ஜாதியம் அன்றும் இன்றும் ஓர் மார்க்சிய தேடுதல்

 இந்திய சாதி அமைப்பு முறையை ஆராய்ந்த பலரும் பல்வேறு கருத்துகளை முன் வைத்தாலும், மார்க்சிய தத்துவம் மட்டுமே இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கி கூறியதாகும்.

அதாவது உலகில் உள்ள மற்றச் சமூகஅமைப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு.

இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும், ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.

நிலபிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டது இன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் கோட்பாட்டு அளவில் மறுக்கப் பட்டுள்ளது.

சாதியை ஆரியர்கள்தான் (பிராமணர்கள்தான்) உருவாக்கினர் என்பதோ திராவிடர்கள் தமிழர்கள்தான் உருவாக்கினர் என்பதோ அறிவியல் பூர்வமான (இயக்கவியல் பொருள்முதல்வாத) மார்க்சிய விரோதமான ஒன்றே.

சாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக் கொண்டு சூழலுக்கேற்ப்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்ற போது அதற்க்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது இந்து மத பிராமணியமே அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கி உள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுகமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது.

நிலப்பிரபுத்துவத்திற்க்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே சாதி கருக் கொண்டிருந்தாலும் அவை திடமாக நிலபிரபுத்துவத்தில்தான் உருக் கொண்டது.

சாதியம் என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்லாஇவை தனி உடைமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும், அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றது.

இந்தியாவில் சாதியின் தோற்றம் வளர்ச்சி இருப்பு

இந்தியாவில் சாதியின் தோற்றம் வளர்ச்சி இருப்பு பற்றி ஒரு தேடுதல்  இங்குள்ள சிலர் ஜாதி ஒழிந்தால்தான் வர்க்க ஒன்றுமைக்கு சாத்தியம் நீங்கள் ஜாதியை பேசாமல் ஜாதியை பேச முடியாது என்கின்றனர். ஆக ஜாதியை பலர் இதுவரை தன்னால் இயன்றவரை தேடி உள்ளனர் அதில் சில கீழே:-

சாதியத்தின் பல்வேறு பார்வை

சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் சில கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:

1. மதக் கோட்பாடு (religious theory)

2. தொழிற் கோட்பாடு (occupational theory)

3. இனக் கோட்பாடு (racial theory)

4. அம்பேத்காரின் கூற்று

மதக் கோட்பாடு

சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையைத் தோற்றுவித்தது.

சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும் ரிக் வேதம்,மனு தர்மம்,பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன.பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது எனக் குறிப்பிட்டாலும்,பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.

தொழிற் கோட்பாடு

சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தது என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன.

இனக் கோட்பாடு

ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர். 

அம்பேத்கரின் கூற்று

ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்.

இந்திய சமூக அமைப்பை வர்க்கங்களாக ஒன்றிணைக்க முடியாது என்று அம்பேத்கார் முதல் பலரும் வற்புறுத்தி வந்தனர்இன்னொரு பக்கத்தில் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் தொடங்கி பல்வேறு விதமான போராட்டங்களில் மக்கள் ஜாதிகளை கடந்து தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி உள்ளனர் என்பதை கண்கூடாக காணலாம்.  இவை ஜாதிகள் இங்கே தடையாக இல்லை என்பது மக்கள் போராட்டங்களை கட்ட கட்டமைத்த போது கண்கூடான உண்மை அல்லவா?

சரி, ஜாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது, அகமணமுறை ஏற்றுக்கொண்டது.

இச் சமூகத்தில் சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவு இன்னொரு பிரச்சினை. உழைப்புப் பிரிவினையும் உபரி மதிப்பும் தோன்றிய பொழுதே வர்க்கங்கள் தோன்றிவிட்டன. எனவே சாதியே வர்க்கம் அமைந்தவை ஆனால் சாதிய அமைப்பு வேலைப்பிரிவினை வடிவமாகவும் வாழ்வியல் சிந்தனைகள் கூறகவும் அமைந்த பின்னர் ஜாதி என்பது வர்க்க வேறுபாடும் வெளிப்படையாக அமைந்துவிடுகிறது.  குறிப்பாக ஒரு  காலத்தில் சாதி என்பது வர்க்க அமைப்பு ஆக இருந்திருக்கும் அதாவது ஒரு சாதி என்பது ஒரு வர்க்கமாக இருந்திருக்கும். ஆனால் நிலவுடமை கூறுகள் தகர்ந்து முதலாளித்துவ கூறுகளின் வளாகத்தில் சாதிக்குள்ளே வர்க்கங்களாகி விட்டது ஒரே சாதிக்குள்ளே ஒடுக்குபவனும் ஒடுக்கபடுபவனும் வந்து விட்ட பின் முன்னில் போலன்று இன்றைய சமூகத்தில் சாதி நிலை. இனி சாதியை இனி வர்க்கமாக பார்க்க முடியாது…. வர்க்க அடிப்படையில் அணுக வேண்டிய தேவை நமக்கு உள்ளது.

சாதியமைப்பு பற்றிய கருத்தாக்கங்கள்  நான்கு விதமான ஆய்வு விளக்கங்களை கல்வியாளர் மட்டத்தில் பாமரமக்கள் மட்டத்திலும் நிலவுகின்றன இவை பற்றிப் பார்ப்போம்.

முதலாவதானது மிகவும் பரவலாக இருக்கிறது இவை ஆரிய சித்தாந்தமாகும் இக்கருத்தின் படி ஆரிய படையெடுப்பாளர்கள் சுதேசி மக்களை அடிமைப்படுத்திய விதத்தில் மூலமாக சாதிகள் தோன்றின என்பதாகும் இதனை ஒருசில மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொண்ட போதிலும் இதற்கு அடிப்படை தோற்றுவாய் ஜோதிராவ் புலே பெரியார் ஆகியோருடன் எழுத்துக்களும் பிராமண எதிர்ப்பு இயக்கமும் ஆகும். சாதிகள் கடவுளால் படைக்கப்பட்டது அவற்றை மாற்ற இயலாது என்ற பழமையான மதவாதிகள் கூறும் விளக்கத்தை காட்டிலும் முற்போக்கான கருத்தாக இது உள்ளது.

விவாதத்தின் அடிப்படையில் ஜாதிகள் வரலாற்று அடிப்படையில் தோன்றும்என்றும் ஆரியர் வரவுக்கு முன் வாழ்ந்த ஆதிக்குடிகள் அவர்கள் சமூக வாழ்வு வாழ்ந்தனர் என்றும் சாதி ஒடுக்கு முறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் அந்த சமத்துவ மீண்டும் வளர செய்ய வேண்டும் என்று கூறுகின்றதுஎனினும் இச்சித்தாந்தம் இனவாத கருத்தாக்கம் கொண்டுள்ளது 

சாதியத்தின் ஆரம்ம காலம்

பண்டைய காலத்திலே மானுட சமூகம் சிறு சிறு குழுக்களாக வாழ்க்கை நடத்தியது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை தாங்களே தேடிக் கொண்டனர் உழைப்புப் பிரிவினை சமமாக இருந்தது ஆண்கள் வேட்டையாடினார்கள் உணவுப் பொருட்களை சேகரித்தனர். பெண்கள் உணவு தயாரித்தனர் வீட்டை கவனித்தனர் அந்தந்த துறையில் அவர்கள் மேலோங்கிருந்தந்தனர். அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. வேட்டையாடிய பொருள்களையும் இயற்கை உணவுப் பொருளையும் சேகரித்து எல்லாவற்றையும் பொதுவில் அனுபவித்தனர்.

இதனை உணவு சேகரிக்கும் நிலை (Food Gathering stage) என்பர் மானிடவியல் அறிஞர்கள்.

 காட்டில் விலங்குகளை கண்டான் தானும் வளர்க்கக் கற்றுக்கொண்டான் அதனால்அதுஒருதொழிலாகியது.கால்நடை வளர்ப்பும் குலங்கள் அதிக பொருள் உற்பத்தி கால்நடை மூலம் பலவிதங்களில் மனித தேவைகளை பயன்படுத்தும் ஒரு நிலையை உண்டாக்கியது.

 ஆண்கள் வேட்டையாடுதல் ஈடுபடும்போது பெண்கள் கால்நடைகளை பராமரித்தலும் அதனை மேம்படுத்தும் ஈடுபட்டதால் சமுதாய பொருளாதார நிலையில் பெண்களுக்கான ஒரு நிலை இருந்தது.கால்நடைகளுக்காகவே பல குழுக்களுக்கிடையேசண்டைகள்மூண்டது,பல தடவை தங்களது தொழிலான கால்நடைகளை சண்டையிட்டு மீட்டனர்.

 அந்தக் கூட்டு சமுதாயத்தில் உற்பத்தித் திறன் மிகக்குறைவாகவே இருந்தது எனவே போரில் பிடித்து வீரர்களை என்னசெய்வது கூட்டு சமூகத்தில் அவர்களை கொல்வதை தவிர வேறு வழி இல்லை.

கிமு300ஆண்டுகளில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக அறிகிறோம். தமிழ்நாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளும் இரும்பின் பயன்பாட்டுக்கு சான்று பகிர்கின்றன. அதிசயம் நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில்  இரும்பு கத்திகள் கூர்வாள்கள், தீட்டிய அம்புகள், சிறு கோடாரி, கதிர் அரிவாள்கள்,  உளி, கைப்பிடிப்புள்ள இருமுனை வாள்கள், இரும்புத்தூண்டில்,நீள்கைப்பிடிக்கரண்டி,மரம் செதுக்கும் கருவிகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவை இன்றளவும் சென்னை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 வேளாண்மையில் இரும்பு கருவிகளின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தி பெருகி கொண்டு போயிற்று இன்னும் திருத்தமான கருவிகளுடன் மனிதனின் உற்பத்தி திறனும் புதிதான நிலங்களும் சேர்ந்துகொண்டு உற்பத்தியில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது இந்த பாய்ச்சல் சமுதாய மாற்றங்களையும் உள்ளடக்கிக் கொண்டு வெளி வரலாயிற்று. கால்நடைகளில் தங்கள் இன்றியமையாத வாழ்க்கை ஆதாரமாக பெருமைகளை நிலை மாறியது. விலங்குகளை சார்ந்து இருக்க வேண்டிய ஓடுநர் நிலையிலிருந்து மனித சமுதாயம் தன்னை விடுவித்துக் கொண்டது. பெரிய காட்டில் அலைந்து திரிந்து வேட்டையாடி சேகரிக்கும் பொருள்களையும் விட கால்நடைகளை மேய்த்து அழைந்து திரிந்து அதன் மூலம் கிடைத்த உற்பத்திப் பொருள்களை விடவும் சிறிய  நிலத்தை திருத்த முடியாத கருவிகளை வைத்துக் கொண்டு உழுது பெற்ற உற்பத்திப் பொருள்களை ஒரே இடத்தில் நிறைய பொருள்கள் கிடைத்துள்ளன. இது எண்ணிக்கை பெருகப்பெருக தன்மை ரீதியிலேயே மாற்றம் பெற்ற சமூகத்திற்கு வேளாண்மைக்கு வழிகாட்டியது.

 கால்நடைகளை வளர்த்தல் என்பது வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையை விட சற்று முன்னேறிய நிலை என்றாலும் கூட இரண்டு தொழில்களுக்கும் இடம் விட்டு இடம் நகர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அங்கே மானுட சமுதாயம்நாகரிகஉலகில்புகுந்தது. வேளாண்மைக்கு தேவையான கைவினைத் தொழில்கள் தோற்றம் பெறலாயின இதை தொடர்ந்து ஏற்பட்ட உற்பத்தி மாற்றங்கள் மனிதனின் உழைப்பு சக்தியை பெருகியது இப்போது மனிதன் தன் தன் தேவைகளுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்வதற்கான தன் உற்பத்தித் திறனை வளர்த்துக் கொண்டன. இந்நேரத்தில் வேளாண்மை கைத்தொழில் என்று இரு மாபெரும் கிளைகள் உற்பத்தியில் பிரிவினையாக ஏற்பட்டதில் இருந்து நேரடியாக பரிமாற்றத்துக்கான உற்பத்தி செய்யும் முறை அதாவது  சரக்கு உற்பத்தி முறை பிறந்தது . அதன் உடன் நிகழ்வாகவே வியாபாரம் அதனுடைய உண்மையான பொருள் வந்து சேர்ந்தது பணக்காரன் ஏழை என்ற வேறுபாடும் புகுந்தது.

 புதிய வேலைப் பிரிவினைகளின் கீழே சமுதாயம் வர்க்கங்களாக பிரிந்தது,  கூட்டு சமுதாயத்தில் இருந்த பல்வேறு குடும்பத் தலைவர்களின் சொத்துடமைகளில் ஏற்பட்ட மாறுபாடுகள் அதாவது மேலே மேலே ஏறி வரும் தனிச்சொத்து கூட்டுச் சமுதாய அமைப்பில் முதல் உடைப்பை ஏற்படுத்தியது.  தொடக்ககால கைத்தொழில்கள் சரக்கு உற்பத்திமுறை இவற்றோடு மக்கள் தொகையும்பெருகியது,இத்துடன் செல்வ விசயத்தில் பெருத்த வேறுபாடுகள் சேர்ந்தன. இதற்கு முன்னால் கூட்டுச் சமுதாய அமைப்புகுள் உயிரோட்டமாக  நிலவிய ஜனநாயக முறைக்குள்ளேயே இச் செல்வ வேறுபாடுகள் எல்லாம் ஒரு தனிப்பட்ட பிரபுத்துவ அம்சத்தை தோற்றி வைத்தது.

 இன்னும் நன்கு விளையக்கூடிய முறையிலான உற்பத்தி சாதனங்களை நிலங்களை விஸ்தீரணம் செய்ய வேண்டியுள்ளது எனவே இடத்தை அதாவது நிலத்தை  பிரதேசத்தை மையமாகக் கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது.

 இந்தக் காலத்தில் ஒரு நிலம் இன்னொரு நிலத்தோடு கலந்து  வரலாற்று நிர்ப்பந்தமாக இணைக்கப்படும் போது பிரதேசமாய் வளர்கிறது.

 கூட்டு சமுதாயத்தில் கால்நடையை கவர்தல் களவாடி செல்ல நடந்த போர்கள் போல இப்பொழுது நிலங்களை அகபறிபதற்கான போர்கள் நடைபெற்றன . அதாவது உற்பத்தி சாதனமாகிய நிலத்தை கொள்ளையடிப்பதற்காக போர்கள் நடைபெற்றன.

 இப்போரில் நடத்திய தலைவர்கள் போர் வீரர்களாகவும் குடிகளையும் நிலங்களையும் காக்க போர்களின் தேவையும் காப்பதற்கான தொழிலும் மேற்கொண்டனர்.

எங்கெல்ஸின்வார்த்தைகளில்சொன்னாள்," செல்வத்தின் பால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக சமுதாய அமைப்பு பாதிக்கப்பட்டது பரம்பரை பரப்புவதற்கும் அரசும் அரசு முறைக்கும் கொழுந்துகள்துளிர்த்தன,அடிமைமுறை போர்க்கைதிகளோடு  நின்று இருந்தபோதிலும்,ஏற்கனவே குலத்தின் உறுப்பினர்களையும் கூட அடிமைப்படுத்துவதற்கு வழிவகைசெப்பனிட்டுவந்தது.கால்நடைக்கு நடைபெற்ற சண்டைகள் நிலத்துக்கான திட்டமிட்ட படையெடுப்புகளாக இழிந்து ஒரு முறையான தொழிலாகிவிட்டது.

 உயர்விலும் உயர்வான சம்பத்தாக செல்வம் புகழப்பட்டது..... தனிநபர்கள் புதிதாக சேர்த்த சொத்தை பாதுகாக்கவும் அதைப் பெருக்குவதற்கும் படிப்படியாக வளர்ந்து வரும் புதிய வடிவங்களுக்கும் பொதுமக்கள் அங்கீகாரம் எனும் முத்திரையைப் பதிக்க வைப்பதற்கும் வேண்டிய ஒரு நிறுவனம் இல்லாதிருந்தது. சமுதாயத்தில் ஆளும் வர்க்க பிரிவினையை நிரந்தமாக வதோடு மட்டுமல்லாமல் உடைமை அற்றவர்களை உடைமை உள்ளவர்கள் சுரண்டுவதற்கான உரிமையை நிரந்தரமாகும் நிறுவனம் வர தொடங்கியது அதுதான் அரசு என்பதுபண்டைய காலத்திலே மானுட சமூகம் சிறு சிறு குழுக்களாக வாழ்க்கை நடத்தியது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை தாங்களே தேடிக் கொண்டனர் உழைப்புப் பிரிவினை சமமாக இருந்தது ஆண்கள் வேட்டையாடினார்கள்உணவுப்பொருட்களைசேகரித்தனர். பெண்கள் உணவு தயாரித்தனர் வீட்டை கவனித்தனர் அந்தந்த துறையில் அவர்கள் மேலோங்கியிருந்தனர் அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன வேட்டையாடிய பொருள்களையும் இயற்கை உணவுப் பொருளையும் சேகரித்து எல்லாவற்றையும் பொதுவில் அனுபவித்தனர்.

நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலத்தின் மேல் பரம்பரையாக உரிமை கொண்டவர் தம்மை உயர்ந்த ஜாதி ஆக்கிக் கொண்டனர்.அவர்களது நிலத்திலே உழைப்பவர் அவர்களது பிற சேவைகளை கவனித்தவர் யாவரும் சேவையின் அத்தியாவசியத்தை ஒட்டி பல்வேறு சமூக அமைப்பினர் ஆக பல படிகளில் பிரிக்கப்பட்டனர் . சொத்துடையவர்க்கு மதிப்பு உழைக்க வேண்டியதில்லை. உடல் உடலுழைப்பாளர் குறைவாக கருதப்படுகின்ற இது ஜாதி அமைப்பின் அடிப்படை நோக்கம் உழைப்புச் சுரண்டலே,கிராமங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் உற்பத்தி சாதனங்களை கொண்ட நிலப்பிரபுக்களின் தயவில் வாழ நேரிட்டது. தன் குழந்தைகளைப் பிரித்து பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட வேலையில் நிலப்பிரபு செய்வித்தான் ஜாதி அமைப்பிலேயே இப் பழக்கம் இன்றும் தொடர்கிறது தனித்தனி சமூக அமைப்பாக வாழ்கின்றனர்.

நிலப்பிரபுத்துவம் உடைந்தும் இக்காலத்திலும் தனி சமூக அமைப்பாகவே ஜாதிகள் கருதப்படுகின்றன நடைமுறையில் ஆதிக்கம் குறைந்த போதும் சிந்தனை பாகுபாடு இன்றும் நிலவுகிறது.

தொழிலாளர்களாக சுரண்டப்படுவது மட்டுமல்ல சாதியின் பெயராலும் இவர்கள் சுரண்டப்படுகின்றனர் அடக்கி ஒடுக்கப் படுகின்றனர்.

இயந்திர உற்பத்தி வளர்ச்சி ஒன்றே சாதி அமைப்பு ஓரளவு குறைக்க வல்லது பின்னர் முதலாளி தொழிலாளி என்ற பிரிவில் சுரண்டல் நடைபெறும் அதன் பின் நடைபெறும் சோசலிச புரட்சி ஒன்றே சாதி அமைப்பிற்கும் முடிவுகட்ட கூடியது அங்கும் இக்கருத்தை ஒழிக்க பல ஆண்டுகள் ஆகலாம் ஏனெனில் இது சிந்தனையுடன் ஒன்றி இருப்பதாகவும்.

 சாதி மற்றும் தீண்டாமை என்பது இந்துமதம் தனது அடிப்படையாகக் கொண்டுள்ளது. சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும்.

சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பதைத்தொழிற்பிரிவினையும்,அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறை, உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும்.

இன்று இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதால் பழைமையை தூக்கிபிடித்துக் கொண்டே உலகமய மாக்கல் நலன் பேசும் இவர்கள் சுரண்டல் வடிவமான ஜாதி ஏற்ற தாழ்வை போக்கும் திட்டம் எதுவும் இன்மையால் அந்தமுறையை தொடர செய்கிறது..

ஓர் உறையாடல் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்க்கலாம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நேற்று ஒரு சில தோழர்கள் இடையில் ஏற்பட்ட விவாதம்.
தோழர் 1. இன்று கம்யூனிஸ்டுகள் ஜாதி பிரச்சினையை சரியாக அணுகாதனாலேயே இன்று கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவை கண்டுள்ளது.
தோழர் 2. எனது அனுபவத்தில் அன்றைய பிரிட்டிஷ் காலகட்டம் ஆகட்டும்; அதன்பிறகு தெலுங்கானா போராட்டம் ஆகட்டும் நக்சல்பாரி காலகட்டம் ஆகட்டும்; ஏன் 70 க்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட பல போராட்ட வடிவங்கள் ஆகட்டும் மிகச்சரியாகவே பாட்டாளிவர்க்க நிலையில் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க திறமையுடன் செயல்பட்டார்கள் என்பேன்.
தோழர் 1. மேம்போக்காக சொல்லுவது பயனில்லை தோழர் விளக்கமாக சொல்லுங்கள்.
தோழர் 2. அன்றைய பிரிட்டிஷ்காரர் எதிர்ப்பு போராட்டத்தில் மத, சாதிய, இன, மொழி வேறுபாடின்றி ஒன்றுபட்டு பிரிட்டிஷாரை விரட்டி அடிப்பதில் போராடினர். அதே காலகட்டத்தில் குறிப்பாக தமிழக தஞ்சை பகுதிகளில் சீனிவாசராவ் கூலி விவசாயிகளை வர்க்க ரீதியாக ஒன்றிணைத்து போராட்டம் நடத்தி கூலிவிவசாயிகளை வர்க்கமாக அணி திரட்டினார். (அவர் சார்ந்து நின்ற கட்சியானது இதனை கைவிட்டதன் விளைவே அதன் பிறகு தஞ்சை பகுதியில் விவசாயிகள் மத்தியில் தனிமைப்பட்டு போயினர் மற்றும் பல போக்குகள் உருவாகின) . தெலுங்கானா போராட்டத்தில் எடுத்துக் கொண்டாலும் அங்கே உழைக்கும் விவசாயிகளுக்கான போராட்டமாக தான் இருந்தது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அன்றைய கட்டத்தில் நிலத்துக்கான போராட்டமாக இருந்தது. (அங்கேயும் அந்தப் போரட்டத்தை முன்னெடுத்த கட்சி அதனை கைவிட்டதன் விளைவாக பின்னர் பல்வேறு விதமான போக்குகள் உருவாகின ). 70 காலகட்டத்தில் நடந்த நக்சல்பாரி போராட்டத்தில் மக்களுக்கு எதிரான கொடுமைகளைக் கணக்கில் கொண்டே போராட்டம் நடத்தப்பட்டது அங்கே ஜாதியோ மதமோ மொழியோ அடிப்படையாக கொள்ளப்படவில்லை.
தோழர் 1. அப்படி என்னும் பொழுது இன்றைய கோரிக்கைகள் "பட்டியல் இன மக்களை" கம்யூனிஸ்ட்டுகள் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றசாட்டுக்கு பதில் என்ன?
தமிழகத்தில் கூட்டகுழு போராட்ட வடிவத்தில் பாலனும், சீராளனும் நடத்திய உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமைக்கான போராட்டம் இன்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை ஏன்? அவர்கள் உண்மையான மக்களின் விடுதலைக்காக போரிட்டனர். 1976 ல் தோழர் சீராளன் அவர்கள் வடஆற்காடு மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் பல்வேறு போராட்டங்களை எடுத்து நடத்தி வந்தார். அவர் கூலிப்பிரச்சினை நிலஉடைமையாளர் ரவுடிகள் கட்ட பஞ்சாத்து ஆதிக்கத்துக்கு எதிராக தீண்டாமையை எதிர்த்துப் பிரச்சாரம் நிலஉடைமையாளர் அடியாட்களுடன் மோதல் மக்களோடு மக்களாக பல போராட்டங்களை கண்டார்.
பொன்னேரி பகுதியில் இருவேறு ஜாதிகள் இடையில் உள்ள மக்களை ஒன்றிணைத்து பட்டியலின மக்கள் வீடுகளில் உணவு வருந்தவும் அவர்களுடன் ஒன்றுபட்டு போராடுவதும் அவர் நடைமுறை ஆக்கினார். நில உடையாளர்கள் ஆதிக்கமும் போலீஸின் அடாவடியும் அங்கே ஒடுக்கப்பட்டது இதை கண்ட இந்திய ஆளும் வர்க்கம் சீராளனை 1976 ல் கொன்றது. பின்னர் மக்களை பிதிகுள்ளக்கியது என்பதை விட அன்று பிரிட்டிஷ் செய்த அதே சூழ்ச்சியை இந்திய ஆளும் வர்க்கம் கையில் எடுத்தது ஒன்றாக வர்க்கமாக ஒன்றிணைந்த மக்களை ஜாதியாக பிரித்தது அவை 1990 களில் நடைமுறையாகியது இன்று ஜாதிய பிரச்சினையை பேசும் பலரும் இந்த வரலாற்று நிகழ்வுகளை எவ்வளவு உள்வாங்கி யுள்ளனர் தெரியாது?
தோழர் 1. ஆக இன்றைய நிலைக்கு காரணம் கம்யூனிஸ்ட்டுகள் இல்லையா?
தோழர் 2- ஆம், இன்று வர்க்க ஒற்றுமையை மறுக்கும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு உகந்த சித்தாந்தகளால் மக்கள் சிந்தனை சிதைந்து அவர்கள் பின் செல்வதும், உலக கம்யூனிச இயக்க பின்னடைவும் கம்யூனிஸ்ட்களின் ஒற்றுமை இன்மையும் இன்னும் பல...
தோழர்கள் கருத்து கூறலாம் நேற்றைய கருத்து கேட்ப்பில் இருந்து.

ஒரு தோழருடன் விவாதித்த பொழுது அவர் வைத்த கேள்வியே இது,"பட்டியலின மக்களுக்கு இறந்தபின் சுடுகாட்டுக்கு போவதற்கு வழி இல்லை இதற்குத் தீர்வு என்ன?".
இந்த அரசு அமைப்பானது எல்லா மக்களும் வாழ வழிசெய்யும் சட்டதிட்டங்களை கொண்டுள்ளது. ஆகவே எல்லா மக்களுக்குமான அரசு என்றால், எல்லா மக்களுக்கும் உண்மையாலுமே அவர்களின் அடிப்படை உரிமைக்கு துணை நிற்க வேண்டிய கடமை பட்டதே.
ஆக சட்டவாதம் பேசும் பொழுது, அந்த சட்டம் வர்க்கம் சார்ந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
வெறும் பிரச்சினையை பேசும் பொழுது புறசூழலையும் அணுக வேண்டும். அதனை புரிந்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். அந்த சட்ட நடைமுறைகளை சிக்கலாக்குவதேன் எல்லா மக்களுக்கும் அவை உதவில்லை ஏன் என்பதனை புரிந்துக் கொள்ள சில 50 ஆண்டுகளுக்கு முன்னர் சில நிகழ்வுகளை உங்களுக்கு புரியவைக்க நினைக்கிறேன்..
உண்மையாலுமே ஒரு பொதுவுடமை வாதியாக இருப்பவன் இந்த பிரச்சனைக்கு மக்களை அணுகி அவர்கள் மத்தியில் பேசி இதற்கு தீர்வு காண முடியும் அவைதான் நமது கடந்த கால வரலாறு ..
வர்க்கமாக இருந்த மக்களை அன்று ஒன்று திரட்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று இல்லை. அதாவது தஞ்சை பகுதிகள் ஆகட்டும் தர்மபுரி ஆற்காடு பகுதிகளாகட்டோம். உழைக்கும் கூலிகளை, ஏழை, எளிய மக்களை ஒன்றுபடுத்தி போராடிய அந்த போராட்டக்காரர்கள் அங்கே சாதிகளாயிருந்த உழைப்பாளிகளை வர்க்கங்களாக திரட்டிப் போராடினார்கள், அவர்களின் போராட்டம் பிற்போக்கான நிலடைமை ஒடுக்குமுறைக்கும் ஜாதிய ஏற்ற தாழ்வுகளுக்கும் எதிர்த்து தீர்மானகரமாக பங்காற்றினர். அன்று இங்கே ஏன் இந்தக் கொடுமைகள் நடக்கவில்லை ஏனெனில் அன்று மக்கள் மத்தில் பொதுவுடைமை இயக்கம் செயல்பட்டது.
அதையைதான் அவர்கள் செய்வதால் அச்சம் கொண்ட அரசு சாதி சங்கங்களை களத்தில் இறக்கி அவர்களை அப்புறப்படுத்திவிட்டு....
இன்று அவர்களை தேடினால் என்ன செய்ய???
இன்று ஜாதிக்குள்ளே வர்க்கங்கள் வளர்ந்து விட்டபின் . வர்க்கப் போராட்டமானது திசை மாறிப் போய்விட்டது. ஓரே ஜாதிக்குள்ளே உடைமை வர்க்கமும் உடைமை அற்ற வர்க்கமும் உள்ள போது. இவை வர்க்க போராட்டமா ஜாதி போராட்டமா?
உடைமை வர்க்கம் தன்னை மேனிலை படுத்திக் கொள்ள உடைமை அற்ற ஏழை எளிய மக்களையும் தன் பின்னால் அணி திரட்டி ஜாதிய சங்கமாக திகழ்கிறது.
உடைமை அற்ற மக்களுக்காக போராட வேண்டியவர்கள் வர்கங்களாக திரள வேண்டியது மார்க்சிய பொதுவுடைமை சித்தந்தம், ஜாதியாக திரளச் சொல்வது உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆளும் வர்க்க ஒடுக்கும் வர்க்க சித்தந்தமே.
ஜாதி போராட்டங்களை புரிந்து வினையாற்ற வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பலவீனமே இதற்கு காரணம் என்று சாதாரணமாகச் கூறிக்கொள்ளலாம்.
இருந்தும் உழைக்கும் வர்க்கம் ஒற்றுமையின்றி எதிரிகளின் சூழச்சியால் வீழ்த்தப் பட்டுள்ளது என்பதனை மட்டும் பதிவு செய்ய நினைக்கிறேன் இன்னேரத்தில்.
சில நாட்களுக்கு முன் ஒரு தோழரை காண சென்றபோது அவர் இரு கேள்விகளை கேட்டார் .
முதல் கேள்வி:- "நாட்டின் உயர்ந்த பதவிக்கு ஒரு பட்டியல் இனத்தவரான ராம்நாத் கோவிந்த் வந்தாலும் அவர் பூரி ஜெகநாத் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. அப்படி எனும்பொழுது ஜாதிய கொடுமை என்பது எவ்வளவு மோசமாக உள்ளது பாருங்கள்" என்றார்.
உண்மைதான் இவை புரிந்துக் கொள்ள வேண்டியவையே.
அதற்கு முன் நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன், "ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் சாதாரண மனிதர் அல்ல, இந்திய அரசியலமைப்பின் மேலடுக்கு பொறுப்பிலிருப்பவர்".
அதாவது இங்கு இந்தப் பதவி என்பது உடமை வர்க்கத்தை காக்கும் அரசமைப்புக்கானதுதானே இதனை அவரே ஏற்று தானே செயல்பட்டுக் கொண்டுள்ளார்.
இந்த அரசு அமைப்பானது எல்லா பிற்போக்குத் தனங்களையும் எல்லா ஒடுக்குமுறைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குவதாகும். அப்படி எனும் பொழுது அவர் இந்த அரசமைப்பின் எல்லா ஒடுக்குமுறையும் ஏற்றுக் கொண்டுதானே இவர் இந்த உயர் பதவிக்கு வந்தவர். அப்படி எனும் பொழுது அவர் தனது பதவிக்காக இந்த எல்லா ஒடுக்குமுறையையும் தான் ஏற்றுக் கொண்டதோடு தன்னை சார்ந்தவர்களையும் சகித்து வாழ சொல்வதுதான் இதில் எளிமையான கோட்பாடாகும்.
மேலும் அர்ப்ப சம்பளம் வாங்கும் ஒரு பூஜரிக்கு இவ்வளவு தைரியம் வரும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றே என்பேன். இவரிடமுள்ள அதிகார பலமும் இவரிடம் உள்ள பல்வேறு விதமான சட்டதிட்டங்களும் பயன்படாமல் போவது ஏன் இதுதான் சிந்திக்க வேண்டியது உள்ளது.
ஆம் இந்த சமூகத்தில் பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கியதுதான் அரசமைப்பு என்பது அதில் மத அமைப்பான மத நிறுவனங்களை தூக்கி நிறுத்தும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதாக கூறும் கோயில்கள் அந்த மதக் கோட்பாடுகளை கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது தான் இவர்களின் நியாயம் தர்மம் என்று பேசப்படுகிறது.
ஆக இந்த சமூக அமைப்பான உடைமை வர்க்கம் சமுகத்தை தூக்கி நிறுத்தும் இவர்கள் செயலானது இதைத் தீர்ப்பதற்கு எந்த வழிவகையும் அல்ல என்பதே நமது பதிலாகும்.
ஆக இந்த உடைமை சமூகத்தில் இதற்கு தீர்வு அல்ல ஆகவே உடைமை அற்ற(பொதுவுடைமை) சமூகத்தில் மட்டுமே இதற்கு தீர்வு (இதற்க்கு நீண்ட போராட்டம் நடைபெறும்) என்று கூறும் அதேவேளையில் இதற்கான பொதுவுடைமை கட்சி வலிமை பலம் இருந்தால் மட்டுமே இதற்கான சரியான வழி வகை செய்ய முடியும் என்பதுதான் உண்மையான தீர்வாகும் .

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்