முதலாளித்துவதின் மகிமை கடவுள்களின் இருப்பும் ஆத்திகம் நாத்திகம்

 முதலாளித்துவத்தில் எல்லாம் வணிக்கம் சார்ந்தவையே.

மக்களிடையே உள்ள பழைமைகளையும் அதனை புதுமைபடுத்தி தன் தேவைகேற்ப உருமாற்றி கொள்ளும் முதலாளித்துவம் பழைமையை கட்டிக்காத்துக் கொண்டே புதுமைகளை விற்பனை செய்யும் யுத்திதான் ஆளும் வர்க்கமாய் அமைந்துள்ள அமைப்பின் சிறபம்சம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் அத்தியாத்திலிருந்தே, "இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப் படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்". மேலும்," சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது".
என்று தெளிவுப்படுத்தும் ஆசான்கள்.
"இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது....ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்து விட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது". இதன் ஆழத்தை நாம் புரிந்துக் கொண்டால் நாம் காணும் பல பொய்மைகள் அறுத்தெறியப்படும்.
இன்று இங்கே மத கருத்துகள் நல்ல விற்பனை பொருளாக இருப்பதால் அதனை விற்பனை செய்த மதவாதிகள் நல்ல லாபம் குவித்த கூட்டம் இன்று ஆட்சி கட்டிலிலும் அமர்ந்து விட்டனர். இந்த மதம் பற்றிய மார்க்சிய புரிதல் இன்மையால் பலர் ஆளும் வர்க்க கூட்டத்திடம் அடிமையாகிவிட்டனர் ஆம் பகுத்தறிவாதம் என்ற ஆளும் வர்க்க கருத்தியலிடம் ஆக மார்க்சியவாதிகளுக்கு தெளிவான கண்ணோட்டம் வேண்டும்

“இன்றைய சமுதாயம் மாறாத கல் உருவம் அன்று மாற்றத்திற்கு உரிய உயிர் அமைப்பே. அது இடைவிடாமல் மாறிக்கொண்டிருக்கிறது”. (மூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்னு பக்கம் 29) மற்றும், “முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமன்றி அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலைமையினாலும் அவதிப்படுகிறோம் நவீன கால தீமைகளோடு கூடவே காலத்துக்கு ஒவ்வாத சமூக அரசியல் முறைகளை தவிர்க்க முடியாதபடி உடன்கொணரும் பழமைப்பட்ட உற்பத்தி முறைகளின் முனைப்பொழிந்த மீத மிச்சங்களிலிருந்து மரபுரிமையாய் வந்த கேடுகளின் முழு வரிசையும் நம்மை வருத்துகிறது வாழ்பவர் வாழ்பவற்றால் மட்டும் இன்றி மாண்டவற்றாலும் அவதிப்படுகிறோம். மாண்டவன் வாழ்பவனை ஆட்டி வைக்கிறான்”. (மூலதனம் மேல் காணும் நூல் பக்கம் 26).

இந்த வாக்கியத்தில் மார்க்ஸ் என்ற சமூக விஞ்ஞானி மனித சமூகம் தோன்றியதிலிருந்து ஒவ்வொரு அசைவிலும் அவைமாறியும் வளர்ந்தும் முன்னேறிக் கொண்டுள்ளதை விளக்கியுள்ளார். இதனை புரிந்துக் கொள்ள மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞான அறிவும் மார்க்சியம் லெனினியமாக வளர்ந்த காலகட்டத்தின் அதன் தத்துவ அரசியல் பொருளாதார நிலைமைகளை அறிந்துக் கொள்ளும் அறிவு வளர்ச்சியும் மார்க்சியவாதிகளுக்கு அவசியம் அன்றோ?

சிலர் வர்க்க சமூகத்தின் சில பிரச்சினகளை மட்டுமே முதன்மைபடுத்தி வர்க்க சமூகத்தின் முதன்மையான நோக்கம் சுரண்டலில்தான் ஒளிந்துள்ளது என்பதனை மூடிமறைக்க செய்கின்றனர்.

சிலவகையான எதிர்நிலைகளை முதன்மைபடுத்தி சமூக மாற்றத்தை புரிந்துக் கொள்ளாமல் மாறாநிலையில் பேசிக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக கடவுள் மறுப்பு பேசுவோரும் கடவுளை ஏற்கும் ஆன்மீகவாதிகளும் மாறாநிலைவாதிகளே உள்ளனர்.

இயற்கை எதிர்த்த போராட்டத்தில் மனிதனின் இயலாநிலையில் குறிபிட்ட காலக்கட்டத்தில் தோன்றிய பல்வேறு கற்பனை கற்பிதங்கள் அந்த சமூக சூழலிற்கானவையே. இன்றைய சமூகத்தில் அவை பொறுத்தமற்றவை அவைகளின் நேரடி பயன்பாடு என்பது அறியாமையின் வெளிப்பாடே அதற்கு சமுக விஞ்ஞான அறிவு வேண்டும். அவை இன்றி அறியாமையில் அன்றைய சமூகத்தை அப்படியே பிரதிபலிக்க நினைக்கின்றனர் இன்றைய வளர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் புதியவகையில் பழைய கடவுள்களை புதுபிக்கனர். அவை சிலருக்கு நல்ல பணம் கொழிக்கும் தொழில். நீங்கள் கணக்கிட்டால் இந்த கணேஷ் பூஜையின் பின் ஒளிந்துள்ள பல கோடி வணிபம் மற்றும் அரசியல் விளையாட்டு. அதேபோல் கடவுளை எதிர்பதன் பெயரில் காலதிற்கும் களத்திற்கும் அப்பாற்பட்ட கடவுளை எதிர்பதன் பெயரில் அதேபணியை செய்கின்றனர். கடவுளின் தோற்றம் அதன் தேவை அதன் இன்றைய இருப்பு என்ன என்பதனை அறியாத பகுத்தறிவாதிகள். கடவுள் இல்லை என்றுக் கூறிக் கொண்டு அதனை உயிர்பிப்பதில் பங்காற்றுகின்றனர் என்பேன்.

இந்த இருபிரிவினரும் சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டலை தவறியும் பேசுவதில்லை. ஒருபிரிவினர் கடவுள் காப்பாற்றுபவராகவும் மற்றொருபிரிவினர் கடவுளை எதிர்ப்பின்பெயரில் பகுத்தறிவாதம் பேசினாலும் சமுக பிரச்சினையை மூடிமறைத்து வருகின்றனர்.

மக்களின் ஏற்றதாழ்வும் ஏழ்மையும், பசி, பட்டினியும் இன்னும் பல்வேறு கொடுமைகளுக்கு அந்த கடவுளோ அறியாமையோ காரணம் அல்ல வாழும் கடவுள்களான அரசும் அதன் பரிவாரங்கள்தான் என்பதனை மூடிமறைத்து கடவுள் பின்னர் அணி திரட்டுவோரும் கடவுள் எதிர்போரும் தாங்கள் கைகோர்த்து இந்த அரசில் அங்கம் வைப்பதும் சுகபோகமாக வாழவும் இந்த அமைப்பு அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றனர் தாங்கள் வாழவழியமைத்துக் கொடுத்த இந்த அமைப்புமுறைக்கு. ஆக இவர்களின் பணியை கவனித்தில் கொள்ளுங்கள்.

வர்க்க சமூகத்தில் வர்க்கம் சார எழுத்தும் பேச்சும் செயலும் எவையுமே இல்லை! நம் சமூகத்தில் இடதுசாரி என்பவர்கள் எந்தவகையான கண்ணோட்டத்தில் உள்ளனர் என்பதிலிருந்தே அவர்களின் வர்க்க நலன் புரிந்துக் கொள்ள முடியும்!

இங்குள்ள பலரிடம் காணப்படும் மார்க்சியம் அல்லாத போக்குகளையும், அவர்கள் மார்க்சியத்திலிருந்து விலகிச் செல்வதையும் புரிந்துக் கொள்ள, அவர்களின் செயல்பாடுகள் நமக்கு பிரதிபலிக்கின்றன.

உங்கள் கருத்துகள் எதிர்பார்க்கிறேன் தோழர்களே.

Ganesh Chaturthi 2025: Muhurat, puja timings, significance, visarjan and everything you need to know

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்