இலக்கு 35 இதழ் PDF வடிவில்

இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

1). மனிதர்களின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றனமாவோ

2). இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு லெனின். - பகுதி – 5

3). ரசிய புரட்சியும் லெனினும்


இலக்கு 35 இணைய இதழ் PDF வடிவில் இந்த லிங்கினை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே

பாலஸ்தீன மக்கள் மீதான ஏகாதிபத்திய போரினை அறிய

2022 டிசம்பர் மாதம் நெதன்யாகு கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பது; காசாவை முற்றாக அழிப்பது; பாலஸ்தீனத்தை அழித்து யூத நாடு உருவாக்குவது என்று அறிவித்து பாலஸ்தீன இனப்படுகொலைக்கு அறைகூவல் விடுத்தது. அரேபியர்களின் புனிதத் தலமான அல்-அக்ஷா மசூதியை இடிக்க திட்டமிட்டது. அதிதீவிர வலதுசாரி ஜியோனிச தீவிரவாத குழுக்கள் மூலம் ஜனவரி 2023 முதல் பாலஸ்தீன மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்து வந்தது. இதற்கு எதிர்வினையாக ஹமாஸ் இயக்கம் அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தியது. அதில் 1400 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் இராணுவம் காசா மீது ஏவுகனை மூலம் இதுவரை 6500க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை (இதில் பாதி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்) கொன்று குவித்துள்ளது. மேற்குக் கரையிலுள்ள ஜியோனிச குழுக்களுக்கும் தனி நபர்களுக்கும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களை கொல்வதற்கு துப்பாக்கிகளை வழங்கியுள்ளதுபாலஸ்தீன பகுதிகள் மீது முழு யுத்தத்தைஅமெரிக்க-நேட்டோ ஆசியுடன் இஸ்ரேல் அறிவித்துள்ளது. அமெரிக்கா போர்கப்பல்களை அனுப்பியுள்ளது. மத்திய கிழக்கின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கொள்ளையடிக்க பாலஸ்தீன மக்களை ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்யும் பொருட்டு யுத்தவெறியுடன் அமெரிக்க- இஸ்ரேல் பாசிச கும்பல் அலைகின்றது.

பாலஸ்தீனியர்களுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தி வாஷிங்டனில் உள்ள P.A அலுவலகத்தை மூடும் அமெரிக்க முடிவுக்கு பிறகு பாலஸ்தீனத்தின் தலைமை தூதரான சயீத் எரேகாட், அமெரிக்காவின் மற்றொரு சமாதான உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக இனி எமது மக்கள் கொடுமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று கூறினார். மேலும் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் விற்பனைக்கு இல்லை; நாங்கள் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மற்றும் கொடுமைப்படுத்துதலுக்கு அடிபணிய மாட்டோம்; நீதி மற்றும் சுதந்திரத்திற்கான எங்கள் நியாயமான போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்; சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளை கையாள்வோம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்றார்.இந்தபோரானது உண்மையில்-எண்ணெய் - எரிவாயு உள்ளிட்ட பாலஸ்தீனிய இயற்கை வளங்களை இஸ்ரேல் சுரண்டுவதற்காக, இது எண்ணெய் - எரிவாயுவின் தனித்தன்மையை புதுப்பிக்க முடியாத வளங்களாக எடுத்துக்காட்டுகிறது, தற்போதைய தலைமுறையில் நாடு கடந்து அனைத்து வளங்களையும் ஒருவரே உரிமை கொண்டாட முடியாது, இதனால் பல அரசுகள் மற்றும் புதிய நிறுவனங்கள் கூட்டாக பங்கிட முடியும் என்று வாதிடுகிறது UN உள்ளிட்ட அமெரிக்க இஸ்ரேல் கூட்டு கொள்ளைக்கு பாலஸ்தீன் மீதான போர்.



இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்