இலக்கு இணைய இதழ்கள் ஒரே இடத்தில்

 


இலக்கு இணைய இதழ் 01 ஜீன் 2022 அன்று தொடங்கினோம். இதுவரை  அய்ந்து இணைய இதழ்களை வெளியிட்டுள்ளோம். 

இலக்கு இணைய இதழின்  நோக்கம்:- 

இதில் முதற்கண் புரட்சிகர அறிவு ஜீவிகளோடு விவாதிப்பதும்,சரியான மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்க்கும் வகையில் புரிய வைப்பதுமேயாகும்.

"இலக்கு” இதழில் தங்களது விமர்சனங்களை விவாதங்களை மார்க்சிய- லெனினிய முறையில் வைக்கும் படி அழைக்கும் அதே நேரத்தில் தங்களின் நிலையை  சரிப்படுத்துவதோடு மற்ற தோழர்களின் அறிவு மேலும் செழுமைப்படுத்தப் படுவதுடன் புரட்சிகர சக்திகளின் மீதான விமர்சனத்தின் அவசியம் தவறுகளில்  இருந்து விடுபட்டு மீண்டும் தவறுகள் வராத முறையில் இருப்பதற்காகவே  ஆகும்அதாவது “மருத்துவர் ஒருவர் நோய்க்கு சிகிச்சை அளித்தல் என்பது;  நோயாளியைக் காப்பாற்றுவதே அன்றி அவர் இறப்பதற்கு சிகிச்சை அளிப்பதல்ல”.

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல்பொருளாதாரம்தத்துவம் ஆகிய துறைகளில்  மார்க்சிய லெனினிய வாதிகளை வளர்க்க முயற்சிப்போம்சமூக நிகழ்வுகளையும் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் விவாதித்து சரியான வழிமுறையை  முன்வைத்து பேசுவோம்.

விவாதிக்க வாருங்கள் சரியான கோணத்தில் நீங்களும் வாதித்தால் எமது தவறுகளை களைந்து சரியானவற்றை புரிந்துக் கொள்ள உதவும் என்பதே எமது வாதம் தோழர்களே.

விமர்சனம் என்பது நோயை குணப்படுத்துவதாக இருக்கவேண்டுமே ஒழிய நோயாளியை கொள்வதாக இருக்கக்கூடாது என்றும் விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் கட்சியில் உள்ள தவறுகளை களைய போராட வேண்டும் என்றும் அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால் எவ்வளவு தூரம் உணரப்பட்டுள்ளது ? தவறிழைக்கும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் தவறுகளை திருத்திக்கொள்ள உதவி செய்வதில் முதன்மையானது,  பெரும் தவறுகளை இழைத்தபின்னும் வழிகாட்டலை ஏற்க மறுத்து திருத்திக் கொள்ளாதவர்கள் விஷயத்திலேயே அம்பலப்படுத்தும் விதத்திலான போராட்ட முறை கைக்கொள்ள வேண்டும் இத்தகைய பொறுமையின்றி எடுத்த எடுப்பிலே ஒருவரை "சந்தர்ப்பவாதி திரிப்பு வாதி எதிர் புரட்சியாளர்" என முத்திரை குத்தி விடுவதும் போராட அறைகூவல் விடுவதும் குறுங்குழுவாத போக்கின் விளைவேயாகும் . விமர்சனம் சுய விமர்சனம்   மூலம் மாற்றி அமைப்பதற்க்கான வழிமுறை க்கு  எதிரானதாகும் .

விமர்சனம் சுயவிமர்சனம் என்பது என்ன? நாம் வழக்கமாக விமர்சனம் சுய விமர்சனம் என்று கருதி செய்வது தவறுகளை சுட்டிக் காட்டுவதும் தவறுகளை ஏற்றுக் கொள்வது மாக உள்ளன உண்மையில் விமர்சனம் என்பது ஒரு குறிப்பிட்ட தவறு ஏன் நிகழ்ந்தது அதற்கான தத்துவார்த்த வர்க்க வர்க்க பின்னனி என்ன அதைக் களைவதற்கான சிந்தனை செயல்முறை என்ன என்பதை உள்ளடக்கி ஆக்க பூர்வமானதாக இருக்க வேண்டும் .

ஒரு குறிப்பிட்ட தவறை எதிர்த்துப் போரிடும் போது அத்தகைய தவறு வருங்காலத்தில் நிகழாமல் அல்லது பாதிக்காமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நாம் எவ்வாறு நமது வேலை முறையை மாற்றிக் கொள்வது என்பதும் சேர்த்து உணரப்பட வேண்டும். ஆக பாட்டாளி வர்க்கம் பிறரை இடையறாது மாற்றியமைத்துக் கொண்டே தன்னையும் மாற்றி அமைத்துக் கொள்கிறது .விமர்சனம் சுயவிமர்சனம் இரண்டில் ஒவ்வொரு நேரங்களில் ஒவ்வொன்றும் முதன்மையாக இருக்கும் எனினும் கட்சி என்ற விதத்தில் புரட்சியின் அக சக்தி என்ற விதத்தில் சுயவிமர்சனம் முதன்மையானது .இதுவே மாற்றி அமைப்பது பற்றிய உட்கட்சி இயங்கியல் அணுகுமுறை. 

ஆக இங்கு உள்ள நிலையைப் பற்றி இயங்கியல் அணுகுமுறையை பார்ப்போம்.

1).கட்சியின் உள் முரண்பாடுகளும் மாற்றுக்கருத்துக்கள் அல்லது வழிகளும் நிலவும் ; அவை ஒன்றுபட்டு நிற்கிற நேரத்தில் தம்முள் போராடிக் கொண்டிக்கொண்டுமிருக்கும் என்ற பொருள் முதல்வாத இயங்கியல் கண்ணோட்டத்தில் அங்கீகரிக்க மறுக்கின்ற தூய கட்சி வாதம் பிளவுகளும் அழிவுவாதத்திற்கும் வழிவகுக்கின்றது.

2) . ஒரு அரசியல் வழி அல்லது அமைப்பு வழியில் நின்று கொண்டு தவறான சிந்தனை மற்றும் செயல்முறைகளை எதிர்த்து போரிடுவதற்கு உட்படுத்தி தனிநபரின் நல்ல அல்லது தவறான பண்புகளை அணுகுவதற்கும் பதில் தனிநபரின் பண்புகளில் இருந்து உட்கட்சிப் போராட்டத்தை தொடங்குவது கோஷ்டி வாதத்தையும் அதிகார வர்க்கப் போக்கையும் தோற்றுவிக்கிறது.

3). சுய விமர்சனம், விமர்சனம் மூலம் தன்னைத் திருத்திக் கொண்டு பிறரையும் திருத்துவதன் மூலம் கட்சியை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்ற நிகழ்ச்சி போக்கே கட்சியின் வளர்ச்சி விதியாகும் . 

மேல் கூறிய மூன்று விதிகளும் எந்த ஒரு பொருள் அல்லது நிகழ்வின் எந்த ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்திலும் நிலவுகின்ற முரண்பாட்டின் இருத்தல் கையாளுதல் தீர்வு என்ற மூன்று நிலைகள் பற்றி வையாகும் .

இத்தகைய பாட்டாளி வர்க்க அரசியல் மற்றும் அமைப்பு வழியில்லாததால் தான் பல்வேறு மாலெ குழுகள் பல துண்டுகளாக உடைந்தது அதேபோல இத்தகைய தவறான போக்கை வெவ்வேறு அளவில் எதிர்த்தாலும் கூட சரியான பாட்டாளிவர்க்க வழியில் போராட தெரியாததுதான் பிளவுகளை தடுத்து நிறுத்த முடியவில்லை .

ஐக்கியம் ஐக்கியம்  என உரக்கக் கூறிக் கொண்டே தனது  தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் பிற குழுக்களை ஜீரணிக்கும் முயற்சிகளாக அமைந்தன. 

உட்கட்சி முரண்பாடுகளை எவ்வாறு இயங்கியல் நோக்கில் தீர்ப்பது என்ற விஷயம் இவ்வாறு உள்ளது. கட்சியின் இயங்கியல் பார்வை பற்றிப் பேசும்போது இதே அளவு முக்கியத்துவம் உடைய வேறு இரு விஷயங்கள் உள்ளன. ஒன்று கட்சிக்கு வெளியில் நிகழும் மாற்றங்கள் பற்றியது மற்றது கட்சிக்குள் நிகழும் மாற்றங்கள் பற்றியது .

புறவுலகானது மனிதர்களது விருப்பத்திற்கப்பாற்பட்டு மாறிக்கொண்டே இருக்கிறது. அடிப்படை சமூக மாற்றமானது புரட்சிக்கு தலைமை தாங்க முன்வரும் கட்சி அடிப்படை சமூக அமைப்பு மாறாமல் இருக்கும் போது சூழ்நிலைகள் மாறி வருவதை கணக்கில் எடுத்துக்கொண்டு அவ்வப்போதைய குறிப்பான கடமையை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும் பொருளானது எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கின்றது என்ற விதத்தில் புரிந்து கொள்வதே சரியான பொருள் முதல் வாத கண்ணோட்டமாகும். 

என்றால் இவர்கள் பார்வையற்ற மாறா நிலையில் இருந்து பொருளை பரிசீலிக்கும் போது நாம் புற பொருளையும் சரியாக புரிந்து கொள்வதுடன் புறவய விதிகளிருந்தல்லாமல் நமது அகவய விருப்பங்களில் இருந்து கட்சியை கட்டுவது முதல் கடமைகளை வகுத்துக் கொள்வது வரை நடக்கின்றன இது தத்துவத் துறையில் கருத்துமுதல் வாதத்திற்கு இடம் கொடுக்கிறது .

கட்சி ஒன்றுபடுதல் சரியான அணுகுமுறை பிரிவிற்கான காரணங்கள். (சிறப்பு கூட்ட அறிக்கை 1988. நூல் பக்கம் 46-48).

கடந்த கால படிப்பினைகள் என்ன சொல்கின்றது  யுத்த தந்திர கோட்பாடுகளையும் செயல் தந்திர கோட்பாடுகளையும் கிரகித்து புரட்சியாளர்கள் மத்தியில் சிந்தனை ரீதியாக ஊட்டவில்லை, இதனால் புரட்சியாளர்கள் தன்னியல்பு வகைப்பட்ட சிந்தனையிலிருந்து கோட்பாட்டு ரீதியில் முறித்துக் கொள்ளவில்லை . (அதாவது முன்னர் இருந்த கட்சியின் சித்தாந்தத்தை சொல்லுகிறார்) . பின்னர் தலைமை பொருளாதார வாதத்திற்கு மாற்றாக பயங்கரவாதத்தையும் இடது சகாசவாதத்தையும்  ஏற்படுத்தியது முடிந்தது .தத்துவ அரசியல் பணிகளின் முக்கியத்துவத்தை குறைத்து இயக்கத்தில் சித்தாந்த ஒற்றுமையை பலவீனப்படுத்தி விடுகிறது.

‌தன்னியல்பான நடைமுறைக்கு ஏற்ப அமைப்பு துறையில் கற்றுக்குட்டி தனமும் அதிகாரவர்க்க மனப்பாங்கும் இடம்பெற்றன .

‌ஆக தத்துவ பணியாற்றிய விதம் மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமை, இடதுசாரி சாகாச வாதத்தில் தன் இயல்பு வழி  இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்சி கட்டுதல். இக்காரணங்களால் புரட்சியாளர்களை ஒன்றுபடுத்த இயலாததுடன் சிதறுண்ட இயக்கத்தையும் உருவாக்கியது. எனவே தவறான சித்தாந்தங்களும் தாராளமாக கட்சியில் மேலிருந்து கீழ் வரை நுழைகின்றன. தவறான சித்தாந்தங்களை எதிர்த்து சரியான பாட்டாளி வர்க்க சித்தாந்தங்களுக்குகான போராட்டம் இல்லை. எனவே இந்திய பாட்டாளி வர்க்கம் தனது சித்தாந்த தலைமையை உருவாக்கி கொள்ளவோ வளர்த்துக் கொள்ளவோ இல்லை  . (அதே நூல் பாரா 5, பக்கம் 47). 

‌பிளவுபட்ட குழுக்கள் தன்னியல்பாகவே வெவ்வேறு நடைமுறைகளில் வகுத்துக் கொண்டு தனித்தனியாக பயணிக்கின்றன. சில குழுக்கள் தத்துவத் துறையில் கவனம் செலுத்தி வேலை திட்டத்தில் சில மாற்றங்கள் அடைகின்றன சில மறு சேர்க்கைகளும் பிளவுகளும் நிகழ்கின்றன.

‌சர்வதேச அளவில் சீன ரஷ்ய திரிபுவாதம் மேலோங்கி முதலாளித்துவ மீட்சி யானது புரட்சிகர கட்சியில் பல்வேறு புதிய முரண்பாடுகளை தோற்றிவைத்தது. குழப்பங்கள் விலகள்களும் பிளவுகளும் எங்கும் பாதிக்கப்பட்டுள்ளன. 

‌இவை இந்திய மார்க்சிய லெனினிய குழுக்களை பிளவுபடுத்தி உள்ளது மேலும் சில குழுக்கள் மார்க்சிய நிலைக்கு அப்பால் தள்ளி உள்ளது புரட்சிக்கு எதிர்நிலையிலும் போயுள்ளது.  

ஒற்றுமைக்கு முதல்படி

‌குறுங்குழு வாதத்தைத் தூக்கி எறியாமல்  ஒற்றுமைக்கு சாத்தியமல்ல. அதற்காக குழுக்களை கலைத்து விடுவதனால் குறுங்குழு வாதம் ஒழிந்து விடாது .

‌சர்வதேசம் உள்ளிட்டு தத்துவத் துறை அரசியல் துறை அமைப்புகள் ஆகிய மூன்று துறைகளிலும் தெளிவான எல்லைக்கோட்டை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

‌திரிப்பு வாதமே முதன்மையாக எதிர்க்கப்பட வேண்டும் .இடது தீவிரவாதம் வரட்டு வாதம் அனுபவவாதம் களையப்பட வேண்டும். 

இந்தியாவில் பாட்டாளி வர்க்க கட்சி என எதுவும் இன்றி பாட்டாளிவர்க்க  புரட்சியாளர்கள் ஒன்று அல்லது பல துறைகளிலும் வேறுபட்டு பல்வேறு மையங்களில் தனித்தனியாக அமைப்புகளாக இயங்கி வருவது எதார்த்தம்.


இலக்கு இணைய இதழ் கட்டுரைகளும் தொடர்களாகவோ அல்லது ஒரே இதழோடோ முடிந்து விட்டாலும் இந்த பகுதிகளை தொகுத்து PDF வடிவில் இங்கே இதே பகுதியில் வெளியிட உத்தேசித்துள்ளோம். படிக்க ஏதுவாக இருக்கும் என்பதனால். இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் பகுதியையும், மார்க்சியம் என்றால் என்ன? (கேள்வி – பதில் வடிவில்) கட்டுரையையும் தோழர் அ.கா.ஈஸ்வரன் எழுதிக் கொண்டுள்ளார். அவை முடிந்த பின் அவரின் அனுமதியோடு வெளியிடுவோம். 

இதுவரை வெளியிட்ட "இலக்கு இணைய இதழ்கள்" அனைத்தும் ஓர்யிடத்தில் தொழர்கள் கீழ்காணும் இதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து வாசித்து கருத்துரையுங்கள். எங்களின் பணி சரியானவைதான இன்னும் செழுமை படுத்த வேண்டுமா என்பதனை உங்களின் கருத்துகள் மூலம் அறிந்துக் கொள்வதோடு சரியான வற்றை கொண்டு வர முயற்சிப்போம் தோழர்களே.

இன்றைய உலகமயமாதல் சூழலிலே மார்க்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக்கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.

இலக்கு இணைய இதழ்-1

இலக்கு இணைய இதழ் -2

இலக்கு இணைய இதழ் -3

இலக்கு இணைய இதழ் - 4

இலக்கு இணைய இதழ் - 5

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்