை அமைக்கும் அவசியத்தின் மீது போதிய கவனம் செலுத்தவில்லை. தனிப்பட்ட நடவடிக்கைக்கு இப்படி முக்கியமளித்ததானது இயற்கையாகவே பொருளாதாரப் போராட்டத்திற்கு முக்கியமளித்தநிலையுடன்தொடர்புடையதாகும். இந்த நிலைமைகளின் விளைவாய் இயக்கத்தின் ஒருபுறத்தில் மட்டும் கவனம் குவியலாயிற்று.

"பொருளாதாரவாதப் போக்கு (இதை ஒரு போக்கு என்பதாய் கூறலாமெனில்) இந்த குறுகலான தன்மையை ஒரு தனித் தத்துவத்தின் அந்தஸ்துக்குரியதாக உயர்த்த முயன்றுள்ளது".

இதன் பொருட்டு அது புதிய மோஸ்தராகியுள்ள பெர்ன்ஷ்டைன் வாதத்தையும் மார்க்சியத்தின் விமர்சனம் என்பதாய்ச் சொல்லிப் பழைய பூர்ஷ்வாக் கருத்துகளுக்குப் புதிய பெயரிட்டு விளம்பரப் படுத்தும் புதிய பாணியையும் பயன்படுத்திக்கொள்ளமுயற்சிசெய்துள்ளது. இம்முயற்சிகள்தான் ரஷ்ய தொழிலாளர் இயக்கத்துக்கும்அரசியல்சுதந்திரத்துக்கான போராட்டத்தின் முன்னணி படையான ரஷ்ய சமூக-ஜனநாயகத்துக்கும் இடையிலான இணைப்பு பலவீனமடையும் அபாயத்தை உண்டாக்கியுள்ளன. இந்த இணைப்பைப் பலப்படுத்துவதே நமது இயக்கத்தின் மிகவும் அவசர அவசியமான பணியாகும்.

தொழிலாளர் இயக்கமும் சோசலிசமும் ஒன்றுசேர்ந்துதான் சமூக-ஜனநாயகம் எனப்படுவது.

சமூக-ஜனநாயகத்தின் பணி செயலின்றி சும்மாயிருந்து தொழிலாளர் இயக்கத்தின் தனிப்பட்ட ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு சேவை ஆற்றுவதல்ல. இயக்கம் முழுவதன் நலன்களையும்பிரதிநித்துவப் படுத்துவதும், இந்த இயக்கத்துக்கு அதன் இறுதி நோக்கத்தையும் அதன் அரசியல் பணிகளையும் சுட்டிக்காட்டுவதும், அதன் அரசியல் சித்தாந்தச் சுயேச்சை நிலையைப் பாதுகாப்பதும்தான் சமூக-ஜனநாயகத்தின் பணி. சமூக-ஜனநாயகத்திலிருந்து தனிமைப் படுத்தப்படுமாயின் தொழிலாளர் இயக்கம் சிறுமைப்பட்டுவிடுகிறது. தவிர்க்க முடியாதபடி பூர்ஷ்வாத் தன்மையாகிவிடுகிறது. பொருளாதாரப் போராட்டத்தை மட்டும் நடத்திச் செல்வதன் மூலம் தொழிலாளி வர்க்கம் தனது அரசியல் சுயேச்சை நிலையை இழந்துவிடுகிறது; பிற கட்சிகளுக்கு வால்பிடித்துச் சென்று, "தொழிலாளர்களின் விடுதலையைத் தொழிலாளர்கள்தான் போராடிப் பெற்றுக் கொண்டாக வேண்டும்" எனும் மாபெரும் கோட்பாட்டுக்குத் துரோகம் இழைக்கிறது. தொழிலாளர் இயக்கம் சோசலிசத் திலிருந்து விலகி நின்று இரண்டும் தனித்தனியே சொந்தப் பாதையிலே சென்ற காலகட்டம் ஒவ்வொரு நாட்டிலும் இருந்துள்ளது. சோசலிசம், தொழிலாளர் இயக்கம் இவை இரண்டையும் இந்தத் தனிமைப்பாடு ஒவ்வொரு நாட்டிலும் பலமிழக்கவே செய்துள்ளது.

சோசலிசமானது தொழிலாளர் இயக்கத்துடன் இரண்டற கலக்கையில் மட்டும்தான் எல்லா நாடுகளிலும் இரண்டுக்கும் நிலையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சோசலிசம், தொழிலாளர் இயக்கம் இவை இரண்டின் இந்த இணைப்பானது ஒவ்வொரு நாட்டிலும் வரலாற்று வழியில், அந்தந்த நாட்டுக்குரிய தனி முறைகளில், காலம், இடம் ஆகிய நடப்பு நிலைமைகளுக்கு ஏற்ப உருவாயிற்று. ரஷ்யாவில் சோசலிசத்தையும் தொழிலாளர் இயக்கத்தையும் இணைப்பதன் அவசியம் தத்துவார்த்தத்தில் நெடுங்காலத்துக்கு முன்பே பறைசாற்றப்பட்டிருந்த போதிலும், நடைமுறையில் இவ்விணைப்பு இப் பொழுதுதான் உருவாக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் கடினமான ஒரு நிகழ்ச்சிப் போக்கு. ஆகவே இது நடைபெறுகையில் ஊசலாட்டங்களும் ஐயப்பாடுகளும் ஏற்படுவதில் வியப்பு ஏதுமில்லை.

கடந்தகாலத்திலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினை என்ன?

எதேச்சிகார அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதும் அரசியல் சுதந்திரம் பெறுவதுமே மிகவும் அவசர அவசியப் பணியாகிவிடும் படியான ஒரு நிலைமைக்கு ரஷ்ய சோசலிசத்தின் வரலாறு முழுவதும் இட்டுச் சென்றுள்ளது. நமதுசோசலிசஇயக்கம் எதேச்சிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் முழு முனைப்புடன் ஈடுபட்டது. மறுபுறத்தில் ஏனைய நாடுகளைக் காட்டிலும் ரஷ்யாவில் சோசலிச சிந்தனையானது உழைப்பாளி வர்க்கங்களின் முன்னணிப் படையான பிரதிநிதிகளிடமிருந்து பெருமளவுக்கு தனிமைப்பட்டு இருக்கிறது. என்பதையும்,இந்தநிலைமைநீடிக்குமாயின் ரஷ்யாவில் புரட்சி இயக்கம் நிச்சயம் திறனற்றதாகிவிடும் என்பதையும் வரலாறு தெளிவுபடுத்தியுள்ளது. ரஷ்ய சமூக ஜனநாயகம் நிறைவேற்ற வேண்டியுள்ள பணி இந்த நிலைமையிலிருந்துதான் எழுகிறது. சோசலிசக் கருத்துகளையும் அரசியல் உணர்வையும் பாட்டாளிவர்க்க வெகுஜனங்களுக்கு ஊட்டுவதும், தன்னியல்பாக நடந்தேறும் தொழிலாளர் இயக்கத்திலிருந்து பிரிக்கமுடியாதவாறு அதனுடன் இணைந்தமைந்த புரட்சிகர கட்சியை நிறுவுவதும்தான் இந்தப் பணி. இத்திசையில் ரஷ்ய சமூக ஜனநாயகம் எவ்வளவோ செய்திருக்கிறது. ஆயினும் இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. இயக்கத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து சமூக ஜனநாயகவாதிகளின் செயல்துறை விரிவடைந்து செல்கிறது. பணி பலதரப்பட்டதாகி வருகிறது. பிரச்சாரம், கிளர்ச்சிஇவற்றின் அன்றாடத் தேவைகள் முன்னிலைக்கு கொண்டுவரும் பல்வேறு தனிப்பட்ட பணிகளையும் செய்து முடிப்பதில் இயக்கத்தின் தொண்டர்களில் மேலும் மேலும் அதிகமானோர் தமது முயற்சிகளை ஒன்றுதிரட்டிஈடுபடுத்த வேண்டியதாகிறது. இந்நிகழ்ச்சி இயற்கையானதுதான்,தவிர்க்க முடியாததுதான். ஆனால் இது இந்த தனிப்பட்ட பணிகளும் குறிப்பிட்ட போராட்ட முறைகளும் சுயேச்சையான தனி நோக்கங்களாகி விடாமல் தடுப்பதன் மீதும் தயாரிப்பு வேலைகளே பிரதானமான தனிப் பெரும் செயற்பாடாகக் கருதப்படுவதைத் தடுப்பதன் மீதும் குறிப்பான கவனம் செலுத்தச் செய்கிறது. 

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சிக்கும் அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவதுதான் நமது முதன்மையான பணி, அடிப்படையான பணி. இந்தப் பணியைப் பின்னணிக்குத் தள்ளுபவர்கள், எல்லா தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்கு கீழ்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்கள்ஆவார்கள். ஆம், இந்தப் பணிபின்னணிக்குத்தான் தள்ளப்படுகிறது. முதலாவதாக,தொழிலாளர்இயக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப்பட்டுள்ள சதி வேலைக் குழுக்களாகிய சக்திகளை மட்டுமே அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில்ஈடுபடுத்தவேண்டுமென்று புரட்சியாளர்களுக்கு அறிவுறுத்துவோரால் இது பின்னணிக்குத் தள்ளப்படுகிறது. இரண்டாவதாக, அரசியல் பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச்செய்துவிடுவோராலும், தொழிலாளர் களுடைய வாழ்க்கையில் விதிவிலக்கான சில தருணங்களில் மட்டும், விஷேச சந்தர்ப்பங்களில்மட்டும்அவர்களுக்கு"அரசியலைத் தெரியப்படுத்துவதுதான் சரியானது, பொருத்தமானது என நினைப்போராலும், எதேச்சிகாரத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்துக்குப் பதிலாக எதேச்சிகாரத்திடமிருந்து தனிப்பட்ட சலுகைகள் சிலவற்றை பெறுவதற்கான கோரிக்கைகளைப் பரிவுடன் மேற்கொள்பவர்களாலும், இந்த தனிப்பட்டசலுகைகளுக்கானகோரிக்கைகள் எதேச்சிகாரத்துக்கு எதிரான புரட்சிகர தொழிலாளர் கட்சியின் முறையான, விட்டுக்கொடுக்காத நிலைக்கு உயரும்படி உறுதிசெய்வதற்குப்போதியநடவடிக்கைகளைமேற்கொள்ளாதிருப் போராலும் இப்பணி பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

"அணிதிரள்க!" என்று ரபோச்சயா மீசில் ஓயாமல் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிக்கிறது."பொருளாதாரவாதப்" போக்கின் ஆதரவாளர்கள் எல்லோரும் இந்த கோஷத்தை எதிரொலித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த அறைகூவலுக்கு நாமும் முழு ஆதரவுஅளிக்கிறோம் என்பதில் ஐயமில்லை;ஆனால் பரஸ்பர நலச் சங்கங்களிலும் வேலைநிறுத்த நிதிகளிலும் தொழிலாளர் குழுக்களில் மட்டுமின்றி ஓர் அரசியல் கட்சியாகவும் அணிதிரளுங்கள், எதேச்சிகார அரசாங்கத்தையும் முதலாளித்துவ சமுதாயம் முழுவதையும் எதிர்த்து உறுதியான போராட்டம் நடத்துவதற்காக அணிதிரளுங்கள் என்பதையும் இந்த அறைகூவலுடன் சேர்த்துக்கொள்ள நாங்கள் தவறமாட்டோம். இத்தகைய ஒழுங்கமைப்பு இல்லையேல் பாட்டாளி வர்க்கத்தால் ஒருபோதும் உணர்வு பூர்வமான வர்க்கப் போராட்டம் நடத்தும் நிலைக்கு உயர முடியாது. இத்தகைய ஒழுங்கமைப்பு இல்லையேல் தொழிலாளர் இயக்கம் செயலும் சக்தியுமற்றதாகவேஇருக்கவேண்டியதாகிவிடும். தொழிலாளி வர்க்கம் தன்னையும் ரஷ்ய மக்கள் அனைவரையும் அரசியல், பொருளாதார அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெறச் செய்தாக வேண்டும். - பொது நிதிகளையும் குழுக்களையும் பரஸ்பர நலச் சங்கங்களையும் தவிர வேறு எவற்றின் துணையும் இல்லையேல் தொழிலாளி வர்க்கத்தால் அதற்குரிய இந்த மாபெரும் வரலாற்றுப் பணியை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.

வரலாற்றில் எந்த வர்க்கமும் ஓர் இயக்கத்துக்கு ஏற்பாடு செய்து அதற்குத் தலைமைதாங்கிச் செல்ல வல்ல தனது அரசியல் தலைவர்களை, தனது முக்கியப் பிரதிநிதிகளை உருவாக்காமல் ஆட்சி அதிகாரம் பெற்றதில்லை. ரஷ்ய தொழிலாளி வர்க்கம் இத்தகைய நபர்களை தன்னால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்று ஏற்கனவே காட்டியிருக்கிறது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இவ்வளவு பரவலாக வளர்ந்துள்ள ரஷ்யத் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்கத்திடம் உள்ளாற்றலாக அமைந்துள்ள மாபெரும் புரட்சி சக்தியை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது. சோசலிசத்திற்காகவும் அரசியல் உணர்விற் காகவும் அரசியல் போராட்டத்திற்காகவும் பாடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஈவிரக்கமற்ற மிகக் கொடிய அரசாங்க அடக்குமுறை குறைத்துவிடவில்லை. அதிகரிக்கவே செய்கிறது என்பதை அது தெளிவுபடுத்தியுள்ளது. நமது தோழர்கள் 1898ல் நடத்திய காங்கிரஸ் நமது பணியை சரிவர வரையறுத்துக் கொடுத்தது. அது அயலார் சொற்களைத் திரும்பச் சொல்வதுடனோ, "அறிவுத்திறையினரது" ஆர்வத்தை வெளியிடுவதுடனோ நின்றுவிடவில்லை........ கட்சியின் வேலைத் திட்டத்தையும்நிறுவனஒழுங்கமைப்பையும் செயல்தந்திரத்தையும் முன்வைத்து இந்தப் பணிகளை நிறைவேற்ற நாம் உறுதியாக பாடுபடவேண்டும். நமது வேலைத் திட்டத்தின் அடிப்படை கூறுகள் குறித்து நமது கருத்துகளைஏற்கனவே எடுத்துரைத் துள்ளோம். விவரமாக அவற்றை விரித்துரைப்பதற்கு இதுவல்ல உரியஇடம். நம்மை எதிர்நோக்கும் பிரச்சனைகளில் மிகவும் அவசரமானவற்றில் ஒன்றான நிறுவன ஒழுங்கமைப்புப் பிரச்சனை குறித்து வருகிற இதழ்களில் கட்டுரைத் தொடர் ஒன்றை எழுத திட்டமிடுகிறோம். இத்துறையில் ரஷ்யப் புரட்சி இயக்கத்தின் பழைய பிரதிநிதிகளைக்காட்டிலும் நாம் வெகுவாகப் பிற்பட்ட நிலையில் உள்ளோம். இந்தகுறைபாட்டைநாம் ஒளிவுமறைவின்றி ஒத்துக்கொண்டாக வேண்டும். நமது பணி மேலும் அதிக அளவுக்கு இரகசியமாக நடைபெறுவதற்கான முறைகளை வகுத்துக் கொள்ளவும், சரியான வேலைமுறைகளையும் அரசியல் போலீசாரை ஏமாற்றுவதற்கும் போலீஸ் கண்களில் அகப்படாது தப்புவதற்குமான தக்க முறைகளையும் நன்கு தெரியப்படுத்தவும் நாம் முழுமுயற்சி எடுத்துக்கொண்டாக வேண்டும். ஓய்வு நேரமான மாலைப் பொழுதுகளை மட்டுமின்றி தம் வாழ்நாள் முழுவதையும் புரட்சிக்காகப் பணித்துக்கொள்ளக் கூடியவர்களை நாம் பயிற்றுவிக்க வேண்டும். நமது பணியின் பல்வேறு வடிவங்களிலும் கண்டிப்பான உழைப்புப் பிரிவினையை அனுசரிக்க இடம் தரும்படியான பெரிய நிறுவனத்தை நாம் கட்டியமைத்தாக வேண்டும்.

முடிவில் செயல்தந்திரப் பிரச்சனைகள் சம்பந்தமாகப் பின்வருவதைக் குறிப்பிடுவதுடன் நிறுத்திக் கொள்கிறோம். சமூக ஜனநாயகம் தனது கைகளுக்கு விலங்கிட்டுக் கொள்ளவில்லை; அரசியல் போராட்டத்துக்காக முன்கூட்டியே உய்த்துணர்ந்து முடிவு செய்யப்பட்ட ஒரே திட்டம் அல்லது முறைக்குள் அது தனது நடவடிக்கையைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. கட்சியிடமுள்ள சக்திகளுக்குப் பொருத்தமாகவும் அந்தந்த நிலைமைகளில் சாத்தியமான சிறந்த பலன்களை அடைய உதவுபவனாகவும் இருக்கும் பட்சத்தில் எல்லாப் போராட்ட முறைகளையும் அது அங்கீகரிக்கிறது. பலம் மிக்கதாக ஒழுங்கமைந்த ஒரு கட்சி நம்மிடம்இருக்குமாயின், தனியொரு வேலை நிறுத்தமே அரசியல் ஆர்ப்பாட்டமாக, அரசாங்கத்தின் மீதான ஒரு அரசியல் வெற்றியாக மாற்றிவிடலாம். பலம் மிக்கதாக ஒழுங்கமைந்த ஒரு கட்சி நம்மிடம் இருக்குமாயின், தனியோர் இடத்தில் ஏற்படும் எழுச்சி வெற்றிகரப் புரட்சியாக வளர்ந்துவிட முடியும். தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக அரசாங்கத்துடன் நடைபெறும் போராட்டங்களும் நாம் வென்றுகொள்ளும் குறிப்பிட்டசலுகைகளும்பகைவனுடனான சிறிய கைகலப்புகளே, இடை வழிகளில் பகைவனுடன் ஏற்படும் மோதல்களே என்பதையும், முடிவான போர் இனிமேல்தான் நடைபெறப்போகிறது என்பதையும் நாம் மனதில் கொண்டாக வேண்டும் பகைவனது கோட்டை அதன் முழு பலத்துடன் நம் எதிரே வானுயற உயர்ந்து நிற்கிறது, நம்மீது குண்டுமழை பொழிந்து நமது தலைசிறந்த வீரர்களை வீழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கோட்டையை நாம் பிடித்தாக வேண்டும். விழித்தெழும் பாட்டாளி வர்க்கத்தின் எல்லா சக்திகளையும் ரஷ்யப் புரட்சியாளர்களின்எல்லாச் சக்திகளுடனும் ஒன்றுபடச் செய்து ரஷ்யாவில் ஜீவ ஆற்றலும் நேர்மையும் கொண்ட யாவற்றையும் கவர்ந்திழுக்கக் கூடிய கட்சியாக இணைந்திடுவோமாயின் நிச்சயம் நாம் இந்தக்கோட்டையைப் பிடித்துவிடுவோம். "கோடிக்கணக்கான தொழிலாளர்களின்திண்கரம்உயர்த்தப்படும், படைவீரர்களின் துப்பாக்கி முனைகளால் பாதுகாக்கப்படும் எதேச்சிகார ஒடுக்குமுறை தகர்ந்து தவிடு பொடியாக்கப்படும்." என்று ரஷ்யப் புரட்சியாளரான தொழிலாளர் பியோத்தர் அலெக்சேயெவின்மாபெரும்தீர்க்கதரிசனம் அப்பொழுது நிறைவேறும்.

1900 அக்டோபரிலும் நவம்பர் ஆரம்பத்திலும் எழுதப்பட்டது. லெனின் நூல்திரட்டு தொகுதி 4,பக்கங்கள் 371-377 அதிலிருந்து எடுத்தாளப்பட்டவையே.

ரஷ்யாவில் கம்யூனிச இயக்கம் உருவாகி விரிவடைந்து வெற்றியடைய வேண்டுமானால் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் என்ன செய்ய வேண்டும் என்பதற்காக தோழர் லெனின் பல வழிமுறைகளை வெளிப்படுத்திஅங்குள்ளகம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டினார். அந்த வழிகாட்டுதல்கள்ரஷ்யகம்யூனிஸ்டுகளுக்குமட்டுமல்லாமல்உலகம்முழுவதிலுமுள்ளகம்யூனிஸ்டுகளுக்கு இன்றும் வழிகாட்டுவதாகவே உள்ளது. இந்திய கம்யூனிஸ்டுகளுக்கும் லெனின் இப்போதும் வழிகாட்டிக்கொண்டே இருக்கிறார். 

இந்திய கம்யூனிஸ்டுகளுக்கும் லெனின் இப்போதும் வழிகாட்டிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் லெனினது வழிகாட்டலில் ஒன்றுதான் மேலே கண்ட லெனினது கட்டுரையாகும். இந்த கட்டுரையில் மிகவும் முக்கியமாக ஒரு நாட்டில் கம்யூனிச இயக்கம் உருவாகி வளர்ந்து விரிவடைந்து வெற்றிபெற வேண்டுமானால், சோசலிச இயக்கமும், தொழிலாளர்இயக்கமும்ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார்.

சோசலிச இயக்கம் என்றால் என்ன?

சோசலிசம் மற்றும் கம்யூனிசம் பற்றிய கருத்துக்களையும், கோட்பாடுகளையும், தத்துவங்களையும் உருவாக்கி முன்வைத்த கம்யூனிச ஆசான்களான காரல்மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மற்றும் மாவோவின் கருத்துகளை கம்யூனிஸ்டு தலைவர்கள் கற்று உள்வாங்க வேண்டும். அவ்வாறு பெற்ற கம்யூனிச அறிவை அவர்களால் உருவாக்கப்படும் கம்யூனிச அமைப்பிலுள்ள உறுப்பினர்களுக்கு போதித்து அவர்களது சோசலிச அறிவை வளர்க்க வேண்டும். இத்தகைய அறிவைப் பெற்ற கம்யூனிஸ்டு அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் உழைக்கும் மக்களிடம் இந்த சோசலிச கருத்தை கொண்டுசென்று சோசலிசத்தின் மீது உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதுதான் தங்களது லட்சியம் என்ற உணர்வை உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தி அதற்காக உறுதியுடன் போராடுவதற்கான உணர்வை உழைக்கும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இதனை ஒரு இயக்கமாக கம்யூனிஸ்டுகள் நடத்திட வேண்டும். இத்தகைய இயக்கத்தையே சோசலிச இயக்கம் என்று லெனின் குறிப்பிடுகிறார்.

தொழிலாளர் இயக்கம் என்றால் என்ன?

மேலே குறிப்பிட்டது போன்ற சோசலி இயக்கம் இல்லையென்றாலும், கம்யூனிஸ்டு கட்சி என்ற ஒரு கட்சி இல்லை என்றாலும் விவசாயிகளும், தொழிலாளர்களும், நெசவாளர்களும் அவர்களது கூலி உயர்வுக்காகவும், பிற சலுகைகளுக்காகவும் தாங்களாகவே ஒன்றுபட்டு பண்ணையார்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு எதிராகவும், முதலாளிகளையும் பண்ணையார்களையும் பாதுகாக்கும் அரசாங்கங்களுக்கு எதிராகவும் போராடுவார்கள். உதாரணமாக இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் அல்லாத பிறரும் தொழிலாளர்களையும் விவசாயி களையும் திரட்டி சங்கம் அமைத்து செயல்படுவதை நாம் பார்க்கலாம். அதேபோல் எந்தவகையான தலைமை இல்லாமலும் பாதிக்கப்படும் மக்கள் தன்னியல்பாகஒன்றுபட்டுபோராடுவதையும் நாம் பார்க்கலாம். ஆகவே கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கினால் மட்டுமே உழைக்கும் மக்கள் போராடுவார்கள்என்பதல்ல. கம்யூனிஸ்டுகளின் தலையீடு இல்லாமலும் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவார்கள் என்பது வரலாறு மட்டுமல்ல, இன்றும் அது எதார்த்த உண்மையாகும். இத்தகைய உழைக்கும் மக்களின் போராட்டங்களையே தொழிலாளர்களின் போராட்ட இயக்கத்தையே, தொழிலார் இயக்கம் என்று லெனின் குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் ஒரு பக்கத்தில் தொழிலாளர் இயக்கம் செயல்பட்டுக்கொண்டு இருந்தது. மறுபக்கத்தில் மார்க்சிய படிப்புக் குழுக்களின் மூலம் சோசலிச இயக்கமும் செயல்பட்டுக் கொண்டு இருந்தது. இந்த இரண்டு இயக்கங்களும் தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டு இருந்தது. இந்த இரண்டு இயக்கங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே லெனினது கொள்கையாகும். சோசலிச இயக்கம் போன்ற இயக்கம் இல்லாமலேயே தொழிலாளர் இயக்கம் இருக்கும். ஆனால் தொழிலாளர் இயக்கம் போல சோசலிச இயக்கம்தானாக உருவாகி வளர முடியாது. அத்தகைய சோசலிச இயக்கத்தை வர்க்க உணர்வுகொண்ட கம்யூனிஸ்டுகளின் உணர்வுப்பூர்வமான தன்னலங்கருதாக கம்யூனிஸ்டுகளின்முன்முயற்சியினாலேயே சோசலிச இயக்கத்தை உருவாக்கி வளர்க்க முடியும். அத்தகைய வர்க்க உணர்வுள்ள, தியாக உணர்வுள்ள கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவில் இருந்தார்கள். அவர்களின் கடினமான முயற்சியாலும் தியாகத்தாலும் ரஷ்யாவில் சோசலிச இயக்கம்உருவாக்கப்பட்டுவளர்க்கப்பட்டது. ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் இந்த அனுபவத்தை சீனக் கம்யூனிஸ்டு கட்சி எடுத்துக்கொண்டு சோசலிச கல்வியை போதிப்பதற்காக பலபள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி சீன உழைக்கும் மக்களுக்கு சோசலிச கட்சிக்கல்வியை போதித்து சோசலிச இயக்கத்தை உருவாக்கி வளர்த்தார்கள். ஆகவேதான் ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றார்கள்.

இவற்றோடு ஒப்பிடும்போது இந்திய கம்யூனிஸ்டுகளில் ஒருவரும் அல்லது எந்த கம்யூனிச அமைப்பும் இத்தகைய சோசலிச இயக்கத்தை உருவாக்கி வளர்க்கவில்லை. இங்கே சோசலிச இயக்கமே உருவாகவில்லை என்பதால் சோசலிச இயக்கத்தையும், தொழிலாளர் இயக்கத்தையும் இந்தியாவில் இணைப்பது என்ற கேள்வியே இதுவரை இங்கு எழுப்பப்படவில்லை. ஆகவே நாம் உண்மையில் இங்கே கம்யூனிச இயக்கத்தை உருவாக்கி வளர்க்க வேண்டும் என்று எண்ணுபவர்களாக இருந்தால், லெனினது வழிகாட்டலின்படி இங்கே சோசலிச இயக்கத்தையும் தொழிலாளர் இயக்கத்தையும் இணைக்கும் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். அதற்கு நாம் இங்கு இதுவரை உருவாகாமல் இருக்கும் சோசலிச இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற கடமைக்கு முன்னுரிமை கொடுத்து நமது கம்யூனிச பணியை சோசலிசஇயக்கத்தைஉருவாக்குவதிலிருந்து தொடங்க வேண்டும்.

முதலில் மார்க்சிய ஆசான்களது படைப்புகளைகற்றுபுரிந்துகொள்வதற்கான ஆற்றல் உள்ள மற்றும் பாட்டாளி வர்க்க உணர்வுள்ளவர்கள் மார்க்சிய ஆசான்களது படைப்புகளை கற்றுத் தேறவேண்டும். இரண்டாவதாக சோசலிசத்தின் கோட்பாடுகளில் ஆழ்ந்த அறிவு பெற்ற இவர்கள், முன்னணிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு போதித்து முன்னணிகளின் சோசலிச அறிவை வளர்க்க வேண்டும். மூன்றாவதாக சோசலிச அறிவு பெற்ற முன்னணிகள் உழைக்கும் மக்களிடம் இந்த சோசலிச கோட்பாடுகளை கொண்டு சேர்த்து உழைக்கும் மக்களிடம் சோசலிசத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு இந்தியாவில் சோசலிசஇயக்கத்தை நாம் உருவாக்கி வளர்த்து அதனை தொழிலாளர் இயக்கத்தோடு இணைத்தால் மட்டுமே இங்கே கம்யூனிச இயக்கம் உருவாகி வளர்ந்து வெற்றியடைய முடியும் என்பதுதான் லெனினிய கொள்கையாகும். ஒரு தொழிலாளி சோசலிச உணர்வுள்ளவராக இருப்பார் என்றால் எவ்வளவு தோல்விகளை சந்தித்தாலும் அந்த தொழிலாளி மனம் தளரமாட்டார், சோசலிச இயக்கத்திலிருந்து பின்வாங்க மாட்டார் மேலும் சோசலிச கொள்கையை கைவிட்டுவிட்டு பிற்போக்கு ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். இதுதான் ரஷ்ய, சீன கம்யூனிஸ்டுகளின் வரலாறாகும். ஆனால் இந்தியாவில் லெனினியத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுவதாக சொல்லுபவர்கள் இந்த லெனினிய வழிகாட்டுதலை அறிந்திருக்க வில்லை என்றே கருதுகிறோம். அதன் காரணமாகவே இங்குள்ள கம்யூனிஸ்டுகள் இங்கே ஒரு சோசலிச இயக்கத்தை உருவாக்கி வளர்க்கத் தவறியிருக்கிறார்கள். அதன் காரணமாகவே இங்கே கம்யூனிச இயக்கம் வளரவில்லை, மாறாக கம்யூனிச அமைப்புகள் பலவாறு சிதறுண்டு போனது. கம்யூனிச இயக்கத்தின் மீதே உழைக்கும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். கம்யூனிச அமைப்புகளை ஆதரித்துவந்த உழைக்கும் மக்களில் பலர் முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளையும் மத வெறியர்களையும் கூட பின்பற்றும் நிலைக்குச் சென்றுவிட்டனர். இதற்கு முதன்மையான காரணம் உழைக்கும் மக்களிடம் கம்யூனிஸ்டுகள் சோசலிச உணர்வை ஊட்டத் தவறியதேயாகும். ஆகவே உழைக்கும் மக்களிடம் கம்யூனிஸ்டுகள் நம்பிக்கை பெற வேண்டுமானால் உடனடியாக இங்கே ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகளால் உருவாக்கி வளர்க்கப்பட்டது போல ஒரு சோசலிச இயக்கத்தை உருவாக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என்று "இலக்கு" தனது கருத்தை முன்வைக்கிறது........ தொடரும்...

(வெகுஜனங்களிடையே கட்சியின் பணி என்ற லெனினது நூலை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது) -தேன்மொழி

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்