பரிவர்த்தனை – சத்யா


 

என்னதான்  நாற்காலிக்கு நாலுகால் இருந்தாலும் தானாக நடந்து சந்தைக்குப் போய் தன்னைத்தானே விற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம்இந்த நிதர்சனம் எல்லா பண்டங்களுக்கும் பொருந்தும்எனவே எல்லா பண்டங்களுக்கும் ஒரு உடைமையாளர் இருக்கிறார்பண்டங்கள் உயிரற்ற பொருட்கள் என்பதால் தங்கள் உடைமையாளர் யார் என்பதை அவற்றால் நிர்ணயம் செய்ய முடியாதுஒரு நாற்காலி தன் மீது யார் ஏற வேண்டும் என்ற முடிவை எடுப்பதில்லைஆனால் யார் நாற்காலி ஏற வேண்டும் என்ற முடிவை மனிதர்கள் எடுக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அது இந்த பகுதிக்கு சம்பந்தமில்லாததுஆனால் ஒரு பண்டத்தின் உரிமை மனிதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறதுநாற்காலி போன்ற மனித உழைப்பு தேவைப்படும் பண்டமாக இருந்தால்அல்லது பிற கைவினைப் பொருட்களாக இருந்தால் அதை உருவாக்கியவர் அதன் உரிமையாளராகிறார்அல்லது மாணிக்கம் மரகதம் போன்ற ஆபரணக் கற்கள் பண்டமாயிருந்தால் அதைக்கண்டெடுப்பவர் அதன் உரிமையாளராகிறார்எது எப்படியாயினும் தனது உடைமையாளரை பண்டம் தீர்மானிப்பதில்லை.

 

இப்படி இருக்கையில் ஒருபண்டம் இன்னொரு பண்டத்துடன் கொண்ட தொடர்பானது அதன் உரிமையாளர்கள் கொண்ட தொடர்பைப் பொறுத்தே யுள்ளதுஒரு கிராம் தங்கத்துக்கும் ஒரு மூட்டை அரிசிக்கும் உள்ள தொடர்பு அதன் உரிமையாளர்கள் கையிலேயே உள்ளதுஇப்போது கந்தசாமியிடம் ஒருமூட்டை அரிசியும்முனியசாமியிடம் ஒருகிராம் தங்கக்காசும் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம்ஒரு வேளை முனியசாமியும்கந்தசாமியும் சந்திக்கவேயில்லை எனில் அந்த இரு பண்டங்களுக்கும் எந்த உறவுமின்றிபோகும் வாய்ப்புள்ளதுஒரு வேளை சந்தித்தாலும்இருவருக்கு மிடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படாத வரையில் இவ்விருபண்டங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் ஏற்படவாய்ப்பில்லைஇது போன்ற ஒரு ஒப்பந்தத்தின் மூலமாகவே பரிவர்த்தனை நிகழ்கிறதுஅந்த ஒப்பந்தம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பெரிய அளவில் இருந்தாலும், ‘ஏம்பாநான் ஒரு கிராம் தங்கத்தை உனக்குதரேன்நீ ஒரு மூட்டை அரிசியை எனக்கு கொடு’ எனும் படி சிறியதாய் இருந்தாலும் ஒப்பந்தம் ஒப்பந்தம்தான்.

ஒருநாள் முல்லா சந்தைக்குப் போனார். அங்கே ஒரு ஏழை விவசாயி சோகமாக அமர்ந்திருந்ததைப் பார்த்தார். உடனே அவனிடம்சென்றுஏனப்பா சோகமாய் இருக்கிறாய்?’ என்று கேட்டார்.

இந்த உதவாக் கரை கழுதையை விற்கலாம் என்றுவந்தேன். நோஞ்சானாய் இருக்கிறது என்று யாரும்வாங்கமாட்டேன் என்கிறார்கள்என்று புலம்பினான் விவசாயி.

சரி வா நான் விற்றுத் தருகிறேன்என்று அவனை கூட்டிக் கொண்டு சந்தைக்கு சென்றார் முல்லா.

சந்தைக்குப் போனதும் முல்லா கழுதையைப்பற்றி இல்லாத பொல்லாத கதைகளை அல்லிவிட்டார், ‘இந்தகழுதை மூணுமூட்டைபொதிசுமக்கும். காலையிலிருந்து இரவு வரை ஓய்வேயின்றி உழைக்கும்அதே நேரம் கொஞ்சமாகவே சாப்பிடும் அதனால்தான் இளைத்துப் போய் உள்ளது’ என்றெல்லாம் என்னென்னமோ சொன்னார்.


முல்லா சொன்னதைக் கேட்டதும் சந்தையில் கழுதைக்கு கிராக்கி அதிகமாகிவிட்டதுஇரண்டு மடங்கு விலை கொடுத்து கழுதையை வாங்கக் கூட மக்கள் முன் வந்தனர்.

கழுதையை விற்க  வந்த விவசாயி வேகமாய் முல்லாவிடம் வந்து கழுதையின் கயிற்றைப்பிடுங்கினான்.

 விடுங்க என் கழுதையைஇவ்வளவு நல்ல கழுதையை என்கிட்ட இருந்து விற்கப்பார்க்கறீங்களா?’ என்று சிடுசிடுத்துவிட்டு கழுதையை ஒட்டிக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

இந்த கதை வேடிக்கையாய் சொல்லப்பட்டாலும்இதில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளதுஎந்த ஒரு உரிமையாளரும் தனக்கு தேவையான பண்டத்தை விற்பதில்லைதேவையில்லாத பண்டத்தையே விற்க முற்படுகிறார்நூறு ஆப்பிள் வைத்திருக்கும் ஒருவன்தனக்கு பத்து ஆப்பிள் தேவைப்படுகிற தென்றால் அதை எடுத்துக் கொண்டு மீதியுள்ள தொண்ணூறு ஆப்பிள்களையே விற்பான்நூறையும் விற்று விட்டு மீண்டும் தனக்கு தேவைப்படும் பத்து ஆப்பிள்களைத் தேடி அலையமாட்டான்.  வேறு வார்த்தையில் சொல்வ தென்றால் நூறு ஆப்பிள்களில் தொண்ணூறு ஆப்பிள்கள் அவனுக்கு தேவையில்லாததுஅதைத்தான் பரிவர்த்தனை செய்ய முன் வருவான்அதேபோல் வாங்குபவனும் தனது தேவைக்கு ஏற்பவே பரிவர்த்தனை செய்வான்தொண்ணூறுமாம் பழம் தேவைப்படும் ஒருவன் அதற்கு பதில் தொண்ணூறு ஆப்பிள்களை வாங்க ஒப்புக் கொள்ளமாட்டான்இதை வேறு மாதிரி சொல்வதென்றால்பண்டத்தை விற்பவருக்கு அந்த பண்டத்தால் நேரடி பயன்மதிப்பு இல்லைஅதே நேரம்பண்டத்தை வாங்குபவருக்கு அந்த பண்டத்தால் நேரடி பயன்மதிப்பு உள்ளதுபண்டத்தை விற்பவருக்கு பண்டத்தின் பயன்மதிப்பு அதன் பரிவர்த்தனை மதிப்பு மட்டுமே .அதாவது தொண்ணூறு ஆப்பிளை விற்பவருக்கு அந்த ஆப்பிள் தரும் பயன்மதிப்பு அதைபரிவர்த்தனை செய்து கிடைக்கும் பண்டமேயாகும்அதாவது கந்தசாமி தொண்ணூறு ஆப்பிளை ஒரு பேண்ட் சட்டைக்கு முனியசாமியிடம் விற்கிறார் என்று வைத்துக்கொண்டால்கந்தசாமியைப் பொறுத்தவரை தொண்ணூறு ஆப்பிள்களின் பயன்மதிப்பு  ஒரு பேண்ட் சட்டைதான் அதை தலைகீழாக முனியசாமிக்கும் கொள்ளலாம்.

 எந்த ஒரு உரிமையாளரும் தன்கையிலிருக்கும் பண்டத்தைக் கொண்டே பிறபண்டங்களைமதிப்பிடுவார்.எடுத்துக்காட்டாகநூறுஆப்பிள்வைத்திருப்பவர்அதற்குஇணையாகஐம்பதுகிவிபழங்களையோ,இருநூறுமாம்பழங்களையோ,முன்னூறுஎலுமிச்சம்பழங்களையோமதிப்பிடுவார். இந்த மதிப்பீடு எல்லாவற்றையும் தனது கையிலுள்ள ஆப்பிள் என்ற பண்டத்தை அடிப்டையாகக் கொண்டே செய்வார்இதேபோல் எலுமிச்சம் பழம் வைத்திருப்பவர் எலுமிச்சம் பழத்தைக் கொண்டும்மாம்பழம் வைத்திருப்பவர் மாம்பழங்களைக் கொண்டும் மதிப்பிடுவர்ஆனால், எந்த ஒரு பண்டமும் ஒரு பொதுவான மதிப்பீட்டுக்குள்வராது.மேலே சொன்னது போல் ஒரு ஒப்பீட்டு மதிப்பாகத்தான் அவற்றைக் கொள்ள முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்இவ்வாறு ஒப்பீட்டு மதிப்புதான் ஒரு பண்டத்தின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது எனும் போது சமூக பரிவர்த்தனை இல்லாமல் எந்த பண்டத்துக்கும் பொதுவானமதிப்பு இல்லை. ‘சந்தைக்கு வந்தாதான் சாதி மல்லி விலைபோகும்,   செடியிலேயே இருந்தா கருகித்தான் போகும்’ என்பதுதான் அதன் பொருள்.

பண்ட மாற்று முறை மிக எளிமையான  ஒருசூத்திரத்தைக்கடைபிடிக்கிறது. நாம்ஆப்பிள்,மாம்பழம்ஆகியவற்றைஇரண்டுபண்டங்களாகக்கொண்டால் 100 ஆப்பிள்கள்=200 மாம்பழங்கள்என்றுபண்டமாற்றம்செய்கிறோம்என்றால்100 ஆப்பிள்களின்பயன்மதிப்பும் 200 மாம்பழங்களின் பயன்மதிப்பும் ஒன்று. அல்லது ஒரு ஆப்பிளின் பயன்மதிப்பு இருமாம்பழங்களின் பயன்மதிப்புக்கு இணையானதுஅதே நேரம் பண்டமாற்றுமுறையில் எல்லா உரிமையாளர்களும் தங்கள் பண்டங்களை உயர்ந்த மதிப்பிற்கே பரிவர்த்தனை செய்யவேண்டும் என்று விழைகிறார்கள்இதனால் பண்டங்களின் பொதுவான மதிப்பு என்பது இல்லாமலே போகிறது.  இந்த இடத்தில் தான் பணம் என்ற பண்டம் அறிமுகமாகிறதுபணத்தைப் பொறுத்தவரை எப்போதும் எல்லோரிடமும் செல்லக்கூடிய ஒருபொதுவான பண்டமாகவும் அதே நேரம் எந்த பண்டத்துடனும் பரிவர்த்தனைக்குப்பயன் படக்கூடிய பொதுவான மதிப்புடைய பண்டமாகவும் மாறுகிறதுமற்ற பண்டங்களில் இல்லாத சிறப்பம்சம் என்னவெனில் பணத்துக்கு எப்போதுமே பயன்மதிப்பு இருந்துகொண்டிருக்கும் என்பதும், பணத்துக்கு எல்லோரிடம் பயன்மதிப்பு இருக்கும் என்பதுதான்.

 இறுதியாக சொல்வதென்றால்எந்த மரமும் பணத்தைக் காய்ப்பதில்லை, ஆனால் பணத்தால் எந்த மரத்தில் காய்ப்பதையும் வாங்கிவிட முடியும்!”

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்