மே தின வாழ்த்து தெரிவித்தோர் மார்க்சிய ஆசான்களின் வழிநின்றா பேசுகின்றனர்?

உலக தொழிலாளர் தின வாழ்த்துகள் முதலாளியும் சொல்கிறான் உழைப்பை சுரண்டிக் கொண்டே ஏன் சட்டப்படி நடப்பதாக கூறும் ஆளும் வர்க்கமும் சொல்கிறது மே தின வாழ்த்து. 

உழைக்கும் மக்களை சுரண்டிக் கொண்டே அடக்கி ஒடுக்கிக் கொண்டே..... இந்த வாழ்த்துகள் சொல்ல இவர்களுக்கு தகுதி உள்ளதா

அதே நேரத்தில் உழைக்கும் மக்களின் தலைவர்களாக பிரதிநிதிகளா உள்ள இடதுசாரிகள் கம்யூனிச குழுக்கள்/அமைப்புகள் தங்களின் வலிமையை காட்டிக் கொள்ள ஆங்காங்கே நடத்திய கூட்டம் பலவற்றை கருத்தில் கொண்டே இந்த நீண்ட பதிவு உங்கள் முன். ஆசான்களின் கருத்துகளும்

மே 1 - உலகெங்கும் உழைக்கும் மக்களின் உரிமைக் கோரும் நாள்.
8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற அடிப்படை உரிமைகளுக்காக தொழிலாளி வர்க்கத்தின் போர்க் குணமிக்க போராட்டம் அமெரிக்காவின் சிக்காகோ நகர வீதிகளில் இரத்தத்தால் கொடூரமாக மூழ்கடிக்கப்பட்டு சிவந்த நாள் !
அந்த போராட்டம் திடுதிப்பென உருவாக வில்லை அல்லது இங்குள்ள சீர்திருத்தவாதிகள் கூறுவது போல் அல்ல.. 1848 ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மிகத் தெளிவாக சமூகம் வர்க்கங்களாக பிளவுப்பட்டுள்ளதை தெளிவுபடுதியதோடு நில்லாமல் இந்த ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை பலவந்தமாக வீழ்த்தி ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழ்க்கைக்கான ஒரு சமூகமாக மாற்றி அமைக்க உலக தொழிலாள்ர்களே ஒன்று சேருங்கள் என்று அறைகூவல் விடுத்தனர். அதன் தொடர்ச்சியான பாரிஸ் கம்யூன்...

தொழிற்சங்கம் பற்றி 1881 இல் ஆய்வு செய்த எங்கெல்ஸ் 50 ஆண்டுக்கு முன்னிருந்த தொழிற்சங்கமும் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கமும் மிக அழகாக குறிப்பிட்டிருப்பார். அன்று தொழிற்சங்கம் கட்டுவதற்காக செய்த போராட்டங்கள் அடக்குமுறை என்ன இன்று 40லிருந்து 50 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பும் தகுதி படைத்தவர்களாக தொழிலாளர் மாறிவிட்டதோடு அவர்களுடைய தேவைக்கு மேலாகவே சட்டப்படி செயல்பட உள்ளனர். இருந்தும் நமது நோக்கம் நிறைவேறவில்லை என்று கூறுமிடத்து தொழிலாளர்கள் தொழிலாளர்களாகவே உள்ளனர் இந்த ஏற்றதாழ்விலிருந்து விடபட உருப்படியாக செய்ய முடியாமையை சாடி இருப்பார்.

எங்கெல்ஸ் கூறியதே, "அந்த நடவடிக்கையே தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய வாய்ப்பைத் திறந்துவிட்டது. லண்டனிலும், அனைத்து உற்பத்தி நகரங்களிலும் அவர்களுக்கு பெரும்பான்மை கிடைத்தது. இவ்வாறு புதிய ஆயுதங்களைக் கொண்டு மூலதனத்தை எதிர்த்துப் போராட அவர்களுக்கு உதவியது. அவர்களது சொந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது. இங்கு, தொழிற் சங்கங்கள் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் பாதுகாவலர் என்ற தமது கடமையை மறந்துவிட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய ஆயுதம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் கைகளில் உள்ளது, ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. அவர்கள் உண்மையிலேயே தொழிலாள வர்க்கத்தின் பாதையில் அணிவகுத்துச் செல்லாவிட்டால் அவர்கள் இப்போது வகிக்கும் இடத்தைத் தொடர முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது. இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கம் நாற்பது அல்லது ஐம்பது தொழிலாளர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் அதிகாரத்தைப் பெற்றிருந்தும், முதலாளிகளோ அல்லது வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள் போன்ற அவர்களது எழுத்தர்களோ என்றென்றைக்கும் பிரதிநிதித்துவம் செய்வதில் திருப்தி அடைவது இயல்பானதல்ல" என்று.

இந்த நூலை கீழ்காணும் இணைப்பில் வாசிக்க தோழர்களே 87 பக்கங்களை கொண்ட நூல் இன்று தொழிற்சங்கம் பற்றி பேசுவோர் அன்று ஆசான்களின் பணியினை புரிந்துக் கொள்ள உதவும்...

கூலிமுறைப் பற்றி எங்கெல்ஸ்

மேலும் ஆசான் என்ன செய்யவேண்டும் நூலில் சில ன்ன செய்ய வேண்டும்” நூல் 1902-ம் ஆண்டு ரசியாவின் கம்யூனிச இயக்கத் தோழர்களுக்காக தோழர்லெனின் எழுதிய நூல்.

மார்க்சிய விரோத நடைமுறை அரசியல் நரோத்னியா வோல்யா என்ற இயக்கமாக வளர்ந்தது. அதில் ஒரு பிரிவு ரசியாவில் முதலாளித்துவ வளர்ச்சி சாத்தியமில்லை என்ற
கோட்பாட்டு அடிப்படையில் விவசாய சமூகங்களை மையமாகக் கொண்டு புரட்சி நடத்துவது என்ற கண்ணோட்டத்தில் செயல்பட்டனர். 

இந்த நரோத்னிய இயக்கத்தை எதிர்த்து சட்ட வாத மார்க்சியம் என்ற முதலாளித்துவ அறிஞர்களின் பிரச்சாரம் ஜார் அரசால் அனுமதிக்கப்பட்டது. அது நரோத்னிக்குகளின் கோட்பாடுகளை எதிர்த்து முறியடிக்க மார்க்சிய இலக்கியங்களை பயன்படுத்தியது. இதனோடு சேர்ந்து உண்மையான கம்யூனிஸ்டுகளின் மார்க்சிய எழுத்துக்களும் வேகமாக பரவின. இவை இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவி நாடு முழுவதும் பல மார்க்சிய குழுக்கள் – வாசிப்பு வட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வாசிப்பு வட்டங்கள் நகரங்களில் உள்ள தொழிலாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டன.

தொழிலாளர்களின் போராட்டங்களும் 1880-களில் தீவிரமடைந்து, வேலை நிறுத்தங்கள், அரசியல் கோரிக்கைகள் என்று வளர்ச்சி அடைந்து வந்தன. தொழிலாளர்களுக்கு பிரசுரம் எழுதித் தருவது, அரசியல் முழக்கங்களை வடித்துக் கொடுப்பது என்று மார்க்சிய வட்டங்களும் தொழிலாளர் வர்க்க இயக்கமும் ஒன்றிணைய ஆரம்பித்தன.

அன்றைய ரசியாவில் தொழிற்சங்கம் அமைப்பது சட்ட விரோதமானது, வேலை நிறுத்தம் செய்வது கிரிமினல் குற்றம், மார்க்சிய படைப்புகளை படிப்பது தடை செய்யப்பட்டது என்று கொடூரமான ஜாரிச எதேச்சதிகார ஆட்சி நடைபெற்று வந்தது. எனவே, மார்க்சிய
வட்டங்களில் இணையும் இளைஞர் குழுக்கள் அடிக்கடி போலீஸ் உளவாளிகளால்
கண்காணிக்கப்பட்டு இறுதியில் கூண்டோடு கைது  செய்யப்பட்டு வந்தனர்.

இந்த சூழலில்தான் லெனின் தனது அரசியல் பணிகளை பீட்டர்ஸ்பர்க் நகரில் தொடங்கினார். மார்க்சிய கோட்பாட்டை கற்று, பிற பல படைப்புகளுடன் முதன்மையாக நரோத்னிக்குகளின் முதலாளித்துவம் பற்றிய கோட்பாட்டை முறியடிக்கும் விதமாக ரசியாவில் முதலாளித்துவத்தின் தோற்றம் என்ற நூலை எழுதினார். தொழிலாளர் இயக்கத்துடன் தொடர்பு கொண்டு அதன் விளைவாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போதும், பின்னர் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட போதும் இந்த நூலை எழுதி முடித்தார். இது தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டார்.

1897-ம் ஆண்டு வாக்கில் ரசிய புரட்சி பற்றிய கோட்பாட்டு அடிப்படைகளும் நிலைப்பாடுகளும் கிட்டத்தட்ட அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. சைபீரியாவிலிருந்து விடுவிக்கப்பட்ட லெனின் இந்நிலையில் ரசிய புரட்சிகர
இயக்கத்தின் உடனடி தேவை, நாடு முழுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் சிதறுண்டு கிடக்கும் மார்க்சிய குழுக்களை ஒன்றாக இணைத்து ஒரு வலுவான கட்சியாக கட்டுவது என்று முடிவு செய்தார்.
அதை சாதிக்கும் முயற்சியில் இஸ்க்ரா என்ற அகில ரசிய ரகசிய பத்திரிகையை வெளியிடுவது என்று முன் வைத்து வெளியிட ஆரம்பித்தார்.

ரசிய சமூகஜனநாயக (கம்யூனிச) இயக்கத்தில் பொருளாதாரவாதம், பயங்கரவாதம், மார்க்சிய பாதை என்று மூன்று போக்குகள் அப்போது இருந்தன.
பொருளாதாரவாதிகள் தொழிற்சங்கங்களில் தொழிலாளர்களுடன் நெருக்கமாக வேலை செய்வதன் மூலம் அவர்களது பொருளாதார கோரிக்கைகளை முன்னெடுத்து செல்வதன் மூலம் அவர்களது அரசியல் உணர்வை வளர்த்துச் சென்று புரட்சியை சாதிக்கலாம் என்பதை அமல்படுத்தி வந்தவர்கள். பயங்கரவாதிகள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை தோற்றுவிக்க தனிநபர் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்த வேண்டும் என்ற அணுகுமுறையில் எழுதியும், பேசியும், செயல்பட்டும் வந்தவர்கள்.

இந்த இரண்டுக்கும் நடுவில், தொழிலாளர்களின் பொருளாதார போராட்டங்களோடு, புரட்சியின் இலக்கான ஜாரிச எதேச்சதிகாரம் பற்றிய அரசியல் அம்பலப்படுத்தல்களையும் தொழிலாளர் மத்தியில் செய்து, தொழிலாளி வர்க்கத்தை ஜாரிச எதேச்சதிகாரத்தால் ஒடுக்கப்படும் அனைத்து வர்க்கத்தினரின் தலைமைப் படையாக வளர்க்கும் பணியை சமூக ஜனநாயக வாதிகள் செய்ய வேண்டும் என்ற பாதையில் மார்க்சிய புரட்சிகர அணுகுமுறை பின்பற்றப்பட்டது.

மேலே சொன்ன இரண்டு பாதைகள், குறிப்பாக பொருளாதாரவாதம் ஜெர்மனி, பிரான்ஸ்,
இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவிய அதே போன்ற போக்குகளின் ரசிய வடிவம்தான் என்பதையும், அவை எவ்வாறு பொருத்தமற்றவை என்பதையும் குறிப்பிட்டு விவாதித்து முறியடிக்கும் வகையில் என்ன செய்ய வேண்டும் நூல் எழுதப்பட்டது.

இந்த நூலில் மொத்தம் 5 அத்தியாயங்கள் உள்ளன. இந்த நூல் புரட்சிகர இயக்கத்தின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக விவாதிக்கும் கோட்பாட்டு அடிப்படையை கொண்டுள்ளது.

முதல் அத்தியாயத்தில்

பொருளாதாரவாதிகள் கோரும் விமர்சன சுதந்திரம் என்பது ஏற்கனவே விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்சிய நிலைப்பாடுகளை விமர்சித்து விட்டு சித்தாந்த தலைமைய கைவிட்டு பொருளாதார வாதத்தில் மூழ்கிக் கிடப்பதற்கான சுதந்திரம்
வேண்டும் என்ற கோரிக்கைதான் என்பதை விளக்குகிறது.

இரண்டாவது அத்தியாயத்தில்

மக்களின் தன்னெழுச்சியும், சமூக ஜனநாயகவாதிகளின் உணர்வும் என்ற தலைப்பில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தில் கலந்து கொண்டால் போதும், அதன்
ஊடாக தொழிலாளர்கள் அரசியலை கற்றுக் கொள்வார்கள் என்ற பொருளாதார வாதத்தை எதிர்த்து முறியடிக்கிறார். தொழிலாளர்களுக்கு சமூக ஜனநாயக அரசியல் வெளியிலிருந்துதான் கொண்டு செல்லப்பட வேண்டும். எவ்வாறு, அறிவியல் தொழில்நுட்பம் நவீன தொழில்துறைக்கு வெளியில் விஞ்ஞானிகளாலும், பொறியியலாளர்களாலும் உருவாக்கப்பட்டு, வளர்ந்து தொழில்துறையில் தொழிலாளர்களால் பயன்படுத்தப்படுகிறதோ அதே போல சமூக ஜனநாயக அரசியல்
முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ பிரிவினரால் வளர்த்தெடுக்கப்பட்டு தொழிலாளி வர்க்கத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

3-வது அத்தியாயத்தில்
தொழிற்சங்க அரசியலுக்கும் சமூக ஜனநாயக அரசியலுக்கும் உள்ள வேறுபாடை பற்றி பேசுகிறது.

முதல்உள்தலைப்பில் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சாலை பிரச்சனைகள் பற்றி அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து அவற்றுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் இறங்குவது போலவே, இந்தப் பிரச்சனைகளுக்கு எதிரியாக நிற்கும் ஜாரிச எதேச்சதிராகத்தை எதிர்த்த அம்பலப்படுத்தல்களையும் கிளர்ச்சியையும் தொழிலாளி வர்க்கத்துக்கு கற்றுக் கொடுப்பதுதான் தொழிலாளி வர்க்கத்தை அரசியல் படுத்துவது என்பதாகும். இதற்கு சமூகத்தின் ஒவ்வொரு வர்க்கமும் எதேச்சதிகாரத்தால் எவ்வாறு ஒடுக்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தி அவற்றுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவதற்கு வழி நடத்த வேண்டும்.
அப்போதுதான் தொழிலாளி வர்க்கம் பிற வர்க்கங்களின் தலைமை சக்தியாக புரட்சியின் முன்வரிசையில் நிற்கும்.

இவ்வாறு பரந்து விரிந்த அரசியல் தளத்தை தொழிற்சங்க பிரச்சனைகள் மட்டும் என்று
குறுக்குகின்றனர் பொருளாதார வாதிகள். இந்த விவாதத்தின் ஊடாக பொருளாதாரவாதிகளும், பயங்கரவாதிகளும் எவ்வாறு இந்த அரசியல் அம்பலப்படுத்தல்கள் மூலமாக தொழிலாளர்களை அரசியல்படுத்துவதை
புறக்கணித்து தன்னெழுச்சியான போக்குகளுக்கு வால் பிடித்து செல்கின்றனர் என்பதை
விளக்குகிறார்.

4-வது அத்தியாயம்
இவ்வாறு அரசியல் இயக்கத்தின் தன்மையையும் உள்ளடக்கத்தையும் முடிவு செய்த பிறகு இதை அமல்படுத்துவதற்கான அமைப்பு வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறோம்.
தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் முடிந்த வரை தொளதொளப்பான வடிவில், பரந்து விரிந்த அடிப்படையை கொண்டிருக்க வேண்டும்.
முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளும் எல்லா தொழிலாளிகளும் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டிருக்கும் சூழலில் தொழிற்சங்க விதிமுறைகளும்,
கட்சியுடனான அவற்றின் உறவும் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பதை வாத பிரதிவாதங்களை பயன்படுத்தி விளக்குகிறார்.

இதற்கு மாறாக பொருளாதாரவாதிகளின் தொழிற்சங்க அமைப்பு முறை அவர்களது அரசியல் பக்குவமின்மையை பிரதிபலித்து அர்த்தமற்ற ஜனநாயக முறைகளையும்,
அதிகார வர்க்க நடைமுறைகளையும் கொண்டிருக்கிறது என்று அம்பலப்படுத்துகிறார்.

இதன் இறுதி உள் தலைப்பில் ஒவ்வொரு சமூக ஜனநாயகக் குழுவும் தனது பணியை உள்ளூர் அளவில் சுருக்கிக் கொள்ளாமல், அகில ரசிய தாக்கம் செலுத்தும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதை உள்ளூர் பத்திரிகைகளுக்கும் அகில ரசிய பத்திரிகைக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்குவதன் மூலம் உணர்த்துகிறார்.

முழு நூல் கீழே...

மார்க்சிய-லெனினிய தத்துவத்தால் ஆயுதபாணியாகி செந்தீயாக உலகமெங்கும் படர்ந்து ரஷ்யா, சீனா, வியட்நாம் எனப் பல நாடுகளில் உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தைப் படைக்கவும் செய்தன.

தொழிலாளர்களின் இரத்தம் சிந்தி பெற்ற உரிமைகளை நசுக்கிக் கொண்டிருக்கும் இந்த நயவஞ்சக தனத்தை புரிந்துக் கொள்ளாமல் கொத்தடிமைகளாக வாழும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறையை மாற்ற நடந்த போராட்டங்கள் அதன் தொடர்ச்சியை புரிந்துக் கொள்ள வேண்டும்.

தொழிலாளியாய் உழைக்கும் மக்கள் உணர்த்துவது மட்டுமல்ல தமது கடமையாக இன்றுள்ள இந்த சுரண்டல் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கு அரசையும் அதனை ஸ்தாபிக்க வேண்டிய புரட்சியையும் இதே தொழிலாளர் வர்க்கம்தான் சாதித்தது என்ற வரலாற்றையும் சொல்ல வேண்டும்.


ஆனால் இங்குள்ள சீர்திருத்தவாதிகள் அன்றிலிருந்து இன்றுள்ள இளைய இளவரசர்கள் வரை ஏன் காவிகளின் தொழிற்சங்கம் வரை எதற்காக கட்டப்பட்டுள்ளது உண்மையாலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவா? அல்லது இடதுசாரிகளின் தொழிற்சங்கம் என்ன செயல்பாட்டில் உள்ளது?
லெனின் என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் சீர்திருத்தவாதம் திருத்தல் வாதம் ஐரோப்பிய வகைப்பட்ட தொழிற்சங்க வாதம் எப்படி புரட்சிக்கு பயனளிக்காது என்பதை திட்ட தெளிவாக கூறியிருப்பார் ....

தொழிலாளி வர்க்க உணர்வு பெற அவர்களின் இன்றை சமூகத்தில் படும் இன்னல்களுக்கு காரணமான இந்த அரசமைப்பையும் சொல்ல வேண்டும் அவர்களுக்கான அரசு எப்படி இருக்க வேண்டும்....
ஆனால் ஆளுக்கொரு வகையில் எதைஎதையையோ பேசினாலும் எல்லோரும் அதற்கான புரட்சிக்கான கட்சியோ செயலோ இல்லாமல் அடையாளதிற்கு செய்யும் பொழுது உண்மையில் அவர்களின் நோக்கம் என்ன? அவர்களுக்கே வெளிச்சம் ஆனால் இவை ஆசாங்கள் சொன்னவை இல்லையே!?

இந்த சுரண்டல் சமூகத்திலிருந்து விடுதலையே உழைக்கும் மக்களுக்கான பாதை அதற்கான உழைக்கும் மக்களை விடுதலை விரும்புவோர் சிந்திபீர்களாக!!!

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்