இலக்கு 15 இணைய இதழ் PDF வடிவில்

இலக்கு 15 இணைய இதழை இங்கே அழுத்தி PDF வடிவில் பெற்றுக் கொள்ளுங்கள் 


தோழர்களே ஒரு சரியான மார்க்சிய- லெனினிய முறையில் புரட்சியை நேசிப்போர் ஒன்றிணைய "இலக்கு” இதழில் தங்களது விமர்சனங்களை விவாதங்களை வைக்கும் படி அழைக்கிறோம். தங்களின் மேலான கருத்துகளை எழுதி அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம். என்ற இமெலுக்கும் அனுப்பி வைக்கலாம் தோழர்களே..... cpalani.cpalani@gmail.com

சமூகம் வர்க்கப் போராட்டத்தில் தான் இயங்குகிறது என்று மார்க்ஸ் கண்டு பிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில் சமூகத்தின் செல்வழியை முன்னறிந்து மார்க்சால் கூற முடிந்தது. அதன் வழியில் நடைமுறைப்படுத்தவும் அவரால் முடிந்தது.

சமூகம் வர்க்கமாகப் பிளவுபட்டுள்ளது என்று அறிந்த பின்பு, சமூகத்தில் தோன்றும் கருத்துக்களும் வர்க்க சார்பாகத் தான் இருக்கும். இதனைப் புரிந்து கொள்ளாதவரை ஏமாளிகாளகவும், முட்டாள்களாகவும் இருக்க வேண்டியது தான். நீதி, மதம், அரசியல், சமூகம் ஆகியவை பற்றிய கருத்துக்களில் வர்க்க சார்பு நிச்சயமாக இருக்கிறது. அதனால் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை தொழிலாளர்களின் நலன் சார்ந்ததாகத் தான் இருக்க முடியும். முதலாளிகளின் நலனை ஆதரிக்கிற கருத்துமுதல்வாத போக்குகளுக்கு எதிரான, பொருள்முதல்வாத போக்கை தொழிலாளர்களும், கம்யூனிஸ்டுகளும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். மதம் போன்ற பழைய கருத்துக்கள் எவ்வளவு அநாகரீகமாகத் தோன்றினாலும் எதாவது ஒரு ஆளும் வர்க்கத்தின் நலன்களை அது பிரதிபலிக்கவே செய்கிறது. அதனால் சுரண்டும் வர்க்கம் அதை நிலைநிறுத்துகிறது. சீர்திருத்தங்கள், மக்களின் மேம்பாடுகள் போன்றவற்றை முன்வைத்துப் போராடுபவர்கள், இதனை உணராத வரையில், பழைய அமைப்பு முறையின் ஆதரவாளர்கள் அவர்களை என்றைக்கும் முட்டாள்களாக்கிக் கொண்டே தான் இருப்பார்கள்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்