தத்துவம் மற்றும் இந்திய தத்துவங்கள் பற்றி ஓர் தேடல்-1
நாம் மார்க்சிய லெனினியத்தை பேசும் பொழுது இங்குள்ள மார்க்சியவாதிகளே இந்திய தத்துவங்கள் என்ன? அவை என்ன பங்காற்றியது? அல்லது மயக்கத்திலிருக்கும் பகுதியை பேசியே ஆக வேண்டும் ஏனெனில் பலர் இந்திய தத்துவங்கள் பற்றி தேடியும் எழுதியும் கொண்டுள்ளனர் அதனை வரவேற்கும் நான் அந்த ஆய்வுகளின் நோக்கம் சமூகத்தில் புறையோடி போயிருக்கும் அழுக்குகளை நீக்கி மனித சமூக விடுதலைக்காக அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே. அதனால்தான் இதனூடாக சில.
தத்துவஞானம் என்றால் என்ன?
எனவே தத்துவ சர்ச்சையை அறிவுஜீவிகளிடம் விட்டு விட்டுசாதாரண மக்கள் ஓதுங்கிவிட முடியாது. இன்று வளர்ந்துள்ள விஞ்ஞான உலகில். உலகின் மூலைமுடிக்கெல்லாம கிடக்கும் தகவல்களை நாம் பெற்று ஆய்வு செய்துகொள்ள முடியும். அதற்கு அன்றைய இலக்கியங்களும் இதிகாசங்களும் துணையாகிறது.
தத்துவம் தோன்றிய வரலாற்றுப் பின்னணி
மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தனிச் சொத்துடமை ஏற்பட்டது. உற்பத்திக் கருவிகளின் வளரச்சியின் காரணமாக உழைப்பவனும் அடுத்தவன் உழைப்பில் வாழ்பவன் என்ற உழைப்பு பிரிவினை தோன்றியது. மனித சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை தோன்றிய பின்னணியில்தான் தத்துவமும் தோன்றியது. இரண்டு வர்க்கங்களின் போராட்டத்தை ஆம் வர்க்க பகைமையை தனிக்க அதற்கான ஒழுங்குமுறை உருவாக்க ஆளும்(ஆதிக்க) வர்க்க சித்தாந்திகளால் உருவாக்கப்பட்டதே அன்றைய தத்துவங்கள். அதே நேரத்தில் கலகக்குரல் ஒலிக்காமல் இல்லை அன்று இதனை எதிர்த்த தத்துவங்களும் தோன்றிதான் உள்ளது.
விஞ்ஞானத்தில் இயற்பியல், வேதியியல், கணிதவியல், பொருளாதாரம் போன்றே சமூகவியல் வரலாற்றியல் போன்ற பொதுக் கோட்பாட்டுகள் போன்றே தத்துவமும் அந்த குறிப்பிட்ட நிலையில் உலக பார்வையே தத்துவம்
எனலாம்.
சிந்தனைக்கும் வாழ்வுக்கும் உள்ள உறவு என்ன என்ற கேள்வி, தத்துவஞானம் தோன்றிய காலத்திலிருந்தே எழுப்பப்பட்டு வரும் கேள்வி. இக்கேள்விகளுக்கு விடையளித்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர். ஒரு பிரிவினர் பொருள் இயற்கை பொருளியல் வாழ்க்கை இவைகளே முதன்மையான இவைகளின் பிரதிபலிப்பே உணர்வென்றனர். இன்னொறு பிரிவினர் ஆன்மா, சிந்தனைதான் முதன்மையானது அவற்றின் பிரதிபலிப்பே பொருள், இயற்கை, வாழ்க்கை என்றனர்.
முதல் பிரிவினர் பொருள்முதல்வாதி என்றும் இரண்டாம் பிரிவினர் கருத்துமுதல்வாதி என்றும் பிரிக்கப்பட்டனர்.
“தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது: நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது”- என்றார் தோழர் ஜே.வி. ஸ்டாலின்.
மார்க்சுக்கு முந்திய 2000 ஆண்டுகளில் கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து எண்ணற்றோர் பலியாயினர் மதத்திற்கும் மரபுகளுக்கும் எதிராகப் பேசி இளைஞர்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டி சாக்ரடீசை நஞ்சூட்டிக் கொன்றனர்.
பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது சூரியன் பூமியை அல்ல என்ற கோபர்னிக்கசின் கண்டுபிடிப்பை ஆதரித்ததற்காக கலீலியோவை சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தினர். கோப்பர்னிக்கசின் கருத்தே சரியானது என்று கூறிய காரணத்திற்காக ஜார்டானோ ப்ரூனோ என்ற மதபோதகர் 1800-ஆம் ஆண்டில் கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கப்பட்டார். பூமி
சூரியனைச் சுற்றி வலம் வருகிறது என்று கண்டுபிடித்த விஞ்ஞானி கோப்பர்னிகஸ் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட அஞ்சினார். 1543-ஆம் ஆண்டு வாழ்நாள் இறுதியில் மரணப்படுக்கையில் கிடந்த சமயத்தில்தான் அவற்றை வெளியிடும் தைரியம் அவருக்கு வந்தது.
போப் இரண்டாம் ஜான்பால் இவ்வாறு மதபீடங்கள் விஞ்ஞானிகளை 16-ஆம் நூற்றாண்டில் கொடுமைப்படுத்தியது தவறு என கி.பி. 2001 துவக்கத்தில் ஏற்றுக் கொண்டார். இந்தியாவில் லோகாயதத்தின்பிதாமகன் சார்வாகரை உயிரோடு எரித்தார்கள். புத்த மடாலயங்களும், சமணப் பள்ளிகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கழுவேற்றப்பட்டனர். தலைகள் அறுக்கப்பட்டன. பதினெண் சித்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பொருள்முதல்வாத, விஞ்ஞான நூல்கள் எரிக்கப்பட்ட நலந்தா பல்கலைக்கழகம்நான்குமுறை தீக்கிரையாக்கப்பட்டது. விக்ரமசீலா இடித்துத் தகர்க்கப்பட்டது.பொருள்முதல்வாதம் பேசினால் இங்கு கொலைதான் நடப்பாக இருந்தது. புத்தரும் மகாவீரரும்அரசர்களாதலால் பொருள்முதல்வாதம் பேசிய அவர்கள் உயிர்தப்பினர். மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய டார்வினும் ஐன்ஸ்டீனும் தங்கள் மதங்களிடம் சரணடைந்தனர். மார்க்ஸ் தனது மூலதனம் நூலை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பினார். ஆனால் அதை டார்வின் ஏற்க மறுத்தார். அது தனது குடும்பத்தாரின் கிறிஸ்தவ மத உணர்வுகளைப் புண்படுத்தி விடும் என்று கூறி மறுத்தார்.
விஞ்ஞானத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகள் புரட்சிகரமான மாற்றங்களை, அடிக்கடி தோற்றுவிக்கின்றன. இதனால் பழைய கண்டுபிடிப்புகளை சரி செய்யவோ. மறு பரிசீலனை செய்யவோ நேருகிறது. இயற்கை விஞ்ஞானம் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகி வருகிறது. அது தத்துவவியல் கருத்தோட்டமின்றி இருக்கவே முடியாது - என்றார் லெனின்,
பல்வேறு விஞ்ஞானங்களின் அறிவு பரவலாகி உறுதி பெற்று, ஆழமுறுகிறது. அதேபோல் தத்துவஞானமும் செழுமையுற்றுச் செம்மை பெற வேண்டும். இவ்வாறு தத்துவ ஞானம் வளர விஞ்ஞானங்கள் துணை புரிகின்றன. மனிதன்
என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக் கூடாது என்பதற்கு விடை காண தனது மனவுலகை மட்டுமே நம்ப வேண்டும் - எதார்த்த உலகை நம்பக் கூடாது என்பது இருத்தலியல் வாதம் (எக்சிஸ்டென்சியலிசம்) ஆகும். இந்தக் கண்ணோட்டத்தை மார்க்சியம் நிராகரிக்கிறது.
இது வரை தத்துவ ஞானிகள் உலகைப் பற்றி விளக்கம் மட்டுமே கூறி வந்தனர். ஆனால் விஷயம் என்னவெனில் உலகை மாற்ற வேண்டும் என்பதுதான் என்கிறார் மார்க்ஸ் மார்க்கக்கு முந்திய தத்துவஞானிகள் உலகின் நுன்பங்களை வியாக்கியானம் செய்தார்கள். அழுது புலம்பினார்கள். ஆனால் மார்க்ஸ்தான் உலகை மாற்றியமைக்கும் தத்துவத்தை உருவாக்கினார்.
நாம் எதை அடைய வேண்டும் - அதற்கு எதார்த்தத்தை எப்படி அணுக வேண்டும். என்ற கேள்விக்கு விடை தருகிறது தத்துவம், வர்க்கங்களாய் பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தில், இரண்டு வேறுபட்ட வர்க்க நலன்களை தத்துவம் வெளியிடுகிறது.
கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்வர்க்கப் போராட்டமாகவே இருந்தது - இன்றும் இருக்கிறது. இந்த எதிரும் புதிருமான இருபோக்குகளில் எந்தப் பக்கம் என்பதில் தத்துவ ஞானத்தின் சார்புநிலை வெளிப்படுகிறது.
லோகாயதம்
''லோகாயதா' என்கிற சொல்லுக்கு 'மக்கள் மத்தியில் தாராளமாகப் புழங்குவது', 'இக உலகு சார்ந்தது' என்று அர்த்தம். ஐரோப்பா எப்பொழுதுமே பொருள்முதல்வாதக்கண்ணோட்டத்தில் இருந்ததாகவும் இந்தியா எப்பொழுதுமே கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தில் இருந்ததாகவும் செய்யப்பட்டு வந்த பிரச்சாரத்தினை டி.டி.கோசாம்பி தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்ற மார்க்சிய அறிஞர்கள் பொடிப்பொடியாகத் தகர்த்தனர்.
வர்த்தகத்திலும், கல்வியிலும் தலைசிறந்து விளங்கி மாபெரும் கண்டுபிடிப்புகளைஉருவாக்கிய இந்தியா பின்னர் ஏன் பின் தங்கியது என்ற கேள்வியை எழுப்பி அதற்கானகாரணத்தை அவர்கள் கண்டறிந்தனர். இந்தியத் தத்துவ ஞானத்தில், ஆதி சங்கரரை மையமாகக் கொண்ட கருத்து முதல்வாதம், இந்திய விஞ்ஞான வளர்ச்சியையும், சமுதாய வளர்ச்சியையும் பாதித்தது என்பதே இந்த மார்க்சியஅறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு. லோகாயதா, இந்தியத் தத்துவம், இந்திய நாத்தீகம் இந்தியத் தத்துவத்தில் இருப்பனவும் இருந்தனவும், பண்டைக்கால இந்தியாவில் விஞ்ஞானமும் சமூகமும், மதமும் சமுதாயமும், பண்டைக்கால இந்தியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வரலாறுபோன்ற அரிய பல நூல்களை தேவிபிரசாத் நமக்கு அளித்துள்ளார்.இந்துத் தத்துவம், வேதத் தத்துவம் என்பன மட்டுமே இந்தியத் தத்துவம் என இந்துத்வவாதிகள் கூறி வருகின்றனர். இந்திய மக்கள் தங்களுக்கென உருவாக்கிக் கொண்டதத்துவம் இந்து, இஸ்லாம்.கிறித்தவம் மட்டுமல்லாமல் பொருள்முதல்வாத தத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதை
மார்க்சிய அறிஞர்கள் நிருபித்துள்ளனர்.
புத்தமதம்
பழங்காலச் சிந்தனையாளர்கள் முதன்முதலில் இயங்கியல் கருத்துக்களை வெளியிட்டனர். புத்தமதவாதிகள் தங்கள் தன்னிச்சையான இயங்கியல் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். கி.மு.5ஆம் நூற்றாண்டில் புத்தமதத்தைப் பின்பற்றியவர்கள் மாறுதலுக்குட்படாத எதுவுமே இந்த உலகத்தில் இல்லை என்று போதித்தனர். ஒரு தீப்பந்தத்தின் சுடர் மாறாமல் இருப்பது போல் தோன்றுகிறது ஆனால் ஒவ்வொரு கணத்திலும்அது வெவ்வேறாக மாறுகிறது.
அது ஒன்றே அல்ல, அதே பொருள் அல்ல என்று கூறினர். நமது உடல், உணர்ச்சிகள், அறிவு. எல்லாமே மாறிக் கொண்டிருப்பவை ஒவ்வொரு கணத்திலும் வாழ்க்கையில் புதியன தோன்றுகின்றன. பழையன மறைகின்றன. உலகில் நிரந்தரமானது என்பதே இல்லை. இருப்பாவது மட்டுமே இருக்கிறது. தொடர்ச்சியான மாற்றத்தால் அந்த இருப்பு மாறிக் கொண்டிருக்கும் செயல்முறைதான் பொருள்களின் சங்கமம் என்று கூறினர். விதையும் மரமும் ஒன்றேதான். ஆயிரம் ஆண்டு வயதுள்ள ஆலமரமும், அது தோன்றிய விதையும் ஒன்றேதான் என்றனர்.
ஆதிசங்கரர் (கிபி 4அல்லது 7):-பிராமணியத்தை நியாயப்படுத்தும் கொள்கையை அளித்த வேதாந்தத் தத்துவம் பொதுவான உலக ஆன்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும். அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது. இயற்கைப் பொருள்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று அது கூறியது. இவரது தத்துவம் அத்வைதம்'என்றழைக்கப்படுகிறது.
பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரமைதான். நிலையான பிரம்மத்தை மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய "அலைகள், குமிழிகள். நுரையாக உலகம் விளங்குகிறது. நிரந்தர ஆன்மாவுக்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது. நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது. வலதுபக்கத்திலும் இடதுபக்கத்திலும் இருக்கிறது. அது மேலும் கீழும் பரவியுள்ளது. இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்று தான். அதுவே சிறந்தது. பிரம்மத்தைத் தவிர வேறெந்தப் பொருளும் கிடையாது" "உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம்தான். வேறு எதுவு மில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்துதான் எல்லா உயிரினங்களும் தோன்றியுள்ளன. ஆகவே அவை அனைத்தும் பிரம்மம்தான். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார் சங்கரர். சாதாரண மக்களின் உடனடிப் பிரச்சனைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது; அது தொலைவில் உள்ளது.
தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதைக் காண வேண்டும் என்று எழுதினார் சங்கரர். “ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் (ஆன்மா) ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் மாயை உண்மையான அறிவாகாது பிரம்மத்தைப் புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும்” என்பது சங்கரரின் அத்வைதம்.
பகவத் கீதை:- இந்து மதத்தின் தத்துவ நூலாக கீதை போற்றப்படுகிறது. ஆனால்வர்ணாசிரமத்தை நிலைநிறுத்த மகாபாரதத்தில் பின் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்ட நூலேபகவத்கீதை. இடைச் செருகல்கள் செய்து வர்ணாசிரமத்தை நிலைநிறுத்தச் செய்யப்பட்டபல்வேறு முயற்சிகளில் ஒன்றுதான் பகவத் கீதை "நான்கு வர்ணங்களும் (ஜாதிகளும்)என்னால் உருவாக்கப்பட்டவை. அவரவர்கள் தங்கள் குலதர்மத்தைச் செய்து வர வேண்டும்”என்று பகவான் கிருஷ்ணனே போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு உபதேசிப்பதாக எழுதப்பட்டது.
இவ்வாறு இந்திய ததுவங்களை பற்றி தேடினாலும் நாம் வந்தடையும்இடம்:-
புராண இதிகாச நூல்கள் கூறும் கருத்துக்கள் நம்பிக்கைகள்அதன் தோற்றமும் முடிவும் காண இயலாது என்பதாகும். அது மதவாத கருத்தாக இருந்தாலும் இன்றைய பல எழுத்தாளர்கள் இதில் மூழ்கிதானும் மாறா நிலைவாதிகளாகி தன்னை சார்ந்தவர்களையும் இதற்கு பலியாக்குவது வெட்ககேடாக உள்ளது.
புராண இதிகாச நீதிநெறி நூல்கள் காரண காரியத்தை அறிய முடியாது என்று நம்பிக்கைக்கு பலியாக இருப்பதை காணலாம். இந்தக் கருத்துகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஒவ்வொருகால சமுதாய வளர்ச்சி போக்கில் உதித்ததாய் உள்ளன.
அடிப்படையில் சமூக மாற்றம் ஏற்பட்ட பிறகும் சூழ்நிலை கருதி இந்தக் கருத்துக்கள்நீடித்து நிற்பதற்கான வழிவகை உண்டு ஆக கருத்துகளை கருத்துக்களாக வென்று விடமுடியாது. அதற்கான பணியென்பது சமூக மாற்றத்தின் ஊடாக செய்ய வேண்டியதாக உள்ளதுஎன்பேன்.
இருபதாம் நூற்றாண்டிலும் பெரும்பாலான இந்தியகல்வியாளர்களும் அரசியல் தலைவர்களும் முக்கிய பிரச்சினைகளுக்கு பண்டைய நூல்களில் இருந்து தங்களுக்கான மேற்கோள்களை காட்டுகின்றனர். அதில் குறிப்பாக பகவத் கீதையாக இன்னும் சில முக்கிய இதிகாச புராண நூல்களிலின் தகவல்களை பயன்படுத்துவது போல் தமிழகத்தில் திருக்குறளையும் வேதமாக கொண்டு சிலர் எழுதிக் கொண்டிருப்பதை காணலாம். இவ்வாறு பழைய நூல்கள் அதாவது பிரமாணமாக அமையும் நூல்கள் எக்காலத்துக்கும் உரியவை எனக் கொள்வது அவற்றை இயற்றியவர் ஆதி மனிதராக இருக்க வேண்டியது தவிர்க்க இயலாது ஆகிவிடுகிறது. இந்தியாவுக்கு பொதுவான இப்ப பழமை போற்றும் மனப்பான்மை தமிழர் சித்தாந்தத்துக்குபொருந்தும்.
இந்திய மெய்யியல் வரலாற்றைப் படிப்பவர்க்கு முனைப்பாக தோன்றும் ஒரு பண்பு உண்டு. இந்தியாவில் எழுந்த மெய்யியல் உட்பிரிவுகள் யாவும் வேத உபநிடதங்களையே ஆதாரமாக கொண்டவையாக இந்திய மெய்யியல் முழுதும் உபநிடதங்களே மூலாதாரம் வேத சமயம் (Religion of the veda) என்ற நூலில் ப்ளூம்ஃபீல்டு (Bloomfield)என்ற ஆசிரியர் கூறுகிறார். புற சமயமாகிய பௌத்தம் உட்பட இந்திய சிந்தனை வடிவங்களில் வேதங்களில் வேர்விட்டு வளராத ஒன்றேனுமில்லை உண்மையில் உலகாயதம் ஒன்றிணைத்தவிர.
இந்திய மெய்யியல் பிரிவுகள் வேத உபநிடதங்களை மூலத்தோற்றுவாயாய் கொண்டவையே. பண்டைய இந்தியா அல்லது வேதங்கள் வழி வந்து சிந்தனைகள்உபநிடதங்களையே நிறைவு பெறுகின்றன என்பர்.
பல்வேறு சூத்திரங்களினால் ஒரு நூல் இயற்றினார் அதன் பெயர் பிரம்ம சூத்திரம் அத்வைதத்தை நிறுவிய சங்கரர், துவைதத்தை நிறுவிய மத்துவர், விசிட்டாத் துவைதத்தை நிறுவிய ராமானுஜர் என்பவர் எல்லாம் பிரம்மசூத்திரத்துக்கு பாடியங்கள் எழுதியோராவார். பிரம்மசூத்திரங்களையும்
உபநிடதங்களையும் முரண்பட்ட வகையில் விளக்கிய இவர்கள்.
தத்தம் மதங்களை சாதித்தனர். இது பற்றி ராதாகிருஷ்ணன் கூறுகிறார் பிற்காலத்திய எழுந்து மெய்யியல் பிரிவுகளை சார்ந்தோர் தமது கோட்பாடுகளுக்கு உபநிடதங்களுக்கு உடன்பாடு காண்பதிலேயே காட்டும் ஆவல் இரங்கத் தக்கதாக உள்ளது. தமது கூற்றுக்களை உபநிடதங்களின் மேல் சுமத்து முடியாத இடத்தில் அவ்வாறு செய்யவே படாத பாடுபட்டனர்.(என்கிறார் ராதாகிருஷ்ணன்).
இதிலிருந்து பெறப்படுவது ஒன்றுதான் இந்திய மெய்யியலை பொருத்தவரையில் ஆராய்ச்சி என்றைக்கோ முடிந்த முடிவுக்கு வந்து விட்டது அறுதியாக வெளியிடபட்டு விட்டன. பின் வந்தஞானிகளின் ஆராய்ச்சிகள் யாவும் முடிவுகளை சரியாக விளங்கிக் கொள்வதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்டன அந்த முடிவுக்கு ஏற்றவாறு தன்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொண்டனர் - அடியும் முடியும் க. கைலாசபதி.
அவரவர் சக்திக்கும் பக்குவத்திற்கும் ஏற்ப அறியப்படவேண்டுமேயன்றி புதிதாக கூறத்தக்க உண்மைகள் இனி உண்டு என்பது அல்ல. இந்தஅடிப்படையில் நம்பிக்கையின் விளைவுகள் பாரதூரமானவை அவற்றுள் ஒன்று இன்நம்பிக்கைவரலாற்று நோக்குக்கு அறவே இடம் அளிக்காததாகும். எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மைஎன்று கூறப்பட்டு விட்டதால் அவை காலம் கடந்தவை ஆகின்றன. ஆக அவற்றைக் கால அளவில்ஆராயும் அவசியம் இல்லாத போகின்றது. ஆகவே அவற்றின் காரணகாரிய நியதிக்குட்பட்டுநோக்கமும் அற்றுப் போகிறது சுய சிந்தனைக்கும் விமர்சனத்திற்கும் ஏற்ற நம்பிக்கைஎன்று கூற முடியுமா? என்கிறார் கைலாசபதி. ஆக இங்குள்ள மெய்யியலை புரிந்துக்கொள்வது அதனை மக்களிடம் உள்ள அறியாமையின் அடியாழத்தை புரிந்துக் கொள்ள பயனளிக்கும்.