தென்னமெரிக்க நாடான பெருவில் ஆட்சி கவிழ்ப்பு- சிபி

 புரட்சியின் மூலம் இந்த முதலாளித்துவப் பாராளுமன்ற ஆட்சியை அகற்றிவிட்டு சோவியத்து வடிவத்திலான பாட்டாளிகளின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்றே கம்யூனிஸ்டுகளுக்கு மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டினார்கள். இந்த அடிப்படையிலேயே ரஷ்யாவில் ஒரு புரட்சியின் மூலம் முதலாளித்துவ ஆட்சி அகற்றப்பட்டு சோசலிச சோவியத்து ஆட்சி உருவாக்கப்பட்டது இரண்டாம் உலகப்போருக்கு பின் உலகில் பல நாடுகளில் புரட்சியின் மூலமே சோசலிசம் மலர்ந்தது. குருசேவின் நவீன திருத்தல்வாதம் உலக கம்யூனிச கட்சிகளை திருத்தல்வாத கட்சியாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை துறந்தோடியதன் மூலம் முதலாளித்துவ "சமாதான முறையில்" பாராளுமன்ற வழியில் பல நாடுகளில் அரங்கேறி தோல்வியை தழுவிக் கொண்டுள்ளது. அதில் ஒரு அண்மை நிகழ்வு தென்னமெரிக்க நாடான பெருவில், கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்று ‘சுதந்திர பெரு’ என்ற ‘இடதுசாரி கட்சி’யைச் சேர்ந்த பெட்ரோ கேஸ்டிலோ அதிபரானார். இவரது வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிசத் திரிபுவாதிகள் பெரிதும் போற்றி வரவேற்றனர். தற்போது பெரு அதிபர் பெட்ரோவின் துரோக ஆட்சியும் அவருக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பும்... நிரூபித்துள்ளது நமது ஆசான்களின் கோட்பாடுகளை ஏற்காமையே எனலாம்.

பெட்ரோ கேஸ்டிலோ அதிபரான 18 மாதங்களில் அவர் மீதும் அவரது அரசாங்க அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டின்கீழ் பெட்ரோவை பதவிநீக்கம் செய்ய காங்கிரஸ் இரண்டு முறை முயற்சித்தது. ஆனால், பெரும்பான்மை வாக்கு கிடைக்காததால் அவரது பதவி நீக்கம் சற்று தள்ளிப்போனது.

இம்முறை ஆட்சியைத் தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கூடுவதற்கு முன்னரே தொலைக் காட்சி ஊடகத்தில் காட்சியளித்த பெட்ரோ, “அவசரகால சட்டத்தைக் கொண்டு காங்கிரசைக் கலைத்துவிட்டு, புதிய தேர்தலை நடத்தப் போவதாக” அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், “அரசாங்கத்திற்கு எதிராக பெட்ரோ கேஸ்டிலோ சதி செய்ததாக” குற்றஞ்சாட்டி அதிபர் பதவியில் இருந்து நீக்கியதோடு, கைது செய்து சிறையிலும் அடைக்க உத்தரவிட்டது. மேலும், ‘நிரந்தர தார்மீக திறமையற்றவர்’ என்ற அடிப்படையில் காங்கிரஸில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 130-க்கு 101 என்று பெட்ரோவுக்கு எதிராக வாக்குப் பதிவானது.

அண்டை நாடுகளின் தூதரகத்தை அடைய முயன்றபோது அவரது பாதுகாப்புஅதிகாரிகளாலேயே கைது செய்யப்பட்டார். பெரு இராணுவம், போலீசுதுறை மட்டுமல்ல துணை அதிபர் உள்ளிட்ட பெட்ரோவின் சொந்த அமைச்சரவை உறுப்பினர்களே பெட்ரோவுக்கு எதிரணியில் நின்றனர்.

மக்கள் படும் துன்ப துயரங்களையும் மக்களிடையே நிலவிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து வாக்குகளாக மாற்றி வெற்றிப் பெற்று அதிபரான பெட்ரோ, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத் தியதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமே சரணாகதி அடைத்திருப்பது அப்பட்டமான பிழைப்புவாதம், பச்சை துரோகமாகும்.

தங்களை ஆண்ட வலதுசாரிகளின் ஆட்சியில் அனுபவித்த துன்பதுயரங்கள் பெட்ரோ ஆட்சியிலாவது மாறாதா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். பெட்ரோ மக்களின் அந்த எதிர்பார்ப்புக்கு துரோகமிழைத்தாலும், ஏகாதிபத்திய அடிவருடி வலதுசாரிகளுக்கு பெட்ரோவை கைது செய்ய அருகதை இல்லை என்பதே மக்கள் போராட்டங்களின் வெளிப்பாடாகும். மக்களின் இந்த நம்பிக்கைக்கு சிறிதும் அருகதையில்லா தவர்தான் இந்த பெட்ரோ.

ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட மக்களை இப்போலி இளஞ்சிவப்பு பாதைக்கு வெளியே புரட்சிப்பாதையில் அணிதிரட்ட, மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிக்கரக் கட்சியைக் கட்டியமைப்பதுதான் பெரு மக்களுக்கு மட்டுமல்ல ‘இளஞ்சிவப்பு அலை’ மாயையில் கட்டுண்டு கிடக்கும் தென்னமெரிக்க நாடுகளின் மக்களுக்கு அவசர அவசிய தேவையாக உள்ளது. செய்தி ஆதாரம் வினவு தளத்திலிருந்து.

மீண்டும் ஒருமுறை பாராளுமன்றம் என்ற மாயையில் சிக்கி தவிக்கும் திருத்தல்வாதிகளுக்கு உரிய பாடமே பெருவில் நடந்த நிகழ்வு. இதை புரிந்துக் கொள்ள நமது ஆசான் லெனினிடமே செல்வோம்.

முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் முதன்மையான உறுப்பு ராணுவமே ஒழிய பாராளுமன்றம் அல்ல என்பதனை இரண்டாம் உலகப் போருக்கு பின் நடைபெற்ற நிகழ்வுகள் நமக்கு மீண்டும் மீண்டும் நிரூபித்து உள்ளது. பாராளுமன்றம் என்பது முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு அலங்கார சின்னமாக ஒரு மூடுதிரையாக இருந்து வருகிறது பாராளுமன்றத்தை ஏற்றுக் கொள்வதும் அல்லது கைவிடுவதும் அல்லது பாராளுமன்றத்துக்கு அதிகமாகவோ குறைவாகவோ அதிகாரம் அளிப்பதும் வெவ்வேறு விதமான தேர்தல் முறையைக்கைகொள்வது ஆகிய இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்பது முதலாளித்துவ ஆட்சியின் தேவைக்கும் நலன்களுக்கும் ஏற்றார்போல் தான் எப்போதும் தீர்மானிக்கப் படுகிறது முதலாளிகள் ராணுவ அதிகார வர்க்க நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வரை தேர்தல் மூலம் பாட்டாளிகள் பாராளுமன்றத்தில் நிலையான பெரும் பான்மை பெறுவது என்பது சாத்தியமற்றது அல்லது அத்தகைய நிலையான பெரும்பான்மை நம்பப்பட முடியாது பாராளுமன்ற பாதை வழியாக சோசலிசத்தை அடைவது என்பது அறவே சாத்தியம் இல்லாததும் வெறும் ஏமாற்றுப் பேச்சும் ஆகும் லெனின் கூறினார் , "புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளு மன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்த லின் போதும் பாராளுமன்றத்தில் கட்சி களுக்கு இடையில் நடக்கும் போராட்டங் களின் போதும் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளு மன்ற போராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டதாகவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராக முதலாளி வர்க்கதினத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" (லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).

லெனின் மேலும் சொல்லுகிறார் "ஒவ்வொரு ஜனநாயக கோரிக்கையும் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களை பொறுத்த வரையில் சோசலிசத்தின் மிக உயர்ந்த நலன்களுக்கு கீழ்ப்பட்டதே" மேலும் அரசும் புரட்சி என்ற நூலில் ஏங்கெல்சை மேற்கோள் காட்டி எழுதுகிறார்,"அன்றாட தற்காலிக நலன்களுக்கான மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை மறந்து விடுவதும் பின் விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அப்போதைய வெற்றிக்காக முயற்சிப்பதும் போராடுவதும் நிகழ்காலத் திற்காக இயக்கத்தின் எதிர்காலத்தை தியாகம் செய்வதும் சந்தர்ப்பவாதம் ஆகும் அதுவும் அபயகரமான சந்தர்ப்பவாதமாகும்". "குறிப்பாக இந்த அடிப்படையில் தான் சீர்திருத்தத்தை புகழ்வது ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு அடிபணிவது புரட்சியை பலிகொடுப்பது , கைவிடுவது ஆகியவற்றிர் காக காவுட்ஸ்கியை விமர்சனம் செய்தார் லெனின்". (லெனின் பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடு காலி காவுட்ஸ்கியும் தேர்வு நூல் தொகுதி 2 பக்கம் 95 ).

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்