குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை நாம் வரலாற்று பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தி லிருந்து புரிந்துகொள்ள வேண்டும். குடும்பம் என்பதை ஒரு வரலாற்று கருத்தினமாக நாம் அணுக வேண்டும். குடும்பமானது பல்வேறு வடிவங்களாக மாறி வரலாற்றில் வளர்ந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பண்டைய காலத்தில் குழுமண வடிவத்தில் குடும்பம் இருந்தது, பின்பு தனிவுடமை தோன்றி வளர்ந்த போது ஒருதாரக் குடும்பமாக குடும்ப வடிவம் மாறியது. சமுதாய வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களுக்கும் இடையிலான அங்கக ரீதியான தொடர்பையும், இந்தவடிவங்கள் உற்பத்தி முறையின் மாற்றங்களை எப்படி சார்ந்துள்ளன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்..
உற்பத்தி சக்திகள் வளர வளர சமுதாய அமைப்பின் மீது இரத்த உறவு முறையின் தாக்கம் அதாவது அண்ணன், தம்பி, தாய் தந்தை, பிள்ளைகளுக்கும், இடையிலான தாக்கம்எப்படியெல்லாம் குறைந்துகொண்டே சென்றது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தனிவுடமை வெற்றி பெற்ற பின்பு சொத்துடமை அமைப்பானது குடும்ப அமைப்பின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் நிலையாக எப்படி மாறுகின்றது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தனிவுடமை தோன்றிய பின்பு சமுதாயத்தில் என்ன வகையான மாற்றங்கள் நிகழ்ந்தது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.. அதற்கான அறிவை பெறுவதற்கு குடும்பம், தனிச்சொத்து, அரசு
ஆகியவற்றின் தோற்றம் என்ற எங்கெல்சால் எழுதப்பட்ட நூலை நாம் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்..
தற்போதைய முதலாளித்துவ சமுதாயத்தில் குடும்பங்களின் நிலையை நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். தனிவுடமை ஆதிக்கம் செலுத்தும் இன்றைய சூழலில் பொருளாதாரத்தின் அடிப்படையில் பெண்களுடைய சமமின்மையை நாம் விரிவாக அலசி ஆராய வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறையை சமூகத்தில் ஒழித்துக்கட்டினால்தான் பெண்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்தற்கான ஆதாரங்களை நாம்தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டு உருவாக்கப்படும் சோசலிச சமூகத்தில்தான் பொண்கள் சமூக உற்பத்தியில்பரவலாக ஈடுபடுத்தப்படுவதற்கான விரிவான வாய்ப்புகள் ஏற்படுகிறது. அதன் காரணமாக சமுதாய வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முழு சமத்துவம் அளிக்கப்படும். கட்டாயமான வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்படுவார்கள். வீட்டு வேலைகள் என்ற இந்தப் பணியை சமுதாயத்திலுள்ள ஆண் பெண் வேறுபாடுகள் இல்லாமல் சமுதாயத்திலுள்ள அனைவரும் எடுத்துச் செய்யும் நிலையை ஏற்படுத்தப்படும். அதன் மூலம் அப்பொழுதுதான் ஆண் பெண் வேறுபாடுகள் நீங்கி அனைத்து மனிதர்களுக்கு இடையிலான முழு சமத்துவம், பரஸ்பரமான ஒருவரை ஒருவர் மதிக்கக்கூடிய நிலை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உண்மையான அன்பு நிலைபெறும். இந்த வகையில்தான் சோசலிச சமுதாயத்தில்தான் சமூகத்தில் மிகமிக உயர்வான குடும்பங்கள் உருவாகி நிலைபெறும் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைய சமுதாயத்தில் குடும்பங்களில் நிலவும் பல்வேறுவிதமான தீய தன்மைகளை ஒழிப்பதற்கு சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் பிற்போக்கு முதலாளித்துவ சிந்தனையாளர்களும், பெண்ணியவாதிகளும் குடும்பத்தை சமூகத்திலிருந்து தனியாகப் பிரித்து குடும்பத்தை சீர்திருத்தவது என்று மட்டும் செய்து குடும்பத்தை சிறந்த குடும்பமாக மாற்றிவிடலாம் என்று கருதுகிறார்கள். அதாவது நிலவுகின்ற முதலாளித்துவ சமூகத்தை ஒழித்துக்கட்டாமல் குடும்பத்தை மட்டும் சீரமைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள். சமூகத்தை மாற்றியமைக்காமல் குடுபத்தை சீரமைப்பதன் மூலம் மட்டுமே அதாவது கணவனின்ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே பெண்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று கருதுகிறார்கள். பெண்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஆண்களைப் போலவே இந்த சமூகத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார் என்பதையும், குடும்பச் சூழலால் மட்டுமல்ல நிலவுகின்ற சமூகச் சூழலாலும் ஆண்களைப் போலவே பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள். ஆகவே இந்த பெண்ணியவாதிகள் பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தும் இடையிலான ஒருபக்க உறவை மட்டும் பார்த்து பெண்களுக்கும் இந்த சமூகத்துக்கும் இடையிலான மறுபக்க உறவை இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள். ஒரு பொருளின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள அதனோடு தொடர்புடைய அனைத்தையும் பார்த்து பரிசீலிப்பதன் மூலமே அந்தப் பொருளின் உண்மையான இயக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்ற இயங்கியல் கண்ணோட்டத்துக்கு எதிரான இவர்களது பார்வையானது இயங்காவியல் பார்வையாகும். ஆகவேதான் பெண் விடுதலை பற்றிய முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள் மற்றும் பெண்ணியவாதிகளின் கொள்கைகளும் கருத்துக்களும் விஞ்ஞானத்துக்கு எதிராக அமைந்து இவர்கள் பெண் விடுதலைக்கான போராட்டத்தில் தொடர்ந்து தோல்வியடைகிறார்கள்.
தற்போது நிலவும் சொத்துடமை வடிவம் தோன்றுவதற்கு முன்பு மனித சமூக வரலாற்றில் பல்வேறுவிதமான சொத்துடமை வடிவங்கள் உலகில் நிலவி இருந்தது. ஆகவே வரலாற்றில் நிலவிய பல்வேறுவிதமான சொத்துடமை வடிவங்களையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இத்தகைய பல்வேறு வகையான சொத்துடமை வடிவங்கள் எவ்வாறு மாற்ற மடைந்தன அல்லது வளர்ந்தது என்பதையும், இத்தகைய மாற்றங்களுக்கும் வரலாற்றில் நிலவிய சமூக அமைப்புகளுக்கும் இடையிலான உறவைப் பற்றியும், இந்த உறவின் காரணமாகவே பல்வேறுவிதமான சொத்துடமை வடிவங்கள் சமுதாயத்தில் உருவானது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே தற்போது நிலவுகின்ற சொத்துடமை வடிவங்களைப் புரிந்துகொள்வதன் மூலமே நிலவுகின்ற சமூக அமைப்பின் வடிவத்தையும் நாம் புரிந்துகொள்ளவும் அவற்றுக்கு இடையிலான உறவையும் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய புரிதல் இல்லாமல் சமூகத்தை மாற்றியமைப்பதற்கான புதிய வகையிலான சொத்துடமை உறவை நம்மால் ஏற்படுத்துவதற்கான கொள்கை முடிவை நாம் எடுக்க முடியாது..
ஆகவேதான் சமூக மாற்றமானது நிலவுகின்ற உற்பத்தி உறவைஒழித்துவிட்டு புதிய வகையிலான உற்பத்தி உறவை ஏற்படுத்துவதுதான் என்று மார்க்சியம் தெளிவுபடுத்துகிறது. இந்த அடிப்படையில் நமது சிந்தனையை அமைத்துக்கொள்ளாமல் ஜனநாயகப் புரட்சி என்றும் சோசலிசப் புரட்சி என்றும், பாசிச எதிர்ப்பு என்றும் வார்த்தை விளையாட்டுகளில் பலரும் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். ஆகவே நமது முதன்மையான வேலை நிலவுகின்ற வர்க்கங்களையும், வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளையும், சொத்துடமை உறவுகளையும் அலசி ஆராய்ந்து நிலவுகின்ற சொத்துடமை உறவையும் வர்க்கங்களுக்கு இடையிலான உற்பத்தி உறவுகளைப் பற்றி புரிந்துகொள்வதற்கு வர்க்க ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வர்க்கமும் என்ன வகையான பொருளியல் வாழ்க்கை வாழ்கிறார்கள் அவர்கள் ஒவ்வொருவரும் என்ன வகையான பொருளியல் வாழ்க்கை அவர்களுக்குத் தேவை என்று கருதுகிறார்கள், அதற்காக என்ன வகைகளில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களின் போராட்ட உணர்வுகளையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும், அதன் மூலமே நாம் மக்களிடம் இருந்துகற்றுக்கொள்ள வேண்டும்.. மேலும் என்னவையான புதிய உற்பத்தி உறவு அல்லது சொத்துடமை உறவை நாம் உருவாக்க வேண்டும் என்பதைமுடிவு செய்து புதிய உற்பத்தி உறவை உருவாக்குவதற்கான திட்டம்
மற்றும் போர்த்தந்திரத்தை உருவாக்க வேண்டும். இந்த அடிப்படையை புரிந்துகொள்ளாமல் வெறும் வார்த்தை விளையாட்டுகளால் பயன் இல்லைஎன்றே நான் கருதுகிறேன்..
சமூகத்தில் தற்போது நிலவும் தனிவுடமையும் சரி இதற்கு முன்பு நிலவிய பல்வேறு வகையான தனிவுடமையும் சரி, எக்காலத்திலும் நிரந்தரமாக நிலவக்கூடியது அல்ல. நீண்ட பழங்காலத்தில் மனிதர்களின் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக பொதுவுடமையாகவே இருந்தது. மனிதகுல வரலாற்றில் நீண்டகாலத்தில் தனிவுடமை என்ற நிலை ஏற்படவே இல்லை. உற்பத்தி சக்திகள் அதாவது உழைப்பு கருவிகள், தொழிற்சாலைகள், தொழில்நுட்பங்கள், நிலங்கள், போக்குவரத்து சாதனங்கள் போன்றவைகளையே உற்பத்தி செய்வதற்கான சக்திகள் என்று சொல்லப்படுகிறது. இந்த உற்பத்தி சக்திகள் வளர்ந்ததால் மனிதர்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது, அதனால் அதிக அளவிலான உற்பத்தி நடைபெற்றது. உபரியான உற்பத்தியின் விளைபொருளை சிலர் அபகரித்து தனக்கு மட்டும் சொந்தமாக மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகியது. இத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி ஒருசிலர் அவர்களின் தனிவுடமையை வளர்த்துக்கொண்டார்கள். தொடர்ந்து அவர்களின்தனிவுடமையை அதிகரிக்க பிறரது உழைப்பின் பலன்களை சுரண்டுவது தீவிரமடைந்தது. அதன்காரணமாக சமுதாயத்தில் பிறரது உழைப்பை சுரண்டுபவர்கள் ஒருவிதமான வர்க்கமாகவும், இவர்களின் சுரண்டலுக்காக உழைப்பவர்கள் வேறுவிதமான வர்க்கமாக மாறி மனித சமூகத்தில் எதிர்எதிரான பகைமையான வர்க்கங்கள் உருவாகின. இந்த பகைமையான வர்க்கங்களுக்கு இடையில் மோதல்கள் உருவானது. இந்த மோதல்களை சுரண்டும் வர்க்கங்களின் நலன்களிலிருந்தும் சுரண்டும் வர்க்கங்களை பாதுகாப்பதற்காக ஆயுதம் தாங்கிய வன்முறை கருவியான அரசு, சமூகத்தில் உருவானது. ஆகவே உற்பத்தி கருவிகளின் வளர்ச்சியினால் மனிதர்களின் உற்பத்தி திறன் அதிகரித்தது, அதனால் உற்பத்தி அதிகரித்தது, அதனை தொடர்ந்து உபரி உற்பத்தியை சிலர் கைப்பற்றிக்கொண்டு உடமை வர்க்கமாக மாறினார்கள், அதனை தொடர்ந்து இவர்கள் உற்பத்தியில் ஈடுபட்ட உழைக்கும் மக்களை சுரண்டி சொத்து சேர்த்தனர். மனிதசமூகம் பகையான வர்க்கங்களாக பிளவுபட்டது. இந்த வர்க்கப் பகைமையை அமைதியான வழியில் தீர்க்க இயலாததன் காரணமாக சுரண்டும் வர்க்கங்களை பாதுகாக்கவே வன்முறை கருவியான அரசு உருவானது. இந்த உண்மையை ஒவ்வொருவரும் மிகவும் ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும்..
அரசின் தோற்றம், அதன் சாராம்சத்தை பன்முக ரீதியில் ஆராய்ந்து, அரசு பற்றிய தெளிவான கோட்பாடுகளை மார்க்சிய ஆசான்கள் உருவாக்கினார்கள். அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களதுபோதனைகளை நாம் கற்று அறிய வேண்டுமானால், மார்க்சிய ஆசான்கள் எழுதிய லூயி போன்ப்பார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், பிரான்சில் உள்நாட்டுப் போர், டூரிங்குக்கு மறுப்பு, குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அரசும் புரட்சியும் போன்ற மார்க்சிய ஆசான்களது நூல்களை நாம் படிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள இடதுசாரிகளில் பல பேர்களுக்கு அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகள் தெரியாது. இடதுசாரி தலைவர்களும் அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இல்லை. அதன்காரணமாக இடதுசாரி அமைப்பிலுள்ள பலருக்கும் நடைமுறையிலுள்ள அரசைப் பற்றியும் தெரியாது உழைக்கும்மக்களுக்கு எந்தவகையான அரசு தேவை என்பதும் தெரியாது. அரசு பற்றி முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு என்ன தெரியுமோ அந்த அளவிலேயே இடதுசாரிகளும் தெரிந்து வைத்துள்ளார்கள். ஆகவேதான் இடதுசாரிகளும் முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் போலவே இருக்கிறார்கள். இடதுசாரிகளுக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கும்எவ்விதமான வேறுபாட்டையும் இங்கு காணமுடியவில்லை. அவர்களுக்கு இடையிலான வேறுபாடு அவர்கள் ஏந்திக்கொண்டிருக்கும் கொடிகளில் மட்டுமே காண முடிகிறது. அரசு பற்றிய கொள்கையில் இவர்களுக்கு இடையில் எவ்விதமான வேறுபாட்டையும் காணமுடியவில்லை. ஆகவே உண்மையான இடதுசாரிகள் அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை படித்து புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் தங்களது அரசியல் கொள்கையை வகுத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இடதுசாரிகள் உண்மையான மார்க்சிய லெனினியவாதிகளாக மாறி வளரமுடியும்..
அரசு என்பதை வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்கும் பொதுவான நிறுவனமாக அடையாளப்படுத்தும் சித்தாந்தவாதிகளும் அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றி உற்பத்திச் சாதனங்களை அதாவது மூலதனத்தை உடமையாகக் கொண்ட வர்க்கங்கள், உடமையற்ற வர்க்கங்களின் உழைப்பு சக்தியை சுரண்டி அதாவது திருடி தனது மூலதனத்தை அதாவது சொத்துக்களை குவிக்கும் நோக்கத்திற்காக உடமையற்ற உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான கருவிதான் இந்த அரசு என்பதை மூடிமறைக்கிறார்கள். பண்டைய ஏதென்ஸ், ரோமாபுரி, ஜெர்மனி, இந்தியாவிலும் தோன்றிய அரசுகளின் வரலாறறை நாம் ஆய்வு செய்தால், இந்த அரசுகள் தோன்றியபோதே சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களை உடமையாகப் பெற்ற வர்க்கங்களுக்கு ஆதரவாக ஆதிக்க சக்தியாகவே அரசுகள் தோன்றியதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்த உண்மையை வரலாற்றிலிருந்து தகுந்த ஆதாரங்களோடு நிறுவியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற மார்க்சிய ஆசான்கள் ஆவார்கள். அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும்தான் மார்க்சியவாதிகள் ஆவார்கள். இதனை மறுப்பவர்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் மார்க்சியத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்களே ஆவார்கள். உலகில் தோன்றிய அரசுகள் பல வடிவங்களில் தோன்றியது. இவ்வாறு அரசானது பல வடிவங்களைக் கொண்டிருந்தாலும் அனைத்துவகையான அரசுகளுக்கும் நோக்கம் ஒன்றுதான். அதாவது உற்பத்திச் சாதனங்களை உடமையாகக் கொண்ட வர்க்கங்களின் நலன்காப்பதுவே ஆகும். மேலும் இந்த வர்க்கங்களை எதிர்க்கும் வர்க்கங்களை ஒடுக்கும் நோக்கம் கொண்டதே ஆரசாகும். ஆகவேதான் தற்போது சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் வர்க்கமானது உற்பத்திச் சாதனங்களுக்கு உடமையாளனாக மாற்றப்பட வேண்டும். அவ்வாறு உழைக்கும் வர்க்கமானது உற்பத்திச் சாதனங்களுக்கு உடமையாளனாக மாற்றப்பட்டுவிட்டால் இந்த உடமையை அதாவது உழைக்கும் மக்களின் உடமையை பாதுகாப்பதற்கான அரசு அதற்குத் தேவைப்படும் அல்லது இந்த பொதுவுடமையை ஒழிப்பதற்கான வேலைகளில் ஈடுபடும் முதலாளிகளின் எதிர்ப்புரட்சியை நசுக்கவும் உழைக்கும் மக்களுக்கு அரசு தேவைப்படுகிறது. இந்த அடிப்படை கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் நிலவுகின்ற பாராளுமன்ற ஆட்சி முறையானது எவ்வளவுதான் ஜனநாயகம் என்று பேசினாலும், அது சாராம்சத்தில் சுரண்டும் வர்க்கங்களின் குறிப்பாக முதலாளிகளின் சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கிறது என்பதை மார்க்சிய ஆசான்கள்
தகுந்த ஆதாரங்களோடு நிறுவினார்கள். மேலும் உழைக்கும் வர்க்கத்திற்கான அரசானது முதலாளிகளின் எதிர்ப்புரட்சியை ஒடுக்குவதற்கான பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசாகவே இருக்க வேண்டும் என்றும் மார்க்சியம் போதிக்கிறது..
கம்யூனிஸ்ட் தலைவர்களிடையே சில தலைவர்கள் பாராளுமன்ற அமைப்பின் மீது நம்பிக்கை வைக்கும் கற்பனையை மக்களிடம் விதைத்தார்கள். அவர்களை எதிர்த்து மார்க்சிய ஆசான்கள் கடுமையாகப் போராடினார்கள். மூலதனத்தின் ஆதிக்கம் நீடிக்கும் வரை எல்லாவிதமான ஜனநாயகமும், சுதந்திரமும் உழைக்கும் மக்களுக்கு உண்மையான விடுதலையை கொண்டுவராது என்பதை மார்க்சிய ஆசான்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்..ஆகவே மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்குஉழைக்கும் வர்க்கமானது தொடர்ந்து போராட வேண்டும் என்றும், அதற்குஉழைக்கும் வர்க்கமானது மூலதனத்தை அதாவது உற்பத்திச் சாதனங்களைஉழைக்கும் மக்களுக்குச் சொந்தமான உடமையாக ஆக்க வேண்டும் என்றும்அதற்காக நிலவுகின்ற முதலாளித்துவ அரசை அடித்து நொறுக்கிவிட்டு உழைக்கும் மக்களின் பொதுவுடமையை பாதுகாப்பதற்கான அரசை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. எனினும் முதலாளித்துவ நாடுகளில் நிலவும் முதலாளித்துவ ஜனநாயகத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு கம்யூனிஸ்டுக் கட்சியானது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. இங்கே இரண்டு வகையான எதிர்மறைகளைப் பற்றி மார்க்சியம் போதிக்கிறது. ஒன்று முதலாளித்துவ ஜனநாயகத்தின் மூலம் உழைக்கும் மக்கள் முழுமையான விடுதலை அடைய முடியாது என்கிறது. அதே சமயம் இதற்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயகத்தை உழைக்கும் வர்க்கமானது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறது. இதனை புரிந்துகொள்வதில் பலருக்கும் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் மார்க்சிய கண்ணோட்டம் உள்ளவர்களால் இதனை குழப்பமில்லாமல் புரிந்துகொள்ள முடியும். அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்தின் மூலம் உழைக்கும் மக்கள் தங்களது கருத்துக்களை பிரச்சாரம் செய்வதற்கு சுதந்திரம்கிடைக்கிறது, ஆகவே தனது கருத்தை உழைக்கும் மக்களிடையே
பரப்புவதற்கான சுதந்திரத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று உணர்ந்து அந்த சுதந்திரத்தை பயன்படுத்துவதுதான் அறிவுடமை ஆகும். அதேபோல் உழைக்கும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தையும் நாம் பயன்படுத்துவது அவசியமே என்பதை உழைக்கும் மக்கள் உணர்ந்து சட்டப்பூர்வமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. அதே வேளையில் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே உழைக்கும் மக்களுக்கான முழுமையான விடுதலையை அடையமுடியும் என்று கண்மூடித்தனமாக நம்பி நமதுநடைமுறையை வகுத்துக்கொள்ளக் கூடாது என்று மார்க்சியம் எச்சரிக்கிறது. இந்த கண்ணோட்டத்தை சரியாகப் புரிந்துகொள்பவரே சிறந்த மார்க்சியவாதி ஆவார். இதற்கு மாறாக முதலாளித்து ஜநாயகத்தையே முழுமையாக நம்பி செயல்படுவதும், முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு முடிவுகட்டிவிட்டு பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தை நிறுவ மறுப்பதும் தவறுஆகும்,
இதற்கு எதிராக பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தை நிறுவுவதற்கான செயல்பாட்டில் மட்டும் ஈடுபட்டுக்கொண்டு முதலாளித்துவ ஜனநாயகத்தை பயன்படுத்த மறுப்பதும் தவறாகும் என்று மார்க்சியம் போதிக்கிறது. ஆகவேதான் ஒரு பாட்டாளிவர்க்க கட்சியானது சட்டப்பூர்வமான போரட்டங்களை நடத்தும் அதே வேளையில் சட்ட மறுப்பு போராட்டங்களையும் நடத்திட வேண்டும் என்றே மார்க்சியம் போதிக்கிறது. இந்திய முதலாளிகளுக்காகப் பாடுபட்ட காந்தி கூட சட்டப்பூர்வமான போராட்டத்தையும் சட்ட மறுப்பு போராட்டங்களையும் நடத்தினார் என்பதை கவனத்தில் கொண்டால் இதனை நாம் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு மார்க்சியத்தின் போதனைகளில் காணப்படும் எதிர்மறைகளுக்கான நிபந்தனைகள் மற்றும் சூழலைக்கொண்டு புரிந்துகொள்பவரே சிறந்த மார்க்சியவாதி ஆவார். உதரணமாக தேர்தலில் பங்குகொள்ள வேண்டும்என்று லெனின் சொல்லியுள்ளார் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு தேர்தலில் ஏன் பங்கு கொள்ள வேண்டும் என்பதையும் தேர்தல் மூலம் கம்யூனிஸ்டுகள் என்ன பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் சில சமயங்களில் தேர்தல்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதையும் கண்டுகொள்ளாமல் தேர்தல் பாதையிலேயே மூழ்கிவிடுவதும் தவறு அதே போல் தேர்தலை முழுமையாகப் புறக்கணிப்பதுவும் தவறாகும். சரியான மார்க்சிய கண்ணோட்டம் இல்லாதவர்களே மார்க்சிய ஆசான்களின் போதனைகளை சரியாகப் புரிந்துகொள்ள தவறுவதை நாம் பார்க்கிறோம்.
இத்தகைய தவறுகளை எதிர்த்து போராட வேண்டியது மார்க்சிய லெனினியவாதிகளின் கடமையாகும். உற்பத்தி சக்திகள் அதாவது உற்பத்தி கருவிகள், தொழிற்சாலைகள், தொழில்நுட்பங்கள், போக்குவரத்து சாதனங்கள், போன்றவைகள் அனைத்தும் வளர வளர சமூகத்தின் உற்பத்திமுறையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில்தனிவுடமை தோன்றியது. அதற்கு முன்பு சமூகமானது பொதுவுடமையாக
இருந்தது. இந்த பொதுவுடமைச் சமூகம் தகர்ந்து தனிவுடமை தோன்றியது. இந்த தனிவுடமை சமூகத்தில்தான் அதுவரை மனிதர்களிடம் எவ்விதமான பிளவுகளும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்த மனிதர்கள் வர்க்கங்களாக பிளவுபட்டு மனிதர்களுக்கு இடையிலான ஒற்றுமை தகர்ந்தது. இவ்வாறு மனிதர்கள் வர்க்கங்களாக பிளவுபட்டது தவிர்க்க முடியாததாகவே அப்போது இருந்தது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் இந்தப் பிளவுக்கு அடிப்படையாக இருந்தது. முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்தி சக்திகள் மேலுமேலும் வளர்ச்சியடைகின்றது. இந்த வளர்ச்சியின் காரணமாக தனிவுடமையும் சுரண்டும் வர்க்கங்களும் சமுதாயத்தின் உற்பத்தியின் வளர்ச்சிக்கு தடையாக மாறுகிறது. முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தில் முதலாளித்துவ தனிவுடமையும் சுரண்டும் வர்க்கங்களும் உற்பத்தி சக்திகளை வளர்க்கின்றன, அதன் பயனாக சமூக உற்பத்தி அதிகரித்து வளர்க்கப்படுகிறது, சமுதாயமும் வளர்ந்தது. ஆனால் இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் உற்பத்தி அதிகரித்த போதும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் சந்தையில் விற்க முடியாமல் தேங்குகிறது. அதனால் முதலாளிகள் உற்பத்தியை தொடராமல் உற்பத்தியை குறைக்கிறார்கள். ஆகவே இவர்கள் உற்பத்தி சக்தியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறார்கள்இவ்வாறு முன்பு சமூகத்தின் உற்பத்தி வளர்ச்சிக்கும் பொதுவாக சமூகத்தின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்த முதலாளிகள், தற்போது சமூகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக மாறிவிட்டார்கள். ஆகவே சமூகத்தை வளர்ப்பதற்கு இந்த முதலாளிகளின் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டியது அவசியமாகிறது. இந்த அவசியத்தின் காரணமாகவே இந்த முதலாளிகளின் நலன் காக்கும் அரசை எதிர்த்து புரட்சி நடத்திட வேண்டியது அவசியமாகிறது என்று மார்க்சிய ஆசான்கள் தொடர்ந்து போதித்தார்கள்..
அதாவது நிலவுகின்ற அரசு இயந்திரத்தை அடித்து நொறுக்குவது அவசியம் என்று தொடர்ந்து மார்க்சிய ஆசான்கள் வலியுறுத்தினார்கள். இத்தகைய புரட்சியின் மூலம் மட்டுமே நிலவுகின்ற முதலாளித்துவ ஜனநாயக அரசு இயந்திரம் அடித்து நொறுக்கப்பட்டு முதலாளித்துவ ஜனநாயகத்தைக்காட்டிலும் மிகவும் உயர்ந்த பாட்டாளி வர்க்க ஜனநாயக அரசு உருவாக்கப்படும் என்று மார்க்சிய ஆசான்கள் போதித்தார்கள். இந்த உண்மையை மறுக்கும் திருத்தல்வாதிகள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டே நிலவுகின்ற முதலாளித்துவ ஜனநாயகத்தை மெச்சி புகழ்ந்துகொண்டே இந்த முதலாளித்துவ அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தியே பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நிறுவ முடியும் என்று சொல்லி நம்மை ஏமாற்றுவதற்காகவே தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்து முதலாளிகளுக்கு சேவை செய்ய துடிக்கிறார்கள். ஆகவே பொதுவுடமை இயக்கத்திலுள்ள இந்த திருத்தல்வாதிகளின் துரோகத்தை
நாம் புரிந்துகொண்டு நாம் புறக்கணிக்க வேண்டும். ஆகவே நமக்குத் தேவை முதலாளித்துவ ஜனநாயக அரசு அல்ல, மாறாக பாட்டாளி வர்க்க ஜனநாயக அரசுதான் நமக்குத் தேவை என்பதையும், பாட்டாளி வர்க்க அரசு மட்டுமே உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மிகச் சிந்த ஜனநாயகத்தை வழங்கக்கூடிய அரசாக இருக்க முடியும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அத்தகைய அரசை உருவாக்குவதற்காகப் பாடுபட வேண்டும்..
தேன்மொழி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++