பல்வேறு தோழர்களின் முகநூலில் பதியப்பட்டவையே கீழே
பணி நிரந்தரம் என்பதை திருமாவளவன் அவருடைய கணோட்டத்திலிருந்து விளக்கம் கொடுத்துவிட்டு, பணி நிரந்தரம் என்பதை ஒரு குறிப்பிட்ட பணியில் நிரந்தரமாக ஒருவர் ஈடுபட வேண்டும் என்று பார்க்கிறார். ஆகவே குப்பை அள்ளும் தொழிலையே ஒருவர் நிரந்தராகச் செய்ய வேண்டும் என்று பார்க்கிறார். குப்பை அள்ளும் தொழிலில் ஈடுபடும் ஒரு தொழிலாளிக்கு வேறு ஒரு தொழில் தெரிந்திருக்குமானால் அவருக்கு தெரிந்த அந்தத் தொழிலுக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்பதை அவரால் முன்வைக்க முடியவில்லையே ஏன்? பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வு கொடுக்கும் கண்ணோ்டம் அவரிடம் இல்லை, அதனால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு சரியான விஞ்ஞானப்பூர்வமான தீர்வை அவரால் கொடுக்க முடியவில்லை. சமூகத்தில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ வர்க்கங்கள் என்ன தீர்வை முன்வைக்கிறார்களோ அதே தீர்வைத்தான் ஆட்சியிலுள்ளவர்களும் அடுத்து ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிசெய்யும் அரசியல் கட்சிகளும் திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளும் முன்வைக்கிறார்கள். ஆனால் ஒரு சிறந்த மார்க்சியவாதியால் மட்டுமே விஞ்ஞானப்பூர்வமான தீர்வை கொடுக்க முடியும். ஒவ்வொரு தொழிலையும் விஞ்ஞானப்பூர்வமாக மாற்றுவதும் தொழில்களுக்கு இடையிலான இழிவு தன்மையை அகற்றுவதும் உடனடியாகச் செய்யவேண்டியது அவசியமாக உள்ளது. எனினும் இது நிரந்தரமானதல்ல. மேலும் விஞ்ஞானப்பூர்வமாக வளர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையின் போதும் புதிய புதிய வழிமுறைகள் நாம் பின்பற்ற வேண்டும். இதனை ஓர் அரசு மூலம்தான் செய்ய முடியும். இதனை சாதித்த பெருமை ரஷ்ய சோவியத்து சோசலிச அரசுக்கு உண்டு. இத்தகைய சூழலில் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு அரசு வேலை கொடுத்ததை ஒழித்துவிட்டு கார்ப்பரேட்டுகள்தான் வேலைகொடுக்கும் என்ற அயோக்கியத்தனமான கொள்கையை எதிர்க்காமல் பணி நிரந்தரம் என்று பேசி பிரச்சனையின் அடிப்படையை மூடிமறைத்துவிட்டு திருமாவளவன் திசைதிருப்புகிறார். நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் வேலை ஏற்படுத்திக்கொடுப்பது அரசின் கடமையாகும். அதனை செயல்படுத்தாத எந்த அரசும் மக்களுக்கான அரசு அல்ல. மக்களுக்கான கடமை செய்யாத அரசு அது எதுவாக இருந்தாலும் மக்கள் அதனை தூக்கியெறிய வேண்டும். மக்களுக்கான கடமையை மக்களின் விருப்பதிலிருந்து செய்யக்கூடிய அரசுதான் இதுபோன்ற பிரச்சனைகளை விஞ்ஞானப்பூர்வமாகத் தீர்க்கும் அத்தகைய அரசு எப்படி இருக்கும் சிந்தியுங்கள், விவாதிங்கள் முடிவுக்கு வாருங்கள் தோழர்களே.(தோழர் ரவீந்திரன் பதிவே)
+++++++++++++++++++++++++
கடுகளவு மூளை இருப்பவன் கூட இவ்வளவு மட்டமான ஒரு கருத்தை முன்னிறுத்த மாட்டான். இந்த கேவலமான கருத்திற்கு திருமாவளவன் அம்பேத்காரை எல்லாம் துணைக்கு அழைப்பது தான் உச்சபட்ச நகைப்புக்குரியது.
திருப்பூர் குணா (முகநூலில்)
தோழர் மாதவ் (முகநூலில்)
ஆக ஆளும் வர்க்கதிற்கு அணி சேர்பதுதான் இவரின் பணியாக உள்ளது உழைக்கும் வர்க்கதின் தேவைக்கானவர் அல்ல