_________________________________________________________________________________
அனைத்து தரவுகள் மீதும் விமர்சனப்பூர்வமான அணுகுமுறையோடு, கடினமான, பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்யாமல்,
கம்யூனிசம் பற்றிய ஆயத்த பதில்களை ஒரு கம்யூனிஸ்ட் எதிர்பார்பாரேயானால் அவர் மோசமான கம்யூனிஸ்ட்டாகத்தான் இருப்பார்”
“கம்யூனிசம் என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக்கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்” என்று ரஷ்ய இளைஞர்களின் மூன்றாவது மாநாட்டில் (1920) லெனின் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய உலகமய தாராளமய கொள்கையை
தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது இதற்கு எந்த சிறு தடங்கலுமின்றி நாடுமுழுவதும் அந்நிய மூலதனம் வெள்ளம் போல் பாய்ந்து
வருகிறது. இவற்றை முறியடிக்க
ஒரு தலைமை தாங்கிட புரட்சிகர கம்யூனிஸ்ட்
கட்சியோ அல்லது எதிர்கொள்ளும் திறன் கொண்ட கம்யூனிஸ்ட்
கட்சியோ இங்கே இல்லை என்பது உண்மை அல்லவா?
இங்குள்ள ஒவ்வொரு கம்யூனிஸ்ட் குழுக்களும்
பாட்டாளி வர்க்கத்தின் உழைக்கும்
மக்களின் வெவ்வேறு கொள்கை முழக்கத்தை முன்வைத்து
வழிநடத்தி வருகின்றன இது பாட்டாளி வர்க்கத்தின்
பலவீனத்தையும் இதன் எதிர்மறையாக
பிற்போக்காளர்களுக்கு பலத்தையும் அளிக்கக்கூடியது அன்றோ?
எந்த ஒரு புரட்சிகர குழுவும் தனித்தனியாக செயல்பட்டு இந்திய பாசிச எதேச்சிகார அரசை வீழ்த்தமுடியாது என்பதை மார்க்சிய லெனினிய கோட்பாடுகளிலிருந்தும் அவர்களது சொந்த அனுபவங்களிலிருந்தும் புரிந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு இடையில் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து செயல்படவேண்டும் அல்லவா
தொடர்புக்கு மற்றும் விமர்சனங்களை அனுப்ப
cpalani.cpalani@gmail.com
அல்லது
இணையத்தில் தொடர அல்லது விவாதிக்க
No comments:
Post a Comment